“எரிபொருளுக்குக்கூட மீன்பிடிக்க முடியா நிலை.. இலங்கை கடற்படைதான் காரணம்”- மீனவர்கள் வேதனை

ராமேஸ்வரத்தில் நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடிப்பதாக கரை திரும்பிய தமிழக மீன்பிடி தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும் – தனுஷ்கோடிக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மூன்று ரோந்து கப்பல்களில் அங்கு சென்ற இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட … Read more

கள்ள நோட்டு வீடியோவை காண்பித்து ஆசைக்காட்டிய கும்பல்: கைது செய்த காவல்துறை

கள்ள நோட்டு வீடியோவை காண்பித்து ஆசைக்காட்டிய கும்பல்: கைது செய்த காவல்துறை Source link

தருமபுரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பென்னாகரம் வட்டம் நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவர் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (வியாழன்) காலை எதிர்பாராத விதமாக குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் குடோனில் இருந்த பட்டாசுகள் பலத்த ஓசை மற்றும் அதிர்வுடன் வெடித்துச் சிதறின. இதில் குடோன் முழுமையாக சேதமடைந்து தரைமட்டமானது. … Read more

காட்டுத்தீ பரவலை தடுக்க வனப்பகுதியில் 270 கி.மீ தூரம் தீத்தடுப்பு கோடுகள்: மாவட்ட வனத்துறை ஏற்பாடு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வனப்பகுதியில், காட்டுத்தீ பரவலை தடுக்க, வனத்துறை சார்பில் 270 கி.மீ தூரம் தீத்தடுப்பு கோடுகள் வரையப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடும்வெப்பம் வீசி வருகிறது. வனப்பகுதியான கொல்லிமலை, போதமலையில் வன கிராமங்கள் அதிகம் உள்ளது. மாவட்டத்தில் 500 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பளவு உள்ளது. குறிப்பாக கொல்லிமலையில் வனப்பகுதிகள் அதிகம் இருக்கிறது. இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதை … Read more

இபிஎஸ் படம் எரிப்பு விவகாரம்: இரவில் நீக்கப்பட்டு அதிகாலையில் சேர்க்கப்பட்ட பாஜக நிர்வாகி!

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரித்த பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நேற்று இரவு தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விளக்கு அருகே பா.ஜ.க வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் பாஜக-வினர் சிலர் கடந்த 7 ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை … Read more

தென்காசியில் அதிர்ச்சி.. ஆட்டோவில் கடத்தி சிறுமி கூட்டு பலாத்காரம்.! நள்ளிரவில் துணிகரம்.!

தென்காசி மாவட்டத்தில் இரவில் சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். தென்காசி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நேற்று முன்தின இரவு செங்கோட்டையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துவிட்டு, அப்பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிச் … Read more

தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை உள்பட 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குகிறது ஜியோ..!!

இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவுக்கு செல்போன் சேவை வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட முன்னணி டெலிகாம் நிறுனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் செல்போன் நெட்வொர்க் வர்த்தகம் ஏற்றம் கண்டுதான் வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் … Read more

தமிழகத்தில் இருந்து என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: கடலூரை பாலைவனமாக்கி வரும் என்எல்சிக்கு எதிரான போராட்டத்ததில் பாமக ஒருபோதும் பின் வாங்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களும், விரைவில் செயல்படுத்தப்படவிருக்கும் அவற்றின் விரிவாக்கங்களும் கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு வழிகோலிக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரு நிலக்கரித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மொத்தம் 66,000 ஏக்கர் பரப்பளவிலான அந்த நிலக்கரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மாவட்டம் … Read more

இ.சி.ஆர் சாலை: மாமல்லபுரம் டூ கன்னியாகுமரி வரை… 4 வழிச் சாலையாக விரிவாக்க ஏற்பாடு!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதிமுக எம்.பி வைகோ, திமுக எம்.பி சண்முகம் ஆகியோர் இ.சி.ஆர் சாலை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதில், மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது. இ.சி.ஆர் சாலை விரிவாக்கம் இதன் மொத்த தூரம் 697 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 24,435 கோடி ரூபாய் நிதி … Read more