முன்னாள் எம்எல்ஏ., முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின், அதிமுகவின் ஒற்றை தலைமையாக, அக்கட்சியின் இடைக்கால பொய்துசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை முன்னெடுத்து உள்ளார். அதிமுகவின் பல்வேறு சிக்கல்களுக்கு 80 சதவிகிதம் தீர்வு கிடைத்துள்ளதால், தற்போது இபிஸ் தலைமையை ஏற்று பல்வேறு காட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். கடந்த வாரம் அண்ணாமலை மீதுள்ள அதிருப்தியின் காரணமாக பாஜகவில் இருந்து நிர்மல் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் விலகி,  எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை … Read more

விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள நோய்வாய்ப்பட்ட மக்னா காட்டு யானைக்கு கும்கி யானை உதவியுடன் சிகிச்சை!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள நோய்வாய்பட்ட மக்னா காட்டு யானைக்கு, கும்கி யானை உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக  ஆதிமாதையனூர் கிரமாத்தில் முகாமிட்டுள்ள மக்னா யானையை, காரமடை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், அந்த யானை நோய்வாய்பட்டு உடல் மெலிந்து, வனப்பகுதிக்குள் உணவு தேடி செல்ல முடியாத நிலையில் இருந்தது தெரிய வந்தது.  இதனையடுத்து அவர்கள், டாப்சிலிப் பகுதியில் இருந்து சின்னதம்பி கும்கி யானையை வரவழைத்து கால்நடை … Read more

மதுரை மேயர் – துணை மேயர் மோதல் முற்றுகிறது: கல்வெட்டில் பெயர் போடாததால் போராட்டம் என ஆணையருக்கு கடிதம்

மதுரை: ‘‘மதுரை மாநகராட்சியில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் என பெயர் விடுபடுகிறது. அந்த கல்வெட்டுகளை மாற்றி எனது பெயர் வைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை மாநகராட்சி துணை மேயர் மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி இருப்பதால் திமுக கூட்டணிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் மேயராக திமுகவை சேர்ந்த இந்திராணி மேயராக உள்ளார். துணை மேயராக திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகராஜன் உள்ளார். ஆரம்பத்தில் மேயரும், … Read more

ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி லாக்கர்களில் சோதனை: 4.5 கிலோ தங்கம், 24.5 கிலோ வெள்ளி பறிமுதல்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி லாக்கர்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் 4.5 கிலோ தங்கம், 24.5 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேசன் (52), எம்.ஆர்.சுவாமிநாதன் (49). தொழிலதிபர்களான இருவரும், விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், நிதிநிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி பல கோடி வரை சம்பாதித்து தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்திற்கு ₹20 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! 

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்திற்கு ₹20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “நேற்று (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு இராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து இன்று காலை … Read more

தமிழக வீரர்களுக்கு அரிய வாய்ப்பு… தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் இப்போது ராமநாதபுரத்தில்!

தமிழக வீரர்களுக்கு அரிய வாய்ப்பு… தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் இப்போது ராமநாதபுரத்தில்! Source link

வெந்நீரில் மிளகாய் பொடி போட்டு மருமகனை கொன்ற மாமியார்..!!

மாமியாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மிளகாய் பொடி கலந்த வெந்நீரால் தாக்கப்பட்ட மருமகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த செல்வராஜூக்கு (27) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா (22) என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த செல்வராஜ், திருமணத்துக்கு பிறகு மாமியார் வீட்டிலேயே இருந்துவிட்டார். குடிப்பழக்கத்துக்கான அடியமையான இவர், வீட்டுக்கு வந்ததும் மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் தனது … Read more

மினி லாரி – கார் நேருக்கு மோதி விபத்து – 3 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடியில், மினி சரக்கு லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர். பெரியகோளாப்பாடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்றுவிட்டு, குடும்பத்தினர் 5 பேரும் காரில் திரும்பியுள்ளனர். அப்போது, கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி காலி பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற மினி லாரி, காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் | சிறுவனின் மருத்துவச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் அளித்த ஆட்டோ ஓட்டுநரின் குழந்தைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் ரஞ்சித்சிங். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் கஜன்(4). கஜனுக்கு இருதய பிரச்சினை இருந்ததால் ரூ.4 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் செலவாகும் என்பதால் பணம் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. இதுகுறித்து சிறுவன் கஜன் முதல்வரிடம் உதவி கேட்டு பேசிய வீடியோ செய்திகளில் வெளியானது. இந்த வீடியோவை கண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் … Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பின்விளைவு தெரியாமல் எப்படி பாஜ நிர்வாகி பதிவிட்டார்? ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி வெளியிட்ட விவகாரத்தில் சமூகத்தின் உயர் பொறுப்பில் உள்ள பாஜ நிர்வாகி, பின்விளைவு தெரியாமல் எப்படி பதிவிட முடியும். ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டுமென நீதிபதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பிரசாந்த்குமார் உம்ராவ், ஐகோர்ட் மதுரை … Read more