அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: போட்டிக்கு ஆள் இல்லையா? ஆடாமல் ஜெயிக்கும் எடப்பாடி?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த உட்கட்சி மோதல்களில் ஒவ்வொரு முறையும் தனது பலத்தை நிரூபித்து வந்த நிலையில் தற்போது உச்ச பதவியில் ஏறும் வகையில் காய் நகர்த்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். நாளை (மார்ச் 19) வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் ஆகும். அதேபோல் … Read more

”சிவா எனக்கு தம்பி. சமாதானமாகி விட்டோம்”..ஆர்டர் போட்ட முதல்வர்.. நேரில் சென்ற கே.என்.நேரு

திமுகவின் மாநிலங்களவை தலைவரும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மற்றும் நாற்காலிகளை தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் ஆதரவாளர்களே அடித்து துவம்சம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சி சார்பில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை … Read more

சூப்பர்! ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பணி நேரம் மாற்றம்!!

ரம்ஜான் நேரத்தில் நோன்பு இருக்க வேண்டும் என்பதால், இஸ்லாமியர்களுக்கு பணி நேரத்தில் மாற்றம் செய்து பீகார் அரசு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரம்ஜான் மாதத்தில் வழக்கமான பணி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகம் வரலாம். அதே போல் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேற அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளத. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இந்த உத்தரவு நிரந்தரமாக … Read more

நகை முகவரை காரில் கடத்தி தங்கம், பணம் கொள்ளை வழக்கில் ஊர்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6பேர் கைது..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில்  நகை முகவரை காரில் கடத்தி சென்று ஒன்றரை கிலோ தங்கம்  2  கோடி ரூபாய் ரொக்கம்  கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஊர்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சென்னையில் இருந்து நகை பணத்துடன் சென்றபோது காரில் வந்த 4 பேர், போலீஸார் எனக் கூறி  நகைகளை பறித்து விட்டு  லேனா விலக்கு சுங்கச்சாவடி … Read more

தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்; 160 பேருக்கு ரூ.2.25 கோடி ஊக்கத் தொகை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற160 தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 76 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி … Read more

அடேங்கப்பா, ரூ.25 ஆயிரம் கோடியில் கை வைத்த ஒன்றிய அரசு: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024 வரும் திங்கள் கிழமை (மார்ச் 20) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று டெல்லியில் முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய நிதித்துறை செயலாளரை சந்தித்தார். தமிழக நிதி நிலைமை சரிவிலிருந்து மீள்கிறதா? அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், … Read more

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு வரும் 21-ம் தேதி விடுமுறை: கல்லூரி முதல்வர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு வரும் 21-ம் தேதி விடுமுறை என கல்லூரி முதல்வர் முத்துசாமி தெரிவித்துள்ளார். வணிக நிர்வாகவியல்துறை கவுரவ விரிவுரையாளர் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.