சோகத்தின் உச்சம்.. நிறைமாத கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் போது காரில் தீ.. கணவன் மனைவி பலி..!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித் (32). இவரது மனைவி ரீஷா (26). நிறைமாத கர்ப்பிணியான ரீஷாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதன் படி, ரீஷா உள்பட 6 பேர் காரில் புறப்பட்டனர். அப்போது கார் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதில் காரின் முன் பகுதி … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர்கள்..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.ஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். திமுக கூட்டணி சார்பில் அன்னை சத்யா நகர் பகுதியில் தேர்தல் பணி மனையை திறந்து வைத்த அமைச்சர்கள், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். Source link

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு… – தவறான நம்பர் பிளேட்கள்: 2 நாட்களில் 11,784 வாகனங்கள் மீது நடவடிக்கை

சென்னை: விதிகளுக்கு மாறாக வித விதமான டிசைன்களில் நம்பர் பிளேட் இருந்த 11,000 வாகனங்கள் மீது சென்னை காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்: மோட்டார் வாகனச் சட்டம், விதிகள் 50 மற்றும் 51-ன்படி வாகனங்களுக்கான பதிவு எண் தகடுகளின் அளவையும் வாகனப் பதிவுக் கடிதங்களையும் பரிந்துரை செய்கிறது. மேலும், இவ்விதிகளின்படி, வாகன எண் பலகைகளில் கலை அல்லது படங்களைப் பயன்படுத்துவதற்கு, எந்தவித ஆடம்பரமான எழுத்துக்களும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.இருப்பினும், வாகன ஓட்டிகள் பலரும் … Read more

எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்குக! – அண்ணாமலை வலியுறுத்தல்!

எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழாவுக்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்களும், பொது மக்களும் கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. … Read more

ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டது ஏன்?

ஈரோடு: அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் நியமிக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பாஜவை கழற்றிவிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசுவை அதிமுக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து … Read more

திருப்பூர் கொள்ளை சம்பவம்: குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய கோரிய கைதிகள்! நீதிமன்றம் அதிரடி

திருப்பூர் நகைக்கடையில் 3 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஜெ.கே.ஜுவல்லரியை கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பத்ருல், தில்கஷ், முகமது சுபான், முர்தாஜா ஆகியோரை திருப்பூர் மாநகர காவல் துறையினர் மகாராஷ்டிராவில் கைது செய்தனர். … Read more

17 வயது இளம் பெண்ணை கடத்திய பெரியப்பா முறையான 55 வயது நபர் கைது.!

தர்மபுரி மாவட்டத்தில் 17 வயது இளம் பெண்ணை கடத்திய பெரியப்பா முறையான 55 வயதுடையவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் தாசரவல்லி பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் கல்லூரி செல்வதை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இந்த இளம் பெண் திடீரென காணாமல் போனார். இதை எடுத்து பெற்றோர் மகளைப் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் இளம் … Read more

திடீர் திருப்பம்..!! நானை மற்றும நாளை மறுநாள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை…!

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கு … Read more