செய்தித் துறை இயக்குநர் உட்பட தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை: செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், செய்தித் துறையின் புதிய இயக்குநராக விழுப்புரம் ஆட்சியர் மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் கே.பி.கார்த்திகேயன் நெல்லை மாவட்ட ஆட்சியராகவும், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்-செயலர் டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி-மக்கள் … Read more