சம்பா சாகுபடி | இரு வாரங்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சம்பா சாகுபடிக்காக காவிரியில் கூடுதலாக இரு வாரங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் கதிர் முற்றியிருக்கும் நிலையில் திடீரென நீர்திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது காவிரி படுகை உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேட்டூர் அணை வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே திறக்கப்பட்டதும், … Read more

எடப்பாடிக்கு மத்திய அரசு கல்தா: டெல்லியில் ஓபிஆருக்கு முக்கியத்துவம்!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி (NDA)சார்பில் பாராளுமன்ற கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று நடைறும் கூட்டத்திற்கு, அ.தி.மு.க சார்பில், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் அதிமுக மக்களவைக் குழு தலைவர் என்று ஓ.பி.ரவீந்திரநாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி மோதல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது தொடர்ந்து … Read more

வானிலை அலெர்ட்..சென்னையில் மழை.. 8 மாவட்டங்களில் மழை பொழியும்!

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை -திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது நாளை மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை … Read more

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஆவின் குளிரூட்டும் மையங்கள் பயன்பாட்டிற்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, தென்னை, முருங்கை, கத்தரி, வெண்டை, சோளம் கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் செய்து வருகின்றனர். இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் செய்த பலர் கால்நடை வளர்ப்பு தொழிலை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். அதிலும் கரவை மாடு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கறவை … Read more

FactCheck: நூற்றாண்டு கோயிலை இடித்த டி.ஆர்.பாலு? இணையத்தில் உலாவரும் வீடியோவின் உண்மை நிலை

சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மதுரை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கூட்டம் கடந்த ஜனவரி 28ம் தேதி நடைபெற்றது. இதில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். அப்போது மேடையில் டி.ஆர்.பாலு கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை இடித்தது குறித்து பேசிய வீடியோவின் சிறு பகுதியை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் … Read more

கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் அவகடோ? ஆனா இந்த அளவில் எடுத்துக்கொள்ளணும்

கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் அவகடோ? ஆனா இந்த அளவில் எடுத்துக்கொள்ளணும் Source link

கடலூர் :: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – பெண் பலி, 6 பேர் காயம்.!

கடலூர் மாவட்டத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டதில் உள்ள முட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (39). இவரது மனைவி அருணா (32). இந்நிலையில் வாசுதேவன் மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று கடலூர் மாவட்டம் கொரக்கையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ரெட்டகுறிச்சி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, திடீரென எதிரே எதிரே … Read more

மக்கள் அலறி அடித்து ஓட்டம்..!! கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடித்து எறிந்ததில் 8 பேர் காயம்..!!

கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை கடக்கும் பொழுது திடீரென அந்த பேருந்தில் முன் பகுதியில் கரும்புகை வெளியாகியுள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேகமாக கீழே இறங்க தொடங்கினர். அப்போது பேருந்து முழுவதும் … Read more

இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர் சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி விபத்து..!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர், சாலையோர வீட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கூடங்குளம் சுனாமி காலனியை சேர்ந்த மனோ என்பவர், கடல் தொழில் செய்துவருகிறார். இவர் நேற்று கூத்தன்குழியில் இருந்து இடிந்தகரை சுனாமி குடியிருப்பு நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி, சாலையோரம் இருந்த வீட்டின் சுவற்றின் மீது மோதி படுகாயமடைந்தார். பொதுமக்கள் மனோவை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் … Read more

அரியலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு, 30 பேர் காயம்

அரியலூர்: அரியலூர் அருகே இன்று (ஜன.30) காலை தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் நோக்கி இன்று காலை தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை, அரியலூர், பெரம்பலூர் வழியாக துறையூர் செல்லும் இந்த பேருந்து சுமார் 50 பயணிகளுடன் செந்துறை அடுத்த ராயம்புரம் கிராமத்தின் அருகே காலை 9 மணியளவில் வந்தபோது, … Read more