மநீம வலைதளத்தில் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள் – ‘காங்கிரஸ் உடன் இணைப்பு’ என பதிவு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதள பக்கத்தை ஹேக் செய்து முடக்கிய ஹேக்கர்கள், காங்கிரஸ் கட்சியுடன் மநீம இணைய உள்ளதாக பதவிட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதளப் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள், ஜன.30-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக மநீம ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. … Read more

பொங்கல் இலவச வேட்டி, சேலை என்னாச்சு..? – ரேஷன் கார்டுதாரர்கள் அப்செட்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி – சேலைகள் வழங்குவதற்கு 2022-2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை குறித்த காலத்திற்குள் செயல்படுத்தாதது, திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஏழையெளிய மக்களுக்காக, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச வேட்டி-சேலை … Read more

குமாரபுரத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கோயில் சுற்றுச்சுவரை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உள்பட்ட குமாரபுரம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு சொந்தமான உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கோயிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவர் அதையொட்டிய தெருவை ஆக்ரமித்து கட்டியுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் வருவாய்த்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில், அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கோயில் சுற்றுச்சுவரை ஆய்வு செய்தனர். அப்போது தெருவை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனால் அந்த சுற்றுச்சுவரை … Read more

பிறந்தநாளில் நடந்த சோகம்… வைரல் டான்சர் ரமேஷ் மறைவில் முடியாமல் தொடரும் சர்ச்சைகள்!

நடன கலைஞரான ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. தன்னுடைய நடனத்தால் சமூக வலைதளங்களில் பிரபலமான நடனக் கலைஞரான ரமேஷ், சமீப காலமாக தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்துள்ளார். தற்போது வெளியான நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்திலும் நடத்திருந்தார். நடன கலைஞர் ரமேஷிற்கும் அவரது முதல் மனைவியான சித்ராவிற்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி இன்பவள்ளியுடன் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கேபி பூங்கா குடியிருப்பில் அவர் … Read more

திமுக கொடி கட்டிய காரில் கள்ள நோட்டு கடத்தல்?! மூன்று பேர் கைது!

நாமக்கல் அருகே திமுக கொடி கட்டிய காரில் கள்ள நோட்டு கடத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி : சேந்தமங்கலம் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற கொல்லிமலை பகுதியை சேர்ந்த செல்லதுரை, சதாசிவம், சிலம்பரசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக கட்சி கொடி கட்டிய காரில் கள்ள … Read more

ஈரோடு கிழக்கு: 293 பேர் அடங்கிய தேர்தல் பணிக் குழு அமைத்த டி.டி.வி தினகரன்

ஈரோடு கிழக்கு: 293 பேர் அடங்கிய தேர்தல் பணிக் குழு அமைத்த டி.டி.வி தினகரன் Source link

கள்ளக்குறிச்சி அருகே பள்ளிப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. மாணவ, மாணவிகள் 14 பேர் காயம்!

கள்ளக்குறிச்சி அருகே பள்ளிப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவ மாணவிகள் 14 பேர் காயமடைந்தனர். பொற்படக்குறிச்சி கிராமத்தின் ஏரிக்கரை வழியாக சென்ற பள்ளி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட மாணவ, மாணவிகளை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்ட நிலையில், காயமடைந்த 14 பேரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலையின் வலதுபுறத்தில் ஏரி இருந்த நிலையில், இடதுபுறமிருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததால், பெரும் அசம்பாவிதம் நேராமல் தவிர்க்கப்பட்டது. Source … Read more

குட்கா தடை ரத்து | உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு: மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உணவு பாதுகாப்பு … Read more

‘தமிழ் நாய்டு.. கேரேளா..’ – ஒன்றிய அரசு இணையதளத்தால் சர்ச்சை.!

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்த இந்தியா, 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு நாடானது. அதன்படி, இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டன. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட கடமைப் பாதையில் அலங்காரங்கள், அணிவகுப்பு, பாதுகாப்பு … Read more

கிணற்றில் விழுந்த சிறுத்தை பலி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் அம்புரூஸ் வலைவு ஏலமன்னா அருகே கல்கடவு பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான குடிநீர் கிணற்றில் நேற்று காலை சிறுத்தை ஒன்னறு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர் முரளிதரன் சென்று பார்வையிட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் பிதர்காடு வனச்சரகர் அய்யனார் மற்றும் வனவர் பெளிக்ஸ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு … Read more