இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஜனவரி … Read more

திருட்டு வழக்கில் கைதானவர் தனது மனைவியுடன் பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி

திருப்பூர்: திருட்டு வழக்கில் கைதானவர் தனது மனைவியுடன், பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை ஜெய்ஹிந்தாபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி(29). இவரது மனைவி மஞ்சுளா (25). தம்பதியருக்கு 1 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள். இந்நிலையில் கருப்புசாமி, திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட வேலப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் ரேடியேட்டர் உற்பத்தி நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இந்நிலையில் அங்கு பணி செய்து … Read more

'எங்கள கேட்காம எதும் பண்ணக் கூடாது' – கேரள அரசுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆர்டர்!

கேரள அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே செய்யக் கூடாது என வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் தலைமை செயலாளர் வருவாய்த் துறை செயலாளர் … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு கடலூரில் களைகட்டிய ஆற்று திருவிழா: சாமிகளுக்கு தீர்த்தவாரி: திரளான மக்கள் பங்கேற்பு

கடலூர்: கடலூரில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பொங்கல் பண்டிகையின் 5ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து நதிகளிலும் கங்கை நீர் கலப்பதாக ஐதீகம். இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். இந்நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் இன்று ஆற்று திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனால் கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தின்பண்ட கடைகள், … Read more

எமர்ஜன்சி கதவு திறப்பு; இண்டிகோ விமானத்தில் நடந்தது என்ன? அண்ணாமலை விளக்கம்

எமர்ஜன்சி கதவு திறப்பு; இண்டிகோ விமானத்தில் நடந்தது என்ன? அண்ணாமலை விளக்கம் Source link

தெருவில் குளித்த பெண்கள்.. வீடீயோ எடுத்த இளைஞர்.. அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதிக்கு அருகே இரு இளம் பெண்கள் தங்கள் வீட்டிற்கு முன் இருந்த மினி டேங்கில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற இளைஞர் அவர்கள் குளிப்பதை செல்போனில் பதிவு செய்துள்ளார்.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்கள் ஓடி சென்று அக்கம் பக்கத்தினரிடம் கூற அவர்கள் வீடியோ எடுத்த இளைஞரை பிடித்து தட்டி கேட்டதால் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்தார்.  இதனை தொடர்ந்து அந்த இளைஞர் தனது ஊருக்கு … Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் முறையாக வழங்கப்படாமல் கடைகளில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு..!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் முறையாக வழங்கப்படாமல் கடைகளில் விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது முத்திரையிடப்பட்ட முப்பது முட்டைகள் அடங்கிய அட்டை ஒன்று 120 ரூபாய்க்கு வெளியில் விற்கப்படுவதாக, முட்டைகளோடு வந்து மாவட்ட ஆட்சியரிடம், புகார் அளித்ததாக எடையாத்தூர்பகுதி மக்கள் தெரிவித்தனர். Source link

வாழப்பாடி அருகே தடையை மீறி 2 கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு: வனத்துறை விசாரணை

சேலம்: வாழப்பாடி அருகே இரண்டு கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை மீறி காட்டில் இருந்து வங்கா நரிகளை பிடித்து வந்து வங்கா நரி ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அட்டவணை பட்டியலில் உள்ள நரிகளை காட்டுக்குள் சென்று பிடிக்கக் கூடாது என வனஉயிரினங்கள் … Read more

சைலேந்திர பாபுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக காவல்துறை பாத்திரமாக வேண்டும். காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு இவ்வரசின் தலைமையில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதால், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்கிய திமுக! குழப்பத்தில் அதிமுக கூட்டணி

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா அண்மையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திமுக கூட்டணி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, திருமகன் … Read more