வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 1 லட்சம் பேர் வருகை! 

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சுமார் 1 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். பொங்கல் ‘காணும் பொங்கலுடன்’ நிறைவடைகிறது. மக்கள் தங்கள் குடும்பங்களுடன் ஒன்று சேர்ந்து அருகில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்வது வழக்கம். காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாகும். பார்வையாளர்களின் வருகையினை முன்னிட்டு பூங்காவின் நேரம் நீட்டிக்கப்பட்டது.  தமிழ்நாடு வனத் துறையைத் தவிர. காவல் … Read more

ஹாக்கி: ஜப்பானை வீழ்த்திய கொரியா!….

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கொரியா ஜப்பானை வீழ்த்தியது. 15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் … Read more

பிப்.19 முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கம்: தேனி மக்கள் மகிழ்ச்சி

போடி: போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்.19-ம் தேதி முதல் இரண்டு ரயில்கள் நீட்டித்து இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை – போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை பணிகள் முடிவடைந்து சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி-போடி இடையேயான 15 கிமீ பணிகள் முடிந்து கடந்த மாதம் … Read more

விமான கதவை திறந்த விவகாரம்.. சிக்கிய தேஜஸ்வி.. அண்ணாமலை கப்சிப்..!

திருச்சி சென்ற விமானத்தில் அவசர கால கதவை திறந்து பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாஜக எம்பி தேஜஸ்வியை விசாரணைக்குட்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்பி, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் சில மாநில நிர்வாகிகள் … Read more

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து உள்ளது: முக கவசம் அணிவது நல்லது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் பரவமால் தடுக்க கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100 சதவீதம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ரேண்டம் முறையில் பரிசோதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து தான் உள்ளது. முக கவசம் அணிய வேண்டும் … Read more

ஜல்லிக்கட்டு முடிந்து வீடு திரும்பியபோது விபத்து: காளைகள், இளைஞர்கள் பலியான சோகம்

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை பங்குபெற அழைத்துச்சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 2 இளைஞர்கள் மற்றும் 2 காளைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்க விராலிமலையிலிருந்து மூன்று காளைகளை சிறிய ரக சரக்கு வாகனத்தில் அழைத்துக் கொண்டு வன்னியன் விடுதிக்கு சென்றிருந்தனர் காளையர்கள். தொடர்ந்து வாடிவாசலில் காளைகளை அவிழ்த்தப்பிறகு, மீண்டும் மூன்று காளைகளையும் சிறிய ரக … Read more

சென்னை | ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தக்கு வந்த பாங்காக் விமானத்தில் வந்த பயணிகளிடம் ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை விமான நிலையத்தக்கு வந்த பாங்காக் விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அதில், ஒரு பெண் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்திய பெண் அதிகாரிகள், அந்த பெண் பயணி உள்ளாடைக்குள் … Read more

நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ..!! கார் ஓட்டுனரை சாலையில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம்..!!

கர்நாடகாவில் கார் ஓட்டுனரை சாலையில் 1 கி.மீ. தொலைவுக்கு பைக்கில் சென்ற நபர் இழுத்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் பைக் ஓட்டி செல்லும் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறம் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின் கார் மீது மோதி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுனர், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நிற்கும்படி கூறியுள்ளார். ஆனால், … Read more

தமிழ்நாடு என்ற பெயரை இலகுவாக புறந்தள்ளிவிட முடியாது: தமிழிசை கருத்து

புதுச்சேரி: “தமிழ்நாடு என்ற பெயரை இலகுவாக புறந்தள்ளிவிட முடியாது” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா ஆகியவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆரோவில் அமைப்பின் செயலர் ஜெயந்தி ரவி மற்றும் ஆரோவில், அரவிந்தர் சொசைட்டி, அரவிந்தர் ஆசிரம அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆரோவில் … Read more

திமுக மூத்த அமைச்சரின் நெருங்கிய உறவினர் மரணம்… விழுப்புரம் விரைந்த உதயநிதி!

விழுப்புரத்தில் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவரும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் உடன் பிறந்த தம்பியுமான, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதமசிகாமியின் சித்தப்பாவுமான கே தியாகராஜன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார. மருத்துவர் தியாகராஜன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உதயநிதி அஞ்சலி: அவரது உடல் இன்று சென்னையில் இருந்து விழுப்புரம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் அவருக்கு … Read more