வரும் 28, 29ம் தேதிகளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை; அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

ஜெயங்கொண்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 28, 29ம் தேதிகளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து வரும் 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் திருச்சி வருகிறார். அங்கிருந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காகித ஆலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். தொடர்ந்து அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில்  நடைபெறும் அகழாய்வு பணிகள் மற்றும் அதில் கிடைத்த பொருட்களை முதல்வர் பார்வையிடுகிறார். பின்னர் 29ம் தேதி அரியலூரில் நடைபெறும் … Read more

"சஸ்பெண்ட் செய்திருப்பது மன அழுத்ததைக் ஏற்படுத்தியுள்ளது!" – காயத்ரி ரகுராம் பேட்டி

பாஜகவில் இருந்து நடிகை காய்த்ரி ரகுராம் அடுத்த 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜகவில் இருந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்துக்கு நீக்கப்பட்டிருக்கும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியது, ‘ எந்த தவறும் செய்யாமல் தண்டனை கிடைத்தால், மிக பெரிய வருத்தம் எல்லாருக்கும் இருக்கும். கொலை, மோசடி செய்பவர்களை கூட இரண்டு தரப்பு விசாரணை செய்து … Read more

100 நாள் வேலை.. ஆனால் ஒரு நாள் கூட வேலை தரவில்லை – ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்.! 

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்தன் கொட்டாய் கிராமம் வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-  “எங்கள் கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த ஆண்டுக்கான 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை எங்களுக்கு ஒரு நாள் கூட வேலை தரவில்லை. இதுகுறித்து, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவிதமான பலனும் இல்லை. இந்த ஆண்டு முடிவதற்குள் எங்களுக்கு 100 நாள் வேலையும் வழங்க முடியாது. ஆகவே, … Read more

மனைவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு கணவன் தற்கொலை..!!

சென்னை வில்லிவாக்கம், பாபா நகரைச் சேர்ந்தவர் கணேசன் (38). முதல் மனைவியை விவாகரத்து செய்த கணேசன், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இதற்கிடையில் 2-வது மனைவியின் நடத்தையில் கணேசன் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதுள்ளது. இதனால் கணேசன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு … Read more

“கன்னியாகுமரியில் இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்” – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

கன்னியாகுமரியில், இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அஞ்சுகிராமம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களுக்கு பயனளிக்கும் ocean sat செயற்கைக்கோள்,  வரும் 26ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். Source link

மேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறுவதாக தமிழக அரசு விளக்க மனு

புதுடெல்லி: மேகதாது அணை திட்டத்தைக் கொண்டு வரும் கர்நாடகத்தின் முயற்சி என்பது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறுவதாகும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் … Read more

அரசு கேபிள் டிவி முடக்கப்பட்ட விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்க செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரின் மும்பை அடிப்படையாகக் கொண்டு மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் மற்றும் பாலாஜி மிசின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்தது. … Read more

கட்டாத கால்வாய்க்கு டெண்டர், தணிக்கை: ஆர்டிஐ மூலம் அம்பலம்

வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்குபட்ட ஒன்றாவது வார்டில் ராஜிவ்காந்தி 3 வது தெருவில் தற்போது வரை கழிவு நீர் கால்வாய் இல்லாததால் அப்பகுதி மக்கள் பொது வெளியில் கழிவு நீரை விடும் சூழல் உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தங்கள் தெருவுக்கு கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரி 8 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வியில், அத்தெருவுக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக … Read more

நெல்லையில் தொடர் கொலைகளை தடுக்க தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் ஆலோசனை..!!

நெல்லை: நெல்லையில் தொடர் கொலைகளை தடுக்க தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், 4 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்டோருடன் அஸ்ரா கர்க் ஆலோசனை நடத்தி வருகிறார்.