பெற்றோர்களே உஷார்.! 'சாக்லேட்' என நினைத்த குழந்தை.. மயங்கி விழுந்து மரணம்., கதறும் தாய்.!

நாமக்கல் மாவட்ட பகுதியில் போடாம்பில்பட்டியில் ரஞ்சித் மற்றும் மிதுனாதேவி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகன் வினித் அரசு ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சென்ற 13ம் தேதி வீட்டிற்கு அருகாமையில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தத வினித் சாக்லெட் என்று நினைத்து எலி பேஸ்ட்டை தின்றுள்ளார். இதனை கண்ட மிதுனாதேவி அதனை பறித்து வீசியுள்ளார்.  அதன் பிறகு வினித் சிறிது நேரத்திலே வாந்தி எடுத்து சட்டென்று மயங்கி விழுந்தார். … Read more

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை, காமராஜபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த முத்துலட்சுமியின் கணவர் யோகேஸ்வரன் கடந்த 13ம்தேதி அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். மதுரை மாவட்டத்தில் … Read more

ரயிலில் அசுத்தமான போர்வை, தலையணை வழங்கப்பட்டதால் நள்ளிரவில் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியா வரை செல்லும் ஏக்தா அதிவிரைவு ரயிலில் குளிர்சாதன பெட்டியில் அசுத்தமான போர்வை, தலையணை வழங்கியதாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம் நடத்தினர். சென்னையிலிருந்து இரவு 10.40 மணிக்கு ரயில் புறப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்தை கடக்க இருந்தபோது ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்தியுள்ளார்கள். பணியிலிருந்த அரக்கோணம் ரயில்நிலைய அதிகாரிகள், அரக்கோணம் ரயில் நிலையத்தில் அதற்கான வசதிகள் … Read more

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தாமதமாக வருவதாக புகார்: திடீர் ஆய்வின்போது காலியாக இருந்த 50% இருக்கைகள்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் தாமதமாக வருவதாக தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, தலைமைச் செயலக ஆய்வுக் குழு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டதில் அலுவலகங்களில் பாதி பேர் உரிய நேரத்திறகு வராமல் இருந்தது தெரியவந்தது. புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர். ஆனால், இதுவரை இதுகுறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் … Read more

டிஷ்யூம்.. டிஷ்யூம்..! – அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிவாளம்?

அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் பொது வெளியில் கருத்துத் தெரிவிப்பதை முதலமைச்சர் தடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில், நிதித் துறை அமைச்சராக இருப்பவர், மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன். நிதி மேலாண்மையில் அனுபவம் பெற்ற இவரை, நிதித் துறைக்கு அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தது, பலரது பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில், நிதித் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பற்றிய பேச்சுகள் தான், தற்போது … Read more

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பா” திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து திருநாவுக்கரசு

Indian General Election 2024: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, “திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் தொடருந்து பேசிய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு, “மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் … Read more

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அனைத்துவித வாகனங்களும் பாலத்தில் செல்ல தடை விதிப்பு..!

திருச்சி : திருச்சி மாநகரில் காவிரி ஆறு மற்றும் காவிரி பாலம் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. லால்குடி, முசிறி, துறையூர் மற்றும் சுற்று பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் திருச்சி காவிரி பாலம் வழியாக திருச்சி மாநகருக்கு வரவேண்டிய நிலையில், காவிரி பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு முன்பாக 4 சக்கர வாகனங்கள் காவிரி பாலம் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இருசக்கர வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. … Read more

நாமக்கல்: ஆற்றில் கலந்த கழிவுநீர்.. மக்கள் போராட்டத்தால் சாயத்தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே சாயக்கழிவுநீரை காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் இயங்கிய சாயத் தொழிற்சாலையினை பொதுமக்கள் முற்றுகையிட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த சாயத் தொழிற்சாலையில் இருந்து, சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் இரவு நேரங்களில் காவேரி ஆற்றில் கலந்து வந்துள்ளனர். இதனால் வெளியேறிய நச்சுப் புகை காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் … Read more