"கூகுள் பே மூலம் பணம் அனுப்பு." ஸ்மார்ட் திருடர்களால் பீதியில் கோவை.! இருட்டில் அரங்கேறும் பகீர் சம்பவங்கள்.! 

சமீபகாலமாகவே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இது பற்றி, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் கூட இந்த குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் நீலாம்பூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளை ஒரு கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் நபர்களை குறி வைத்து இந்த … Read more

காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்: மருந்து குடித்து பெற்றோர் தற்கொலை..!

சிதம்பரம் அருகே, நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலைடில் மகள் காதலனுடன் சென்றதால் வேதனையடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(65). இவர், தனது மனைவி சுமதியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் இறந்து கிடந்த இருவரது உடலையும் மீட்ட புதுச்சத்திரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் … Read more

தமிழகம் முழுவதும் 1080 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 தேர்வு..!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற்றது. 18 துணை ஆட்சியர்கள், 26 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வு 1080 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதில், 45,939 பேர் தேர்வு எழுதினர். … Read more

வானிலை முன்னறிவிப்பு: நவ.21, 22 தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும். பின்னர் … Read more

காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும்: சவுக்கு சங்கருக்கு என்ன நிபந்தனை!

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை … Read more

தமிழகத்தில் மழை தொடருமா? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை அதிகம் பெய்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த  … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முறைகேடு: பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்

சேலம் : அதிமுக ஆட்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. உரிய அங்கீகாரம் இல்லாத தொழிநுட்பப் படிப்புகள் நடத்தியது, கல்வித் தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை தொலைதூரக் கல்வியில் சேர்த்தது. படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு.!

திருவாரூர் மாவட்டத்தில் 69ஆவது இந்திய கூட்டுறவு வார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால் பொருட்கள் வாங்குவதில் பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் … Read more

தொடரும் சோகம்..!! மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் அருள்மணிகுமார். இவரது மகன் நிர்மல் குமார் (25). இவர் சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி படித்து வந்தார். நிர்மல்குமாரை, தினமும் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார். அதுபோல் நேற்று முன்தினம் காலையில் இருந்து நிர்மல்குமாருக்கு செல்போனில் … Read more

ஒரு குழந்தைகூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: ஒரு குழந்தைகூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவ.19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம். குழந்தைகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை. எந்தக் குழந்தையும் … Read more