அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பள்ளி வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்த மாணவ, மாணவிகள்!

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தினம்தோறும் சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளி வளாகங்களை பெருக்க வைப்பது, பள்ளி வளாகத்தில் கழிவறை இல்லாததால் 200 மீட்டர் தொலைவில் உள்ள கழிவறைக்கு தண்ணீர் கொண்டு செல்வது போன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை … Read more

சேலம் | ஒரு லட்சம் மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி: நோய் தாக்குதலில் இருந்து தற்காக்க கால்நடை துறை துரிதம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் பெரியம்மை நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை தற்காக்க வேண்டி கால்நடை துறை மூலம் முதல்கட்டமாக ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆறு லட்சம் மாடுகள்: தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு தொழிலில் முன்னிலையில் சேலம் மாவட்டம் உள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் ஆறு லட்சம் மாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். சேலம் மாவட்ட கால்நடை துறை மூலம் சேலத்தில் கால்நடைகளுக்கான பன்முக மருத்துவமனையும், ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, … Read more

ஆர்டர்லி முறை… அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

சிஆர்பிஎப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் மற்றும் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004 ஆம் ஆண்டு கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை … Read more

காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிர்க்க வலியுறுத்தல்

சிவகங்கை: காய்கறி சாகுபடியில் ரசாயன உரம், மருந்துகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவித்திருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இவைகளில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயண உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும். … Read more

மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என கிராமம் கிராமமாக ஒலிபெருக்கி மூலம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் இன்று முதல் 21 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், தங்கள் படகுகளையும் உடைமைகளையும் பத்திரமாக கரையினில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், கரை வலை மீன்பிடித்தல், ஆழ்கடல் மீன்பிடித்தல், ஆழ்கடலில் தங்கி மீன் … Read more

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கு : நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார் சவுக்கு சங்கர்..!

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை மிரட்டி 50 லட்ச ரூபாய் கேட்ட வழக்கில், சாட்சி விசாரணைக்காக வந்த சவுக்கு ஷங்கர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2016-ம் ஆண்டு,செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி குறித்து சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகவும், 50 லட்சம் பணம் கேட்டு அவரை மர்ம நபர் செல்போனில் மிரட்டியதாகவும், போலீசில் புகாரளிக்கப்பட்டது. தனக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததாக கூறி மகாலட்சுமி தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் … Read more

திருமங்கலம், சிவகாசி பட்டாசு ஆலைகளில் 7 பேர் பலியான வழக்கு: 4 பேருக்கு முன்ஜாமீன் மறுப்பு

மதுரை: திருமங்கலம், சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலியான வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் 4 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில், அனுசியாதேவிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 10ம் தேதி நடந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் அனுசியாதேவி, அவர் கணவர் வெள்ளையன், ஆலை மேற்பார்வையாளர் பாண்டி ஆகியோர் சிந்துபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் வெள்ளையன், … Read more

இதுக்கு இல்லியா சார் எண்டு..! – மீண்டும் மாடு மீது மோதிய 'வந்தே பாரத்' ரயில்!

வந்தே பாரத் விரைவு ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரயிலின் முன்பக்கம் சேதம் அடைந்தது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டிற்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு பகுதிக்கும் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி குஜராத் – மகாராஷ்டிரா இடையே இயக்கப்பட்ட ரயிலில் எருமை மாடுகள் மோதியதில் … Read more

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்க

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களுக்குக்கு  கடிதம் எழுதியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் இந்த பரிந்துரைக்கு சென்னை உயர் நீதிமன்ற … Read more