தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; விருதுநகர் அம்மாச்சிபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்க … Read more

'இன்னொரு பிரியாவை இழக்காமலிருக்க, தமிழக அரசு செய்யப்போவது இதுதான்' – அமைச்சர் தகவல்

“அறுவை சிகிச்சையின் போது தவறுகள் நடைபெறுவது தடுப்பதற்காக, ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் பிறகும் தணிக்கை செய்யும் நடைமுறை கொண்டு வருவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி பட்டப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மேலும் பட்ட மேற்படிப்பு இட ஒதுக்கீட்டுக்கான ஆடைகளையும் வழங்கினார். இந்த … Read more

திருப்பூர் || ஏ.டி.எம் மையத்தில் கிடந்த 500 ரூபாய் நோட்டுகள் போலீசில் ஒப்படைப்பு..! 

இந்த காலகட்டத்தில் பொதுவாக மக்கள் எந்த வழியில் சம்பாதிக்கலாம் என்று நினைக்கின்றனர். அதற்காக பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்போதெல்லாம் கீழே ஏதாவது பணமோ, நகையோ அல்லது வேறு ஏதாவது பொருளோ கிடந்தால் அதனை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லும் இந்த உலகத்தில் இந்த நபர் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் நிகழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவர் ஒரு விவசாயி. இவர் அந்த பகுதியிலுள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் … Read more

100 யூனிட் இலவச மின்சாரம் வேணுமா..?: அப்போ, உடனே இதை செய்யுங்க..!

100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், அரசு வழங்கும் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் நிறுவனங்களும் ஆதாரை கட்டாயப்படுத்தி வருகின்றது. வங்கி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலம் சார்ந்த தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம்கார்டு வாங்குவது முதல் ரீசார்ஜ் வரை ஆதார் எண் முக்கியம் என்ற நிலை உருவாகிவிட்டது. … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து; பாஜக நிர்வாகிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். … Read more

உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக – … Read more

மக்களவைத் தேர்தல் – திமுகவுடன் கூட்டணி அமைக்க கமல் முடிவு?

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்திவரும் கமல் ஹாசன் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து மீண்டும் திரைப்படங்களில் பிஸியாகி உள்ளார். இப்படிப்பட்ட சூழலில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறார். இது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 85 மாவட்ட செயலாளர்கள், மாநில செயலாளர்கள், … Read more

காரைக்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் இடையே வரவு செலவு கணக்கின்போது கைகலப்பு

சிவகங்கை: காரைக்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் இடையே வரவு செலவு கணக்கின்போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் தாக்கியதால் சிவகங்கை மாவட்ட பாஜக செயலாளர் நாகராஜன் காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓஎம்ஆர் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஓ.எம்.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர் விக்னேஷ்வரன் (33), இவர் தனது காரில், ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரபாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததால் காரை சர்வீஸ் சாலையில் நிறுத்தி காரில் இருந்து இறங்கியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் கார் மளமளவென எரியத் துவங்கியது, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து … Read more