நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற 'இவர்களின்' ஓட்டு வங்கி மிக முக்கியம் – வேலூர் இப்ராகிம் போடும் பலே பிளான்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் மஹாலில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜகவின் சிறுபான்மையினர் அணி சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறுபான்மையினர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் கூறியதாவது: “எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி எவ்வளவு அவசியம் எனவும், சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : நீதிமன்றம் விளையாட்டு மைதானமா என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடைசி வாய்ப்பாக புதன்கிழமை வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது, அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.   

இறப்பிலும் இணைபிரியாத காதல்: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த செய்தி அறிந்த சிறிது நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி பாலக்கரை இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (91). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரிலுள்ள மகன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள மற்றொரு மகன் வீட்டிலும் வசித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு சம்பூரணத்தம்மாள் … Read more

டிச.,8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைய வாய்ப்பு: அடுத்த வாரம் மழை நிலவரம் என்ன?

டிச.,8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைய வாய்ப்பு: அடுத்த வாரம் மழை நிலவரம் என்ன? Source link

திருமணமான 8 மாதத்தில் பிரிந்து சென்ற காதல் மனைவி.! வாலிபரின் விபரீதம் முடிவு.!

சென்னையில் திருமணமான 8 மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மணலி காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (22). இவர், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.  இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து ராஜன் நேற்று முன்தினம் இரவு மனைவி வீட்டாரிடம் … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து 24-ம் … Read more

திமுக அங்கம் வகித்த மத்திய அரசால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை: ஓபிஎஸ்

சென்னை: “தமிழ்நாட்டின் உரிமையும், பாரம்பரியமும், கலாச்சாரமும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில், தமிழ்ச் சமூகம் உயிருக்கு உயிராக நேசிக்கக்கூடிய, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் பின்னிப்பினைந்திருக்கக் கூடிய, பாரம்பரிய பெருமைமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டினை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிரந்தரமாக … Read more

சென்னை-சபரிமலை சிறப்பு ரயில்; இயற்கை எழில் கொஞ்சும் வழித்தடங்கள்!

கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனையொட்டி சபரிமலையில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அலைமோதி வருகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் கோயிலில் உள்ள சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளில் ஒன்றாக கருதப்படும் களப பூஜை, களபம் சார்த்தல், களப அபிஷேகம் செய்து வருகின்றனர். சன்னிதானம் அருகே 18 படி ஏறி வரும்போது, பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி … Read more

அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம்! வைகோ அறிக்கை

சென்னை: அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று மதிமுக தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் பாரம்பரியம் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டு, அதை பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 1948 நவம்பர் 4 ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் முன்மொழியப்பட்டு, 1949 நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்திய அரசிலமைப்புச் … Read more

நீதிமன்றம் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது: சுவாதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி

மதுரை : நீதிமன்றம் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது: சுவாதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையை சொல்வதால் பிரச்சனை உள்ளதா, அதையும் சொல்ல மறுப்பது ஏன் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.