கோவை கார் குண்டு வெடிப்பு: மேலும் 3 பேர் அதிரடியாக கைது

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது. … Read more

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்துக்காக 30 ஆண்டுகள் குத்தகைக்கு கோயில் நிலம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்காக அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் … Read more

டிசம்பர் 8, 9 பள்ளிகள் விடுமுறை? – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மாண்டஸ் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்தது. இந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

கோவை – பாப்பப்பட்டி பிரிவு அருகே கிடங்கில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

கோவை : பாப்பப்பட்டி பிரிவு அருகே கிடங்கில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுதாகரன், குருநாதன், செல்வகுமார், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

"ஸ்டார்ட் அப்" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிகரிக்கும் புதிய நிறுவனங்கள் – மத்திய அரசு

கடந்த மூன்று ஆண்டுகளில் “ஸ்டார்ட் அப்” திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட எண்ணிக்கைகள் குறித்தும், நிறுவனங்களை தொடங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு குறித்தும், எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ். அதில், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, … Read more

புயல் எதிரொலி: 8 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம்

நேற்று தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு உள்ளது. இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 8, 9 ஆம் தேதிகளில் வட … Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்..!

புகழ்பெற்ற ஓவியரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. 1936-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி, மதுரையைச் சேர்ந்த மருத்துவரான ஹாரி ஜேசுதாசன் மற்றும் மாசிலாமணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் மனோகர் தேவதாஸ். 1953-ம் ஆண்டு கலை மற்றும் வேதியியலில் சிறந்து விளங்கிய மனோகர் தேவதாஸ் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வி முடித்தார். தனது 12 வது வயதில் கண் … Read more

சென்னை உயர் நீதிமன்றத்துக்கான புதுச்சேரி வழக்கறிஞர்கள் நியமன விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: வழக்கறிஞர்கள் சங்கம்

புதுச்சேரி: “சென்னை உயர் நீதிமன்றத்துக்கான புதுச்சேரி அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக நீதி விசாரணை தேவை. துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கத்தில் உடன்பாடு இல்லை. இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தலைவர் குமரன் அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் புதுச்சேரியைச் சேர்ந்தோர் தவிர்த்து தமிழகம், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 32 பேரில் 6 பேர் வெளிமாநிலத்தவர்கள். புதுச்சேரி அரசு பரிந்துரைத்தோரில் … Read more

ஓபிஎஸ் மகனுக்கு பரிவட்டம்; பூசாரி வேட்டியை உருவிய திமுக!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில், மலைமேல் கைலாசநாதர் உடனுறை பெரியநாயகி திருக்கோவில் அமைந்துள்ளது. சிவபெருமானின் வழிபாட்டுத்தலம் என்பதாலும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்ததாக இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதே போன்று திருவண்ணாமலை கிரிவலம் போன்று கைலாசநாதர் கோவிலில் கிரிவலம் சென்றாலும், சிவனின் அருளாசி கிடைக்கும் என்பது பக்தர்கள் ஐதீகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கைலாசநாதர் மற்றும் … Read more

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்தது என்ஐஏ..!!

கோவை: கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய 3 பேரை என்ஐஏ கைது செய்தது.