721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் 721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு டிரஸ்டிகள் இல்லத்திலிருந்து சந்தனம் நிரப்பிய குடங்களை தர்காவுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதிகாலை 2.30 மணிக்கு  புனித சந்தனகுடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் … Read more

திருப்பத்தூர்: படிக்கட்டில் பயணம்.! ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலி.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் படியில் பயணம் செய்த பெண் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ரயில் ஒன்றில் படிக்கட்டில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடியாத்தம் வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உயிரிழந்த … Read more

படிக்க வந்த மாணவ மாணவியர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பாலக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 32 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியிலுள்ள கழிவறைகளை பள்ளி தலைமை ஆசிரியை கீதா கழிவறை பயிலும் பட்டியலின மாணவ மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவ மாணவியின் பெற்றோர்கள் பெருந்துறை போலீசார் மற்றும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலரிடம் புகார் … Read more

பாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் வழிப்பாட்டுத் தலங்கள், ரயில், விமான நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

மதுரை: டிசம்பர் 6-ம் தேதியையொட்டி மதுரையில் முக்கிய வழிப்பாட்டுத் தலங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6-ம் தேதியையொட்டி இந்தியா முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவது வழக்கம். இவ்வாண்டுக்கான டிச.6-ம் தேதியொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன், அழகர்கோயில், பழமுதிர்சோலை, தெப்பக்குளம் மாரியம்மன் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் … Read more

மதுரை மாட்டுத்தாவணியில் பிரமாண்டமான புதிய ஷோரூம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு

மதுரை: தமிழகத்தின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சென்னையை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணியில் 6 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய ஷோரூமை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ்.ராஜரத்னம் திறந்து வைத்தார். ஐம்பது ஆண்டுகளை கடந்து பொன்விழா கண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்  தனது புதிய ஷோரூமை மதுரை மாட்டுத்தாவணியில் நேற்று திறந்து உள்ளது. பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் நிறைந்த தென் தமிழகத்தின் … Read more

‘ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் இலவசம்’-செந்தில் பாலாஜி

ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும், அவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தடை இன்றி வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கம் பகுதி 63-வது வட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை புதுப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, … Read more

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்; ஜி20 ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் உரை

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்; ஜி20 ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் உரை Source link

தமிழகத்தை குப்பைத் தொட்டியாக மாற்றும் கேரளா அரசை கண்டிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்.! 

தமிழகத்தில் பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-  “கேரளா மாநிலம் தூய்மையில் முதலிடம் வகித்துள்ளது. அதேபோல், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலமும் கேரளா தான். மேலும், கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது என்று  தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.  ஆனால், கேரளா அரசு மருத்துவ கழிவுகள் … Read more

ஆளுனருக்கு மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட வேண்டும் என அவசியம் கிடையாது

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அவரை திரும்ப பெற வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி வருகிறார்களே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய தமிழிசை கூறியதாவது: அரசியல் ரீதியாக ‘ஆன்லைன் ரம்மி’ சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று ஆளுனர் சில தகவல்களை சொல்லி இருக்கிறார். ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் … Read more