தமிழகம் முழுவதும் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக். 19-ம் தேதி விதி 110-ன் கீழ், நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர்க் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் 2016-17-ம் ஆண்டுக்குப் பின்னர் மேம்படுத்தப்படாமல், பழுதடைந்த நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான … Read more

நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவைச் சிகிச்சை -மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையின் நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சம்மந்தப்பட்ட மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். குறைபாடுடன் பிறந்த குழந்தை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25)- கார்த்திகா(23) தம்பதியினர் 2018ஆம் ஆண்டு திருமணமாகிய நிலையில் அதே பகுதியில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் மனைவி கார்த்திகாவிற்கு கடந்த (2021)ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் … Read more

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதற்கு பெருந்தொகை லஞ்சமாக வாங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அப்போதைய தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி திமுக எம்எல்ஏ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற வரை சென்ற நிலையில் குட்கா … Read more

பருப்பு, எண்ணெய் விநியோக நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 5 நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் நேற்று வருமான வரிச் சோதனை நடைபெற்றது. பாமாயில், பருப்பு கொள்முதலில் 5 நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகவும், இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், தொடர்ந்து 2 நாட்களுக்கு சோதனை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் பொது … Read more

கமல்ஹாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி: என்ன காரணம்?

கட்சித் தலைவரும், நடிகருமான , உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல், சினிமா, பிக் பாஸ் நிகழ்ச்சி என தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வருகிறார் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இது ஒரு புறமிருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். திரைப்பட பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் … Read more

`தமிழகத்தில் 180 % குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு’- நீதிமன்றத்தின் அதிர்ச்சி தகவல்கள்!

குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர். `இப்போதெல்லாம் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது’ என சொல்லமுடியாத அளவுக்கு, எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு CACL என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 180 % குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். … Read more

விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!!

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் … Read more

நவ.27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவ.27-ம் தேதி வரைமிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனைஒட்டிய தென்மேற்கு வங்கக் கட லில் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, நேற்று காலை முதல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. … Read more