தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழுந்தது. வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு … Read more

தென்காசியில் சோகம்.. எம்எல்ஏ வாகனம் மோதி 4 வயது சிறுவன் பலி..!

தென்காசியில், காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் அதிகமான அளவில் சரல் மண் வெட்டி எடுத்து தென்காசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், அவ்வாறு மணல் ஏற்றிச் சென்ற எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று கீழ சுரண்டை … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை: பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் ஆலோசனை

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உரையாற்றினார். … Read more

Breaking: நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு நோட்டீஸ்..!

அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிரபல நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயங்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் வாரிசு படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வாரிசு … Read more

தூது விட்ட டாக்டர்; மடல் கொடுத்த ஸ்டாலின்… திமுகவில் மீண்டும் சரவணன்?

திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணியிருந்த தொகுதி திமுகவின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பிறகு பாஜக சார்பாக களமிறங்கி தோல்வியடைந்தார். இருப்பினும் பாஜகவில் தொடர்ந்து பயணப்பட்டுவந்தார் டாக்டர் சரவணன். இப்படிப்பட்ட சூழலில் சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தச் சம்பவம் … Read more

எஸ்ஆர்எம் பல்கலை. வளாகத்தில் 2022ம் ஆண்டிற்கான தமிழ் பேராய விருதுகளை வழங்கினார் பாரிவேந்தர் எம்.பி…!!

செங்கல்பட்டு: எஸ்ஆர்எம் பல்கலை. வளாகத்தில் 2022ம் ஆண்டிற்கான தமிழ் பேராய விருதுகளை பாரிவேந்தர் எம்.பி. வழங்கினார். புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – நிவேதிதா லூயிஸ்; பாரதியார் கவிதை விருது – மௌனன்யாத்ரிகா பெற்றனர். அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – முருகேசன், விழியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

திருநள்ளாறு: 4 கால்களுடன் பிறந்த கோழி! வியப்புடன் பார்த்து செல்லும் மக்கள்!

திருநள்ளாற்றில் நான்கு கால்களுடன் பிறந்துள்ள அதிசயமான கோழிக்குஞ்சை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் பூமங்களம் கிராமத்தை சேர்ந்த சக்தி முருகன் என்பவரின் வீட்டில் வளர்த்து வரும் கோழி, சில தினங்களுக்கு முன் 10க்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகளை ஈன்றுள்ளது. அந்த 10-ற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சிகளில் ஒரு கோழிக்குஞ்சு மிகவும் சுறுசுறுப்பாக ஓடி விளையாடி கொண்டு இருந்தது. இந்த நிலையில் அதனை உற்று நோக்கிய போது, அந்த கோழி குஞ்சிக்கு … Read more

பள்ளி வேனில் சென்ற மாணவிகளுக்கு மூச்சு திணறல்.! மதுரையில் பதற்றம்.! 

மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற திருப்பாலை பகுதியில் இருக்கும் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் அப்பள்ளியில் படிக்கின்ற மாணவிகளை அழைத்து கொண்டு சென்றது. அப்போது, கள்ளந்திரி பகுதிக்கு அருகில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த டிரைவர், அங்கு இருந்த சந்து பகுதிக்குள் பள்ளி வாகனத்தை அரை மணி நேரம் நிறுத்தி இருக்கின்றார்.  அப்பொழுது நீண்ட நேரம் பள்ளி வேனில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தால், உள்ளே இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நான்கு பேர் மயக்கமடைந்துள்ளனர்.  … Read more

குட் நியூஸ்.. இவர்களுக்கு 7,500 ரூபாய்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

தொழில் முறை ஆங்கிலத் தேர்வு எழுத உள்ள செவிலிய மாணவ – மாணவியரின் தேர்வு கட்டண சுமையை குறைக்கும் விதமாக, தலா 7,500 ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணிக்கு தொழில் முறை ஆங்கிலத்தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக தமிழக செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 481 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தேர்வு செய்த பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி … Read more