செல்போனை பறித்துக் கொண்டு ஓடும் இரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்!

சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள உறவினர்களுக்கு கொடுக்க நேற்று சென்னையில் இருந்து அரக்கோணம் வரை மின்சார ரயிலில் வந்த பிறகு, அரக்கோணத்தில் இருந்து வேலூர் டவுன் ஸ்டேசனுக்கு லிங்க் இரயில் மூலம் நேற்று மாலை வேலூர் வந்து கொண்டிருக்கும் போது மகளிருக்கான பெட்டியில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் பொது பெட்டியில் ஏரிய இளைஞர் ஒருவர், மகளிருக்கான பெட்டியில் சென்னையை சேர்ந்த இளம் … Read more

ஒரு வயது குழந்தைக்கு தவறான சிகிச்சையா? அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

மதுரை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவரது ஒரு வயது ஆண் குழந்தைக்கு, நாக்கு உள்ள இடத்தில் சதை துண்டு போல் தொண்டைக்குள் இருந்தது. இப்பிரச்னை குறித்து தனது மகனுக்கு  மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். இதில், தொண்டையில் இருந்த அந்த சதை பகுதியை நரம்பு மூலம் இழுத்து கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு தனது மகனை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கடந்த 21ம் தேதி … Read more

மாணவனின் பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் ஈடுபட்ட சக மாணவர்கள் – சென்னையில் அதிர்ச்சி!

கே.கே நகரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், கே.கே நகரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாண்டிச்சேரியில் படித்து வந்த சிறுவன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு குடிப்பெயர்ந்து இந்த பள்ளியில் சேர்ந்து … Read more

எம்.எல்.ஏ-வின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு.!

காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் இருந்து சரளை மண் வெட்டி எடுத்து தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் மணல் ஏற்றி சென்ற காங்கிரஸ் எம் எல் ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று கீழ் சுரண்டை பிள்ளையார் கோவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த … Read more

உதயநிதி மீது 22 வழக்கு.. வெற்றியை செல்லாது என அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

உதயநிதி ஸ்டாலின் மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் தேர்தலில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக … Read more

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்: ஒழுங்கு நடவடிக்கை குழு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரனை கட்சியிலிருந்து தற்காகலிக நீக்கி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்தவாரம் அக்கட்சியைச் சேர்ந்த இரு குழுவினர் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரன் மீதும், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவராக இருக்கும் … Read more

ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்: காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவிப்பு!

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனுக்கு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஒழுங்கு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ராமசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். 63 மாவட்ட தலைவர்கள் இணைந்து ரூபி மனோகரனுக்கு எதிராக ஒரு புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது நிரந்தர நீக்கம் இல்லை என்றும் தற்காலிக நீக்கம் என்றும் தெளிவுபடுத்தினர். “15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷவசமானது. … Read more

ரேஷனில் போடப்படும் போலி பில்; கூட்டுறவுத்துறை கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் நியாய விலையில் பொருட்களை மாதந்தோறும் பெற்றுச் செல்கின்றனர். எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் வெளி மார்க்கெட்டை காட்டிலும் மிக குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அரிசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.  ரேஷனில் புகார்  இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளில் போலி பில் போடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது வாடிக்கையாளர்கள்  வாங்காத பொருட்களுக்கும் … Read more

பழனி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 2000 இலவச தங்கும் கூடங்கள் அறிமுகம்

பழனி: பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான 2000 பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இலவச தங்கும் கூடங்கள் உள்ளன. அவற்றை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 1) சின்னக்குமாரர் விடுதி (வின்ச் நிலையம் எதிரில்), 2) பழைய நாதஸ்வர பள்ளி (ரோப்கார் நிலையம் எதிரில்) மற்றும் 3) சுற்றுலா பேருந்து நிலையம் (கிழக்கு கிரிவீதி) ஆகிய இடங்களில் 2000 பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு தங்கும் கூடங்கள் உள்ளன. இலவச … Read more