மாணவி பிரியா மரணம்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாக்டர்கள் தலைமறைவு..!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து, செல்போன் சிக்னல்களை வைத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17). இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில், கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது … Read more

குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணினியனின் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த மலை பாம்பு, அங்கிருந்த கோழிகளை விழுங்கி விட்டு படுத்திருந்த நிலையில், இதுகுறித்த தகவலின் பேரில் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது. Source link

ஆன்லைன் விளையாட்டுகள் | அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்: உயர் நீதிமன்றம்

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை … Read more

ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய iPhone தயாரிப்பு ஆலை… வந்தது ஜாக்பாட் அறிவிப்பு!

இந்தியாவில் ஃபாக்ஸ்கான், ஃபெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் புதிய ஐபோன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை 2 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாட்டிலேயே மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சீர்காழியில் மழை நீரில் மூழ்கிய புத்தகங்களை வெயிலில் காய வைத்த மாணவி: புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை

சீர்காழி:சீர்காழி பகுதியில் மழைநீரில் மூழ்கிய புத்தகங்களுக்கு பதிலாக புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் வசிக்கும் சுந்தரவதனம் என்பவரது மகள் பரணிஸ்ரீ. இவர் ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் வீட்டில் இருந்த புத்தகங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகி விட்டன. தண்ணீரில் மூழ்கி வீணான புத்தகங்களை மாணவி … Read more

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பும், ஹெட் டிஜிட்டல் ஒர்க்ஸ், ஜங்லி கஸ், பிளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த … Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17/11/2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18/11/2022: தமிழ்நாடு புதுவை மற்றும் … Read more

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி..!!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான செகண்ட் ஷோ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சுதீஷ் பப்பு. இதையடுத்து பல்வேறு ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கவனம் ஈர்த்தார்.ஒளிப்பதிவாளர் சுதீஷுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அமிலோய்டோசிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நோய் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், ஒளிப்பதிவாளர் சுதீஷ் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44.ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்புவின் மரணம் மலையாள திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது … Read more

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் – போக்குவரத்துத்துறை உத்தரவு

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டுமென, போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, அறிவுரைகளை வழங்கி, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்ல வேண்டுமென்றும், சாலை விதிகளை பின்பற்றி, பேருந்தை கவனமாக இயக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாயை அதிகரிக்குமாறும் … Read more