குக்கர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள அமைப்பு!!

கர்நாடகா மாநிலம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஒரு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை கார் வெடிப்பை தொடர்ந்து மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணித்த நபர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் வெடித்தது … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு பயிற்சியுடன் தொழிற்திறன் பயிற்சி- முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகள் மூலம் தொழிற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில்பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்டபகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக … Read more

சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்: எம்எல்ஏ, கலெக்டர் தொடங்கி வைத்தனர்

செம்பனார்கோயில்: சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணியை எம்எல்ஏ நிவேதா முருகன், கலெக்டர் லலிதா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை பெய்தது. இதனால் சம்பாநடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் … Read more

அரசியல்வாதிகளின் சிம்மசொப்பனம்.. தேர்தல்களில் கறார்.. யார் இந்த டி.என் சேஷன்?

அரசியல்வாதிகளின் சிம்மசொப்பனம்.. தேர்தல்களில் கறார்.. யார் இந்த டி.என் சேஷன்? Source link

#BigBreaking :: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்க மத்திய அரசு முடிவு?!

தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக ஒடிசா ஆளுநர் கணேஷி லால் நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது!  பாஜக ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநரின் அசைவுக்கு ஏற்ப மாநில அரசு செயல்பட வேண்டும் என மத்திய பாஜக அரசு எதிர்பார்க்கிறது. சமீபத்தில் மேற்கு வங்க ஆளுநராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கொள்கை வகுப்பாளரரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர்.சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் … Read more

பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை

மோர்பியில் கடந்த மாதம் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்தனர்.கம்பி அறுந்து விழுந்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்துக்கு பாலம் பராமரிப்பு நிறுவனமே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையில்,. விபத்துக்குப் பிறகு அனாதை ஆனவர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடும் சொற்பமே என்று கூறியுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு … Read more

ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூல் – 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்

சென்னை: ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் கட்டணம் செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், … Read more

மின்சாரம் தாக்கி கர்ப்பிணி மனைவி சாவு புதைகுழியில் சடலம் மீது அமர்ந்து நிர்வாண பூஜை செய்த கணவன்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த 5 மாத கர்ப்பிணி மனைவியின் சடலத்தின் மீது உப்பு போட்டு அமர்ந்து அகோரிபோல கணவன் நிர்வாண பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சின்ன பசலிகுட்டையைச் சேர்ந்தவர் ராஜாதேசிங்கு. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பூர்ணிமா (25) என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பூர்ணிமா, கடந்த 22ம் தேதி மாட்டு கொட்டகையை வாட்டர் … Read more

ஏஜெண்ட் கண்ணாயிரம், பட்டத்து அரசன்.. நவம்பர் 25-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

ஏஜெண்ட் கண்ணாயிரம், பட்டத்து அரசன்.. நவம்பர் 25-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன? Source link

திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் வெட்டி படுகொலை! கொலையாளிகளை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திருப்பத்தூர் மாவட்ட நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் கலிகண்ணன். இவர் திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வேப்பாலம்பட்டி என்ற இடத்தில் வெங்கடேஸ்வரா கிரஷர் என்ற பெயரில் ஜல்லி உடைக்கும் நிறுவனத்தின் அருகில் இன்று காலை ஆள் நடமாட்டம் இல்லா … Read more