சூரியனை சுற்றி ஒளி வட்டம்: வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி விளக்கம்

கொடைக்கானல்: வானில் சூரியனை சுற்றி இன்று காலை ஒளிவட்டம் தெரிந்தது. இந்நிகழ்வை கொடைக்கானல் பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் இன்று காலை சூரியனை சுற்றி ஒளி வட்டம் தென்பட்டது சில மணி நேரங்கள் மட்டுமே இந்த ஒளிவட்டம் தென்பட்டது. இந்நிகழ்வை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இது குறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி கூறுகையில், ‘‘சூரியனையோ அல்லது நிலவை சுற்றியோ தென்படும்  … Read more

ஆற்காடு: இரவோடு இரவாக லாரிகளில் கடத்தப்படும் அரியவகை சிலை வடிக்கும் கருங்கற்கள்!

ஆற்காடு அருகே அரியவகை சிலை வடிக்கும் கருங்கற்களை சமூக விரோதிகள் இரவோடு இரவாக லாரிகளில் கடத்துவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள துர்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை மலைப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் ஜெலட்டின் வெடிவைத்து பாறைகளை தகர்த்து ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் பாறைகளை சென்னை, … Read more

கர்ப்பிணிகள் நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் நமது வருங்காலம் சிதைந்து விடும் – பி.டி.ஆர்

கர்ப்பிணிகள் நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் நமது வருங்காலம் சிதைந்து விடும் – பி.டி.ஆர் Source link

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 64 நபர்களை வெளிநாடுகளிலிருந்து மீட்டு வந்துள்ளோம் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்.!

இன்று திருச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது;- “வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். ஏனெனில், வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான வேலைகளை செய்வதற்கு வற்புறுத்தப்படுவதால்தான், அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  அதன் அடிப்படையில், கடந்த … Read more

சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்!!

யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தை ஜாமீன் வழங்கபட்ட நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். சென்னை உயர்திமன்ற நீதிபதி சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு … Read more

கனமழை எச்சரிக்கை | கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் 

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக அவரச கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள காரணத்தால், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள … Read more

வெறும் 3% வாக்குகளை வைத்து கொண்டு… சீமானை சீண்டிய மாணிக்கம் தாகூர்!

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடி உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவர் நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். … Read more

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் பூட்டப்பட்டுள்ள கழிப்பறையால் பக்தர்கள் அவதி!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் பஞ்சினும் மெலடியாள் உடனுறை அக்னிபுரீஸ்வரர் பொங்கு சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் இங்கு சனீஸ்வரன் பொங்கு சனியாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஆலயத்தின் குபேர மூலையில் கையில் ஏர் கலப்பையுடன் சனீஸ்வரன் தனி சன்னதியாக காட்சியளிக்கிறார். அவருக்கு நேர் எதிரே காலபைரவர் இருப்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும். நளச்சக்கரவர்த்தி திருநள்ளாறில் சனீஸ்வரன் வழிபட்டு சனி தோஷம் நீங்க பெற்றாலும், இந்த திருக்கொள்ளிக்காடு தளத்தில் … Read more

அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தில் ஆபத்தான நிலையில் மேநீர் தேக்கத்தொட்டி: புதிதாக அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு: அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேநீர் தேக்கத்தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணைக்கட்டு ஒன்றியம் மருதவல்லிபாளையம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மருதவல்லிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே மேநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. தொடர்ந்து, ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு … Read more

ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 9 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது!

செம்மரக்கட்டைகளை கடத்தியதாக ஒன்பது தமிழர்களை கைது செய்துள்ள ஆந்திர போலீஸார், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக டாடா சுமோ வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் தமிழக எல்லையை ஒட்டி உள்ள அன்னமையா மாவட்டம் சுண்டுப்பள்ளியில் இருந்து வி.கோட்டா வழியாக டாடா சுமோ வாகனத்தில் செம்மர கட்டைகளை கடத்திச் சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 9 கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பலமநேரி டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்பி ரிஷாந்த் ரெட்டி உத்தரவின்படி, வி.கோட்டா எஸ்.எஸ்.ராம்புபால் தலைமையிலான போலீஸார், … Read more