#பெரம்பலூர் : குறைந்த விலையில் நகை.. ஆசைகாட்டி அபேஸ் செய்த டீச்சர்.!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருணகிரி மங்கலத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற 45 வயது நபர் சேலம் மாவட்ட காவல்துறை ஆய்வாளரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார்.  அந்த புகார் மனுவில், “தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தன்னை சியாமளா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு குறைந்த விலையில் நகைகள் வாங்கி தருவதாக ஆசை காட்டி என்னிடம் 25 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பித் தரவும் இல்லாமல், நகை வாங்கி தரவும் இல்லாமல் … Read more

ஐயப்ப பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து!!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 44 பக்தர்களுடன் தனியார் பேருந்து ஒன்று சபரிமலைக்கு சென்றுகொண்டிருந்தது. பக்தர்கள் உற்சாகமாக பஜனை பாடியபடி சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பேருந்து பத்தனம்திட்ட மாவட்டம் லாஹ அருகே விளக்கு வஞ்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 வயது சிறுவன் மணிகண்டன் உயிரிழந்தான்.இந்த விபத்தில் 18 பேர் யமடைந்தனர். காயமடைந்தவர்கள் பத்தனம்திட்டா அரசு பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து.. பயணித்த பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனமும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கை நோக்கி சென்று கொண்டிருந்த  இருசக்கர வாகனத்தின் மீது முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி  சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்திக், அன்பு, போதும் பொண்ணு ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை … Read more

7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு; மத்திய அரசின் மறு சீராய்வு மனுவை வரவேற்கிறேன்: நாராயணசாமி

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, கட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கினர். பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி … Read more

டெல்லியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு செக் – எடப்பாடி பழனிசாமி மூவ்..!

அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஒற்றைத் தலைமை அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எதிர்ப்பு அதிமுக … Read more

கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி சடலத்தை சுமந்துசென்ற மக்கள்: சிறுபாலம் அமைக்க கோரிக்கை

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன்(40), விவசாயி. இவரது மனைவி சந்திரா(35). இவர்களுக்கு யுவராஜ்(14) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரசுராமன் நேற்று இறந்தார்.   இதையடுத்து உறவினர்கள் பரசுராமன் சடலத்தை கமண்டல நதிக்கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் கொண்டு சென்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கமண்டல நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் செண்பகத்தோப்பு அணைக்கட்டிலிருந்து … Read more

குப்பை கொட்டும் இடத்தில் புத்தகப்பைகள்.. அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத அவலம்

ஆம்பூர் அருகே போதிய வகுப்பறைகள் இல்லாததால் அரசு மேல் நிலைப்பள்ளி பகுதி நேர பள்ளியாக செயல்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டும் இடத்தில் புத்தகப்பையை வைத்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் இயங்கிவந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2013 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண், பெண் இருபாலர் என 1300 … Read more

ஆண்களுக்கு ஒரு தினம் இருக்குனு நினைச்சாலே ஆனந்த கண்ணீர் வருது; ட்ரெண்டிங் மீம்ஸ்

ஆண்களுக்கு ஒரு தினம் இருக்குனு நினைச்சாலே ஆனந்த கண்ணீர் வருது; ட்ரெண்டிங் மீம்ஸ் Source link

சேலம் : பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்.!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாரிமுத்து என்பவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சேலம் மாவட்ட … Read more

கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறை 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்பு விழா கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று நடைபெற்றது. கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் வல்லவன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் கலந்து கொண்ட னர். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியது: ‘‘புதுச்சேரியில் பாண்டெக்ஸ் தயாரிப்பு பொருட்களுக்கு தனி மவுசு இருந்தது. சர்க்கரை ஆலை லாபகரமாக … Read more