தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கு : நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார் சவுக்கு சங்கர்..!

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை மிரட்டி 50 லட்ச ரூபாய் கேட்ட வழக்கில், சாட்சி விசாரணைக்காக வந்த சவுக்கு ஷங்கர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2016-ம் ஆண்டு,செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி குறித்து சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகவும், 50 லட்சம் பணம் கேட்டு அவரை மர்ம நபர் செல்போனில் மிரட்டியதாகவும், போலீசில் புகாரளிக்கப்பட்டது. தனக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததாக கூறி மகாலட்சுமி தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் … Read more

திருமங்கலம், சிவகாசி பட்டாசு ஆலைகளில் 7 பேர் பலியான வழக்கு: 4 பேருக்கு முன்ஜாமீன் மறுப்பு

மதுரை: திருமங்கலம், சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலியான வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் 4 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில், அனுசியாதேவிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 10ம் தேதி நடந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் அனுசியாதேவி, அவர் கணவர் வெள்ளையன், ஆலை மேற்பார்வையாளர் பாண்டி ஆகியோர் சிந்துபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் வெள்ளையன், … Read more

இதுக்கு இல்லியா சார் எண்டு..! – மீண்டும் மாடு மீது மோதிய 'வந்தே பாரத்' ரயில்!

வந்தே பாரத் விரைவு ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரயிலின் முன்பக்கம் சேதம் அடைந்தது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டிற்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு பகுதிக்கும் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி குஜராத் – மகாராஷ்டிரா இடையே இயக்கப்பட்ட ரயிலில் எருமை மாடுகள் மோதியதில் … Read more

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்க

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களுக்குக்கு  கடிதம் எழுதியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் இந்த பரிந்துரைக்கு சென்னை உயர் நீதிமன்ற … Read more

வன்கொடுமை நிகழ்வுகள் ஏற்படாதவாறு காவல்துறை, அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி பகலவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் குறித்தும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்ட விபரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அளிக்கும் தீருதவி, ஓய்வூதியம், வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் … Read more

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனம் – 8 மாத கர்ப்பிணி பலி

இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனத்தை (INS pallava) இயக்கி வந்த ஓட்டுநர், கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரி எதிரே உள்ள காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு (INS pallava) சொந்மான வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர், எதிரே சென்ற இருசக்கர வாகனத்தின்மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் … Read more

கணவருடன்.. பீச்சில் கண்ணாமூச்சி ஆடி.. தீர்த்துக்கட்டிய மனைவி.. பகீர் சம்பவம்.! 

சென்னை திருவான்மியூர் பீச்சில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தார். கதிரவன் என்ற பொறியாளர் கொலை செய்யப்பட்டார்.  இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மனைவி கூறிய போது, “நானும் எனது கணவர் கதிரவனும் கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம். அப்போது எனது தாலிச் செயினை கொள்ளையர்கள் படித்து சென்று விட்டதாக கூறினேன்.  அப்போது எனக்கு முன்னாள் காதலனாக இருந்த அந்தோணி ஜெகன் என்பவர் கணவரை அறிவாளால் வெட்டி … Read more

தமிழகத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிப்பு…

விவசாயிகள், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய 21-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் காப்பீடு செய்ய இயலாத விவசாயிகளின் நலன் கருதி பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, 27 மாவட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்பித்து 21-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம் என மத்திய வேளாண் உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக வரும் … Read more