கம்பம் அருகே சுருளி அருவியில் குடிமகன்களால் தொல்லை: போலீசார் கண்காணிக்க கோரிக்கை

கம்பம்: கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குடிமகன்கள் அட்டகாசத்தை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். சுருளி அருவிக்கு … Read more

புதுக்கோட்டை: சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது; 650 மது பாட்டில்கள் பறிமுதல்

மிலாது நபி தினத்தை முன்னிட்டு இன்று அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து 650 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மிலாது நபி திருநாளை முன்னிட்டு இன்று அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் … Read more

உதயசூரியன் சின்னம் கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் கமிஷனுக்கு கடிதம்

உதயசூரியன் சின்னம் கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் கமிஷனுக்கு கடிதம் Source link

ஆசிரியர் தகுதி தேர்வு (TET EXAM)  தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு குறித்த விபரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more

டோல்கேட்டில் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து.. காரணம் என்ன தெரியுமா..?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் வந்தபோது மின்னணு முறையில் கட்டணம் செலுத்த பாஸ்டேக்கில் பணம் இல்லை என அந்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. பாஸ்டேக் உள்ள ஒரு பேருந்து பழுதானதால் அந்த பேருந்திற்கு பதிலாக இந்தப் பேருந்து விடப்பட்டுள்ளது. இதற்கு பாஸ்டேக் கட்டணம் முடிந்திருப்பது பற்றி தெரியாது என பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர், … Read more

ஆளுநர் தமிழிசையின் மக்கள் சந்திப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது: புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு

புதுச்சேரி: மக்கள் குறைகளை நேரடியாக எடுத்துரைக்கலாம் என்ற ஆளுநர் தமிழிசையின் அறிவிப்பு மக்களால் தேர்வான ஆட்சிக்கு ஒரு இணை அரசாங்கம் நடப்பது போன்ற சூழலை உருவாக்கும். இது மக்களால் தேர்வான அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆளும் கூட்டணியிலுள்ள அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கட்சித் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ”புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு என்பது நாளுக்கு நாள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மக்கள் … Read more

சட்டமன்ற கூட்டத்தில் இருக்கு… சீறும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.!

மதுரை காந்தி மியூசியத்தில் அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் காந்தி மீயூசிய வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று வளாகத்தில் அமைந்துள்ள புதர் மண்டிய பகுதிகளை தூய்மை செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியது: அதிமுகவின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சிறந்த நகரங்களுக்கான விருதினை மதுரையும், சென்னையும் பெற்று இருந்தது. ஆனால், சமீபத்தில் 10 லட்சம் மக்கள் … Read more

வைகை அணை நீர்மட்டம் சரிந்ததால் 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: விவசாயிகள் ஏமாற்றம்

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் சரிந்த நிலையில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மதகுகள் மூடப்பட்டது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் நிரம்பிய வைகை அணையில் இருந்து ஒருமாதத்திற்கும் மேலாக ஆற்றில் உபரியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை … Read more

மேட்டூர்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியாரை தேவாலயத்தில் பணியமர்த்த எதிர்ப்பு

மேட்டூரில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியாரை மீண்டும் தேவாலயத்தில் பணியமர்த்த எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் தூய மரியன்னை கிறிஸ்துவ ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்காளர்களாக உள்ளனர். இந்த ஆலயத்தில் 4- வருடத்திற்கு மேலாக குருசடி சகாயராஜ் (55) என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆலயத்திற்கு வந்த பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருப்பதாக கூறி … Read more