தமிழ்நாடு அரசு கலைப்பு?; பாஜக பகீர் ஆலோசனை!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் அனுமதி வழங்குமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததால், அந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனுவை … Read more

தருமபுரம் ஆதீனத்தின் சொத்தை மீட்ககோரி வழக்கு: திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ஆஜராக ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: திருச்செந்தூர் கோயில் அருகே ஆக்கிரமித்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்தை மீட்க நடவடிக்கை கோரிய வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்தை ஆக்கிரமித்து கொண்டு வெளியேற மறுக்கின்றனர் என்று மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெற்றோரால் கட்டாய திருமணம் – கணவனை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்

பெற்றோரால் கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்ட இளம்பெண் கணவனை விட்டுவிட்டு காதலனை திருமணம் செய்துகொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி(18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து(22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் 18 வயதான ஜான்சிராணிக்கு கடந்த ஆண்டு அவரது உறவினரான கிளிண்டன் என்பவரை பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த … Read more

டாடா பஞ்ச் கேமோ எடிஷன் அறிமுகம்.. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா..?

பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் மாடல் காரில் கேமோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அடர் பச்சை நிறத்தில் இது வந்துள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.6.85 லட்சம். இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.8.63 லட்சம். காஸிரங்கா எடிஷனைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பு எடிஷனாக கேமோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட தாக வந்துள்ளது. 86 ஹெச்.பி. திறன் … Read more

‘அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணியினருக்கு பணி’ – கவுன்சிலர் கோரிக்கைக்கு மேயர் பிரியா அளித்த பதில்

சென்னை: அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் ராணி ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (செப்.29 ) நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நேரமில்ல நேரத்தில் பேசிய 98-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி, வார்டு 4-இல் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் 10 சிப்பங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதால் பணி … Read more

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை: விசிகவுக்கு கிடைத்த வெற்றி – திருமா ஓப்பன் டாக்!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு உயர் … Read more

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது: ஐகோர்ட் மதுரைக்கிளை

மதுரை: மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு என்பது … Read more

ஃபேக்ட்டரிக்குள் நுழைந்து ஜாலியாக சாக்லெட் சாப்பிடும் கரடி – வெளியான சிசிடிவி காட்சிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள தனியார் ஹாேம் மேட் சாக்லெட் (HOME MADE CHOCOLATE) தயாரிக்கும் ஃபேக்ட்டரிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த சாக்லெட்களை உண்டு செல்வது தொழிற்சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. … Read more

தலைவர் போட்டியில் இருந்து விலகல்.. அசோக் கெலாட் அறிவிப்பு..!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியிருந்தார். இதன் மூலம் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராக வருவார் என்ற வதந்தி வலுத்தது. இருப்பினும், சச்சின் பைலட்டை முதல்வராக்கும் தலைமையின் முடிவை எதிர்த்து கெலாட் தரப்பைச் சேர்ந்த சுமார் 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால், ராஜஸ்தானில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு | “சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவு” – சீமான்

சென்னை: “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச் சரியாக முடிவெடுத்த … Read more