சவுக்கு சங்கருக்கு ஒரு நீதி, குருமூர்த்திக்கு ஒரு நியாயமா?- கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

பிரபல பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. கடந்த ஜூலை 22ஆம் தேதி ”ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது” என யூடியூப் சேனல் ஒன்றுக்கு கடந்த ஜூலை 22 ஆம் தேதி அளித்திருந்த நேர்காணலில் பகிரங்கமாக கூறியிருந்தார் சவுக்கு சங்கர். ஒட்டுமொத்த நீதித் துறையையே அதிர செய்த அவரது இந்த கருத்துக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற … Read more

புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க கோரும் சீமான்

இரட்டைமலை சீனிவாசனின் 77 வது நினைவு நாளை முன்னிட்டு காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள ரெட்டைமலை சீனிவாசன் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அம்பேத்கருக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுக் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்றும் புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என்றார். தென்காசி, பாஞ்சாகுளம் கிராமத்தில் குழந்தைகளிடம் ஜாதி பாகுபாடு காட்டும் செயல் குறித்து சமூகநீதி, பெரியார் … Read more

புதர்கள் சூழ்ந்து காணப்படும் ஊர் பெயர் அறிவிப்பு பலகைகள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், புதர்கள் சூழ்ந்த நிலையில் ஊர் பெயர்களுடன் கூடிய அறிவிப்பு பலகையை பராமரிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடுகளான, பாலக்காடுரோடு மற்றும் உடுமலைரோடு, தாராபுரம்ரோடு, வால்பாறைரோடு, கோவைரோடு மட்டுமின்றி கிராமபுற ரோட்டோரத்திலும் சுமார் 15ஆண்டுகளுக்கு முன்பு வரை, கான்கிரிட்டாலான ஊர்பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. ரோட்டிலிருந்து குறிப்பிட்ட மீட்டர் தூரத்துக்கு இந்த பெயர்கள் எழுதப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக, பல இடங்களில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டதால், சில கான்கிரீட்டாலான … Read more

மதுரையில் தரை துடைக்கும் 'மாப்' தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

மதுரை: மதுரையில் தரை துடைக்கும் மாப் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேமதடைந்தன. மதுரை மாவட்டம், எம்.கரிசல்குளம் அருகிலுள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், அவனியாபுரம் அருகே மதுரை – திருமங்கலம் நான்கு வழிச் சாலையில், தனியார் கல்லூரிக்கு செல்லும் சந்திப்பு பகுதியில் என்பிகே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் சிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு வீடு, வர்த்தக நிறுவனம், மருத்துவமனைகளுக்கான தரையை சுத்தம் செய்யும் மாப்புகள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கம் … Read more

பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை களைய நடவடிக்கை: ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தல்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குத் தின்பண்டம் தரக்கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஞ்சாகுளத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் எஸ்.சி மாணவர்களை பெஞ்ச் மீது அமரவிடாமல் தரையில் உட்காரச் செய்கிறார்கள் என்பதும், அவர்கள் சத்துணவு சாப்பிட தட்டு தரப்படுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த … Read more

அதிமுகவை அழிக்க வந்த சூனியம் எடப்பாடி பழனிசாமி – கோவை செல்வராஜ் விமர்சனம்

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்தில் எந்த கோரிக்கைக்கு சென்றாரோ அந்த கோரிக்கையை மறந்துவிட்டு கட்சியினுடைய மூத்த தலைவர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை மிகவும் தரமற்று பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.பண்ருட்டி ராமச்சந்திரன்  அரசியலுக்கு வரும்போது எடப்பாடி அரை  டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருந்திருப்பார். … Read more

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் கைதான 2 பேர் ஊருக்குள் நுழையத் தடை

நெல்லை: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் கைதான 2 பேர் ஊருக்குள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளது. ராமச்சந்திரமூர்த்தி, மகேஷ்வரன்  ஆகியோர் பாஞ்சாங்குளம் கிராமத்துக்குள் வர தடை விதித்து நெல்லை போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் பலி.!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம் குருவன்கோட்டை கீழத்தெருவை சேர்ந்த முத்து என்பவரது மகள் அன்னபுஷ்பம்(55). இவர் குருவன் கோட்டை ஆலங்குளம் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக குருவன்கோட்டை பகுதியை சேர்த்து மாரியப்பன் என்பவர் ஓடி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக திடீரென அன்னபுஷ்பம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அன்னபுஷ்பத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளத்தில் உள்ள … Read more

தமிழக பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் மறுசீரமைப்பு: கூடுதலாக பதவிகள் உருவாக்கி அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை: தொடக்கக் கல்விக்கு மாவட்டஅளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு நிலவுகிறது. இது தவிர, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், அதைதக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெறவும் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதேபோல, சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க ஏதுவாகபள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை … Read more

'எம்.ஜி.ஆர் உயில் படி அதிமுக யாருக்கு சொந்தம்?' மாஜி எம்.எல்.ஏ செளந்தர்ராஜன் பகீர் தகவல்!

அக்டோபர் 17ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக எம்.ஜி.ஆருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர்ராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சௌந்தர்ராஜன்: “இந்த கட்சி ஆரம்பிப்பதற்கு முதல் காரணம் நாட்டில் எங்கே பார்த்தாலும் அச்சம் நிலவுகிறது. என்ன பரிகாரம் என்பது குறித்து தேடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி தேடுபவர்களுக்கு இந்த இயக்கம் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இயக்கத்தை நாங்கள் துவங்கி உள்ளோம். இந்த கட்சியின் நோக்கம் எதிர்காலத்தில் லஞ்சமும், … Read more