குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூர் வாலிபர் உடல் இன்று திருச்சி வருகை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் (41). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பி.காம் பட்டாதாரியான முத்துக்குமரன், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால் தனியார் ஏஜென்சி மூலம் கடந்த 3ம் தேதி குவைத்துக்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் 7ம்தேதி குவைத்தில் முத்துக்குமரன் இறந்து விட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். வப்ரா என்ற இடத்தில் உள்ள பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வலியுறுத்தியுதாகவும், அதற்கு … Read more

இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 282 பேர் பாதிப்பு – சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 282 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது எச்1என்1 (H1N1) எனப்படும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அதிகம் பரவிக்கொண்டிருப்பதாகவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா … Read more

பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனத்திற்குள் விரட்டியபோது யானை தாக்கி லாரி டிரைவர் பலி

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் அருகே காட்டு யானை தாக்கி லாரி டிரைவர் பலியானார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை, பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் நடமாடியது. அப்போது பண்ணாரி வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த லாரி டிரைவர்கள் சேர்ந்து காட்டு யானையை விரட்ட முற்பட்டனர். வெகு நேரம் போராடியும் காட்டு … Read more

அண்ணாவை கொண்டாடுவதில் மல்லுக்கட்டிய தி.மு.க – அ.தி.மு.க; மணப்பாறையில் பரபரப்பு

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளில் அவர் யாருக்கு சொந்தம் என்பது போல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தி.மு.க, அ.தி.மு.க.,வினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை உருவாக்கியது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்தநாளை தி.மு.க, அ.தி.மு.க.,வினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதையும் படியுங்கள்: சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு தமிழகத்தின் பல இடங்களில் உள்ள அண்ணாவின் சிலைக்கு … Read more

அதிகாலை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்.. குப்பையில் கிடந்த அதிர்ச்சி.! கோவையில் பரபரப்பு.! 

கோவை மாவட்டம் துடியலூர் அருகே வி.கே.எல் நகர் இருக்கிறது. இங்கு குடியிருப்புகளில் நிறைய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் அன்றாடம் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவார்கள்.  வழக்கம் போல இன்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த குப்பை தொட்டி ஒன்றில் ஒரு மனித கை கிடந்தது. இதை பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  இந்த தகவலின் பெயரில் விரைந்து … Read more

மதுரை | முதல்வர் விழாவில் இருக்கைகள் இல்லை; திமுக கவுன்சிலர்கள் அதிருப்தி

மதுரை: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்த காலை உணவுத்திட்ட தொடக்க விழாவில் இருக்கைகள் இல்லாமல் தவித்த மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் தங்களை விழாவுக்கு அழைத்துவிட்டு அவமானப்படுத்தியதாக மேயர், அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். முதல்வரின் இந்த காலை உணவுத் திட்ட தொடக்க விழா மதுரை கீழ அணணாதோப்பு மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப் … Read more

ஓடும் வேனில் திடீர் தீ தந்தை, மகள் தப்பினர்

கும்பகோணம்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் கும்பகோணம் சாலையில் வசிப்பவர் ராஜ்மோகன் (60). பஞ்சர் கடை வைத்துள்ள இவரது வீட்டில் குளியலறை கட்டும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ராஜ்ேமாகன், மகள் பவித்ராவுடன் (23) டைல்ஸ் வாங்குவதற்காக வேனில் கும்பகோணம் சென்றார். திருமங்கலச்சேரியை சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் (51) வேனை ஓட்டி சென்றார். கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் டைல்ஸ் வாங்கி விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். தாராசுரம் பகுதி தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, வேனில் … Read more

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் 8 பேர் உயிரிழப்பு? 

சென்னை: தமிழகத்தில் எச்1என்1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக நம்பத்தகுந்த மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக எச்1என்1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, இந்தக் காய்ச்சலால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று எழும்பூர் குழுந்தைகள் நல மருத்துவமனை ஆய்வு செய்த மருத்துவத் துறை அமைச்சர் … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை: உடனடியாக ஜெயிலில் அடைக்க உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து, உடனடியாக மதுரை சிறையில் அடைக்க ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதித்துறை பற்றி சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ல் தனியார் யூடியூப் சேனலில் பேட்டி அளித்திருந்தார். இதனால் அவருக்கு எதிராக, ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த வாரம் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தபோது, இது … Read more

முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு: ஏபிவிபி அமைப்பினரின் மனு தள்ளுபடி

சென்னை: முதல்வர ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏபிவிபி அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்ட பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் இதுபோன்ற மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more