புதுச்சேரி | ‘55 மாதங்களாக ஊதியமில்லை’ – வயிற்றில் ஈரத்துணி அணிந்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: 55 மாதங்களாக ஊதியம் தராததால் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே வயிற்றில் ஈரத்துணி அணிந்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவின் ஊழியர்கள் நலச்சங்கத்தினர் (ஏஐடியூசி) சட்டப்பேரவை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 55 மாத சம்பளம் வழங்க வேண்டும், தீபாவளி பஜார் மானியத்தொகை ரூ.62 லட்சம் வழங்க வேண்டும், பாப்ஸ்கோ ரேஷன் கடைகளுக்கு 6 ஆண்டு வாடகை பாக்கியை தர வேண்டும், மதுபான ஆலைகளை தனியாருக்கு வழங்கி பாப்ஸ்கோவை … Read more

முதல்வர் ஸ்டாலின் எடுத்த முயற்சிக்கு வெற்றி: நரிக்குறவர் இன மக்கள் நன்றி!

நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (15.9.2022) விருதுநகர் விருந்தினர் மாளிகையில், நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து, நரிக்குறவர் இன மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை … Read more

சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று பாராட்டும் அதிமுகவின் ஜெயக்குமார்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ்  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல கருத்துக்களை தெரிவித்தார். அண்ணாவை ஒருமையில் திட்டி … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணிராஜ் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

செல்போனில் பேசியபடி பைக்கில் வந்த இளைஞர் டிராஃபிக் போலீஸை தாக்கியதால் சேலத்தில் பரபரப்பு

வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலரை, செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தாக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர் தெற்கு போக்குவரத்து பிரிவில் போக்குவரத்துக் காவலராக பாண்டியன் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே பொன்னம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜன் என்பவர் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். … Read more

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி… சிலர் ஆணவத்தால் சிக்கித் தவிக்கிறது – டிடிவி தினகரன்

அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரயாதை செலுத்தினார். தொண்டர்களுடன் வந்த டி.டி.வி தினகரன் அண்ணா உள்ளிட்ட தலைவருக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில். அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். மேலும் இன்னொரு … Read more

வண்ணாரப்பேட்டை சிறுமி வழக்கில் 21 பேர் குற்றவாளிகள்

சென்னை: வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான எண்ணூர் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்துள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விவரங்களை வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக … Read more

அண்ணா பிறந்தநாளில் காமராஜரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைத்திட வேண்டும் என்ற முழக்கத்தை முதன்முதலில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்த மாபெரும் தலைவர் அறிஞர் அண்ணா. நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்று பசிப்பிணி போக்குவதை அரசின் அடிப்படைக் கடமையாகக் கருதிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் … Read more

நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் சீரான சூழ்நிலை நிலவவில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வுகள் ஆன்லைனில் நடைபெற்றது.  இதற்கிடையில் பள்ளி பாடங்களின் அளவும் கனிசமாக குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் பள்ளி படிப்பு கடந்த 2 ஆண்டுகளாக முடக்கத்தில் இருந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் பள்ளிகள் சீரான முறையில் இயங்கிவருவதால் தேர்வுகள் முழு வீச்சில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதேபோல் 1 … Read more

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு; பள்ளி, கல்லூரி திறப்பால் சாக்பீஸ் வியாபாரம் படுஜோரு

திண்டுக்கல்: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்த சாக்பீஸ் உற்பத்தியாளர்கள் மீண்டும் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டு விற்பனை ஜோராக நடைபெறுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல்லில் மேற்கு மரிய நாதபுரத்தில் சாக்பீஸ் தயாரிப்பதை குடிசைத்தொழிலாக செய்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான சாக்பீஸ்களை உற்பத்தி செய்து அந்தப்பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாக்பீஸ் உற்பத்தியில் ஆண்கள் … Read more