`முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது'- நீதிமன்றம்

தமிழகத்தில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், அது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான, தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த வாய்ப்பாக அமையும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. … Read more

PAN-Aadhaar link: ஜூலை 1 முதல் ₹1,000 அபராதம்; சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!

Aadhaar – PAN card linking Tamil News: நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டை (PAN) ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30ம் தேதியாக இன்று ஆகும். அவ்வாறு செய்யத் தவறினால் ஜூலை 1 முதல் ரூ.1,000 இரட்டை அபராதம் விதிக்கப்படும். மத்திய அரசு ஏற்கனவே மார்ச் 31 வரை காலக்கெடுவை நீட்டித்த நிலையில், அதன் பிறகு, மார்ச் 31 மற்றும் ஜூன் 30, 2022 க்குள் பான் மற்றும் ஆதாரை இணைப்பவர்கள் ரூ.500 … Read more

தமிழக அரசின் மாதம் 1000 ரூபாய் திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு.!

தமிழக அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து, சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியன படிக்கும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை … Read more

“திமுக, பாஜக, அதிமுக மூன்றும் வேண்டும் என ஓபிஎஸ் நினைப்பதை ஏற்க முடியாது” – கடலூர் அதிமுக நிர்வாகிகள்

கடலூர்: “அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று கடலூர் அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி தொகுதி எம்எல்ஏவான ஆ.அருண்மொழிதேவன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “கட்சியின் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களின் ஆதரவுகளை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். … Read more

செவ்விய காதலில் வருத்தமிகு வாழ்க்கை

த. வளவன், மூத்த பத்திரிகையாள்ர் இந்த பாடலில் தலைவியின் வருத்தம் பதிவாகியுள்ளது. காதலிக்கும்போது தந்த விடுதலையைக் கற்பில் மறக்கிறான் தலைவன் என்ற ஏக்கம் பல பெண்பாற் புலவர் பாடல்களில் எதிரொலிக்கின்றது.“நோம் என் நெஞ்சே, நோம், என் நெஞ்சே,இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கிஅமைதற்கு அமைந்த நம் காதலர்அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே”அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல் – என்ற காரணத்தால் தலைவி வருத்தம் கொள்கிறாள். காதலிக்கும் வரை அமைதற்கு அமைந்த தன்மை … Read more

உதய்பூர் கன்ஹையா கொலை : இந்துத்துவவெறியர்களின் தவறான முயற்சிக்கு இப்படுபாதகச்செயல் வலுசேர்க்கும் – சீமான்.!

உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல்கடை நடத்தி வந்த கன்ஹையா லால் தேலி என்பவரின் தலைதுண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கோரநிகழ்வு நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  கருத்தை மாற்றுக்கருத்தாலும், அவதூறுகளை சட்டவழிமுறைகளாலும்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, வன்முறைத்தாக்குதல்களும், … Read more

மூதாட்டியை கொன்று நகைகளை திருடிய துணை உதவி ஆய்வாளர் மகன்… மது குடிக்க பணம் இல்லாததால் நடத்தப்பட்ட வெறிச்செயல்

புதுச்சேரியில், மதுகுடிக்க பணம் இல்லாததால் மூதாட்டியை கழுத்தை நெறித்துக் கொலை செய்து வீட்டிலிருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த துணை உதவி ஆய்வாளரின் மகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேதராப்பட்டு பகுதியில் தனியாக வசித்து வந்த உண்ணாமலை என்ற 75 வயதான மூதாட்டி கடந்த 23ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொலை நடந்த நாளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் சென்ற ஸ்டீபென் … Read more

செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே பகல் நேர ரயில் இயக்கப்படுமா?

தென்காசி: செங்கோட்டை- மயிலாடுதுறை இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரோனா தொற்றுக்கு பிறகு தென் மாவட்டங்களில் அனைத்து ரயில்களும் மீண்டும் படிப்படியாக இயக்கத்துக்கு திரும்புகின்றன. இதில் திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக செல்லும் ஈரோடு, மயிலாடுதுறை லிங்க் எக்ஸ்பிரஸ் மிக முக்கியமான ரயில் ஆகும். திருநெல்வேலியில் புறப்பட்டு திண்டுக்கலில் இரண்டு ரயிலாக பிரிக்கப்பட்டு ஒரு பாகம் ரயில் திருச்சி, தஞ்சாவூா் வழியாக மயிலாடுதுறைக்கும், மறுபாகம் ஈரோடுக்கும் … Read more

மொட்டை அடித்து பிச்சை எடுத்து ஒப்பாரி வைத்து போராடும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்

பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மொட்டை அடித்தும், பிச்சை எடுத்தும், ஒப்பாரி வைத்தும் ஆசிரியர்கள் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் கூறி வருகிறார். உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை” என ஆசிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நியமனம் … Read more

Gold, Silver Rate Today: ரூ60,000-ம் கீழே சரிந்த வெள்ளி; தங்கம் விலை நிலவரம் என்ன?

Gold price today in Chennai: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் நாணய விலையில் மாற்றம், இந்தியா மற்றும் அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளின் தங்கம் இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச் சந்தை, உக்ரைன் மீதான ரஷ்ய போர், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு காரணங்களாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கத்தின் விலையை பாதிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். … Read more