அரசு சார்பில் பேச்சு வார்த்தை.. 80 நாள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த 13 கிராம மக்களிடம் அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில், 2-வது புதிய பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களுக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டு … Read more

“மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தால் நொறுங்கிப் போயுள்ளேன்… இனி இதுபோல் நிகழக் கூடாது” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “மாணவி சத்யாவுக்கு நடந்தது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நிகழக் கூடாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்தைக் கூற கடமைப்பட்டு உள்ளேன். வேதனையுடன் இதை தெரிவிக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு … Read more

மிக கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்: 28 மாவட்டங்கள் உஷார்!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (15.10.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

தென்காசி: 7 ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே, 7 ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு வயது 40. இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள், கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் சீனு (12), அதே ஊரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியில் … Read more

தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள செக்போஸ்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனையால் பரபரப்பு: கணக்கில் வராத ரூ53,000 பறிமுதல்

ஊத்துக்கோட்டை: தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு நிலவியது. சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில், தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து சோதனைச் சாவடி (ஆர்டிஒ செக்போஸ்ட்)  உள்ளது. இதன் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக, தமிழகம், ஆந்திரா இடையே ஏராளமான சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவதற்கு … Read more

பள்ளியில் விஷவாயு… சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி மயக்கம்

விஷவாயு தாக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாணவர்களில் மீண்டும் 9 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் நேற்று மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் 2 மணி அளவில் பள்ளி அறைக்குள் சென்றபோது, சற்றுநேரம் கழித்து … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்வு..!

புதுச்சேரியில், அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக வழங்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் … Read more

கடலில் பேனா வைக்க நிதி உள்ளபோது ஊழியர்களின் போனஸில் கைவைக்கலாமா? – டிடிவி தினகரன்

சென்னை: கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை … Read more

எண்ணும் எழுத்தும் திட்டம்: நடனமாடி அசத்திய அரசு பள்ளி ஆசிரியை!

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. வகுப்புகளை ஆன்லைனில் கவனித்து வந்தனர். இந்த சூழ்நிலையால் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கப்பட்டது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய இலக்காக 2025 ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்பது இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும், தங்களது எட்டு வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படைக் கணித … Read more

தேங்காய், கொப்பரை விலை சரிவால் தென்னை விவசாயிகள் கண்ணீர்

காங்கயம் : தேங்காய், கொப்பரை விலை சரிவை சந்தித்துள்ளதால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கும் மேலாக தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.  காங்கயம் பகுதியை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேங்காய், இளநீர், கொப்பரை(தேங்காய் பருப்பு) என தென்னையில் ஒவ்வொன்றும் வருமானம் அளிப்பவை. ஆனால் அண்மைக்காலமாக தென்னை விவசாயத்தில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. அடிக்கடி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையற்ற கொப்பரை … Read more