மலையோர பகுதிகளில் பலத்த மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

நாகர்கோவில்: மலையோர பகுதிகளில் பலத்த மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக சிற்றார்-2, முள்ளங்கினாவிளை ஆகிய இடங்களில் 13 … Read more

'பாரத் சோடோ யாத்திரை'தான் நீங்கள் நடத்த வேண்டும்: ராகுலை கிண்டல் செய்த அண்ணாமலை

சென்னை: ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கும் நிலையில், அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இது சுதந்திர இந்தியா. இங்கு யார் வேண்டுமானாலும் யாத்திரை செல்லலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை. அந்த வகையில் ராகுல் காந்திக்கும் உரிமை உண்டு. அதனால்தான் நான் அவரது யாத்திரைக்கு வாழ்த்தும் கூட சொல்லியிருக்கிறேன். ஆனால், அவர் … Read more

இலங்கை அரசின் வசம் பிடிபட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் விவகாரம்..! – வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

இலங்கை அரசின் வசம் பிடிபட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ,மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, கடந்த 6-9-2022 அன்று புதுச்சேரியைச் … Read more

உணவகங்களில் வாழை இலை பயன்படுத்த கோரிக்கை

பழநி: பழநி செம்மொழி தமிழ்ச்சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பழநி கோயிலின் சார்பில் மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். பழநி பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழையும் வழிகளை வழித்தடத்திற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். பழநி பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். பழநி நகரில் உள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கவும், பார்சல் கட்டுவதற்கும் வாழை இலைகளை மட்டுமே … Read more

‘கடன் தராம அலையவிடுறாங்க’ – நரிக்குறவர் சமுதாய பெண்ணின் மனக்குமுறல்

பூவிருந்தவல்லியில் சாலையோரம் கடை நடத்தி வரும் நரிக்குறவர் சமுதாயத்திற்கு நகராட்சி மூலம் வழங்கப்படும் கடன் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூவிருந்தவல்லி நகராட்சிக்கு வந்த இரண்டு நரிக்குறவர் சமுதாய பெண்கள் தாங்கள் சுய தொழில் செய்து பிழைக்க கடன் வசதி தரவில்லை என கண்ணீருடன் புலம்பிச் சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், தாங்கள் 6 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். தங்களிடம் அனைத்து ஆவணங்கள் இருந்தும் கடன் வழங்கப்படவில்லை … Read more

ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது: வானதி சீனிவாசன்

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ,ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம்  உயிரோட்ட முடியுமா, என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல்,ராகுல் காந்தி நடந்தாலும் சரி ,ஓடிபோனாலும் சரி ,மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார். தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக, கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் … Read more

புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது; வனத்துறையினர் அதிரடி விசாரணை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பார்த்திபனும், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவரும் புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் புலிக் குட்டி விற்பனைக்கு உள்ளது என்றும், அதன் விலை ரூ.25 லட்சம் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த தலைமை வனத்துறையினர், வேலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன்படி … Read more

“இந்தியாவை ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கும் அரும்பணி” – ராகுல் பயணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து தொடங்கும் இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். இதற்காக காந்தி மண்டபம் வந்த முதல்வர் ஸ்டாலின், … Read more

ஓணம் பண்டிகை… பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியான ஷாக் அறிவிப்பு!

கேரள மாநிலத்தின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை (செப்., 8) கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி கேரள தேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கேரள- தமிழக எல்லை மாவட்டங்களான கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓணம் திருவிழா களைகட்டி உள்ளது.மலையாள மக்கள் குறிப்பிட்ட அளவு வசிக்கும் தலைநகர் சென்னையில் ஓணம் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்த விழாவை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கெனவே நாளை (செப்.,8) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை … Read more

தமிழக பள்ளி கல்வித் துறைக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு: கல்வி அமைச்சர்

தருமபுரி: பள்ளி கல்வித் துறைக்கு வரும் நான்கு ஆண்டுகளுக்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான இரண்டாம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் … Read more