திடக்கழிவுகள்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு மிக முக்கியமான துறை. நகர்ப்புற குடிமை வசதிகளின் அனைத்து வளர்ச்சி மற்றும் பராமரிப்புகளை இத்துறை மேற்கொள்கிறது. இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, துறை ரீதியாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் … Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை; 12.7 செமீ மழை பதிவு

திண்டுக்கல்: கொடைக்கானலில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் அருவிகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானல் படகு குழாமில் 12.7 செமீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் நகரில் நேற்று மதியம் முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல் நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 3 தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மழை … Read more

திடீரென பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுனர்.. சாலையில் மறியல் செய்த மாணவர்கள்-ஆரணியில் பரபரப்பு

செய்யாறு ஆரணி சாலையில் கூடுதல் பயணிகள் ஏறியதால் ஓட்டுனர் பேருந்தை இயக்க மறுத்தார். அப்போது, பேருந்திலிருந்த மாணவர்கள் ஓட்டுநனருக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் இறங்கி கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் இரண்டு ஷிப்டுகளில் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்கு சென்று பயின்று வருகின்றனர். இதில் பெரும்பாலும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் செய்யாறு, ஆரணி சேத்துப்பட்டு போளூர் வந்தவாசி காஞ்சிபுரம் ஆற்காடு உள்ளிட்ட பகுதியிலிருந்து பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்தை … Read more

பள்ளி மாணவனுடன் நட்பு.. போக்சோவில் ஆசிரியை கைது.. சென்னையில் பரபரப்பு..!

பள்ளி மாணவனுடன் நட்பு.. போக்சோவில் ஆசிரியை கைது.. சென்னையில் பரபரப்பு..! Source link

மக்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும் – முதல்வர் தகவல்.!

இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக்கூட்ட த்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,  “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு மிக முக்கியமான துறையாக அமைகிறது. இந்தத் துறை நகர்ப்புற குடிமை வசதிகளின் அனைத்து வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கும் பொறுப்பாகும். நமது மாநிலத்தில் 21 மாநகராட்சிகள், 139 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் உள்ளன.  இந்த நகர்ப்புற … Read more

துணிவு படத்திற்காக அஜித் ரசிகர்களின் அட்டகாச சலுகை!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படம் வெற்றி பெறுவதற்காக குலுக்கல் போட்டி ஒன்றை நடத்தி வருகிறார். காளிதாஸ் என்ற அஜித் ரசிகர் சின்னமனூர் பகுதியில் ‘வீரம் உணவகம்’ என அஜித்தின் பட பெயரிலேயே உணவகத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில் உணவகத்தை திறந்த இவர் கடை முழுவதும் அஜித்தின் புகைப்படத்தால் அலங்கரித்து உள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் வெற்றி பெறுவதற்காகவும் துணிவு திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை கொண்டாடும் … Read more

மதுரை | சம்பளம் வழங்க வலியுறுத்தி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காமராசர் பல்கலை. பேராசிரியர்கள்

மதுரை: சம்பளம் வழங்க வலியுறுத்தி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். இப்பல்கலைக்கழகத்தில் 150-க்கும் மேற்பட்ட உதவி மற்றும் இணை பேராசிரியர்களும், 280-க்கும் மேற்பட்ட நிரந்தர அலுவலர்களும், 300 தற்காலிக பணியாளர்களும், 200க்கும் மேற்பட்ட தொலை நிலைக்கல்வி அலுவலர்கள், ஊழியர்களும், பணிபுரிகின்றனர். இவர்களுடன் சுமார் 400க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களும் உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க சுமார் ரூ.10.5 கோடி தேவை இருக்கிறது. கடந்த சில மாதமாகவே பல்கலைக் … Read more

பதுங்கி பாய்ந்த ஓபிஎஸ்; இபிஎஸ் கோட்டையில் பெரிய ஓட்டை!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது. ஜெயலலிதா அமர்ந்த இருக்கை தனக்கே சொந்தம் என்ற ரீதியில் எடப்பாடி பழனிசாமியும், இல்லை.. இல்லை..அது எனக்கு தான் சொந்தம் என ஓ.பன்னீர்செல்வமும் முரண்டு பிடித்து கொண்டு நிற்கின்றனர். இந்த விவகாரத்தில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததால், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இதை கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் மாளிகையை தாக்கி, கட்சியில் பிரிவினையை ஏற்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு ஓபிஎஸ் … Read more

மணவாளக்குறிச்சி அருகே மொபட்-பைக் மோதல்; நிறைமாத கர்ப்பிணி போலீஸ் பலி.! வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே நேற்றிரவு நடந்த விபத்தில், நிறைமாத கர்ப்பிணி போலீஸ் உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி உஷா (37), வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். 7 வயதில் மகன் உள்ளான். தற்போது … Read more

சமையல் உப்பா? கொக்கையன் போதைப் பொருளா? – நண்பரிடமே ரூ.10 லட்சம் ஏமாற்றிய கும்பல்!

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை, கொக்கைன் போதைப் பொருள் எனக் கூறி 10 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் கொக்கைன் போதை பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பணகுடி போலீசார் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெனிபர் என்பவரின் காரை மறித்து சோதனை செய்யும்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான பொருள் மற்றும் நபர்கள் மூன்று … Read more