பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 1,410 பேர் … Read more

ஆன்லைனில் வாங்கிய கடனுக்காக ஊழியர்கள் மிரட்டல் மகனுடன் 60 தூக்க மாத்திரை தின்று லாட்ஜில் மயங்கி கிடந்த தம்பதி: தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஓமலூர்: ஓமலூர் அருகே ஆன்லைனில் வாங்கிய கடனை கட்ட முடியாத வாலிபர், ஊழியர்கள் மிரட்டியதால், குடும்பத்துடன் லாட்ஜில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தின்னப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்துள்ளார். இவருக்கு திவ்யா(27) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் குமார், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது மொபைல் ஆப்கள் … Read more

தனியார் நிறுவன அதிகாரிகளை மிரட்டிய எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏவுக்கு சசிகலா கண்டனம்

தனியார் நிறுவன அதிகாரிகளை மிரட்டிய தாம்பரம் எம்எல்ஏஎஸ்.ஆர்.ராஜாவுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்குச் சென்ற திமுகவை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, மிரட்டும்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து அவரது செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வி.கே.சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் அச்சம்: திமுக ஆட்சியாளர்களின் … Read more

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

மதுரை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தென்மாவட்டங்களில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியங்களில் ஈடுபடுவோர் அல்லது தூண்டுவோர் அல்லது கூட்டுச்சதி செய்வோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான … Read more

நன்னடத்தை அடிப்படையில் 75 ஆயுள் தண்டனை கைதிகள் தமிழகம் முழுவதும் விடுதலை

தமிழகம் முழுவதும் சிறைகளில் நன்னடத்தையை கடைப்பிடித்த 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் அவர்களின் நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தகுதியானவர்கள் என்றும், பாலியல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல பெண்களை காட்டி 12 மோசடி திருமணங்கள்: வைரலாகும் விசாரணை வீடியோவில் தகவல்

பரமத்தி வேலூ: ஆறு திருமணங்கள் செய்து மணமகன்களை ஏமாற்றி 7வது திருமணத்திற்கு முயன்ற கல்யாண ராணி சந்தியா வழக்கில் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய ஐயப்பனிடம் போலீசார் நடத்திய விசாரணை வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல பெண்களை மணமகள்களாக காட்டி 10க்கும் அதிகமான திருமணங்கள் நடத்தி மோசடி செய்ததாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெங்கரை அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(35). இவருக்கும், மதுரையைச் சேர்ந்த  … Read more

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: தமிழக டிஜிபி எச்சரிக்கை

சென்னை: “மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கடந்த 22.09.2022 … Read more

திண்டிவனம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்

திண்டிவனம்:  திண்டிவனம் அடுத்த நெடி, மோழியனூரில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் சென்றது.  திண்டிவனம் அடுத்த வீடூரை சேர்ந்த அய்யனார்(35)  ஓட்டி சென்றார். மயிலம் அடுத்த கொடிமா கிராமத்தை சேர்ந்த ரவி(45) கண்டக்டராக இருந்தார். ஆலகிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், மயிலம் மற்றும் பெரியதச்சூர் போலீசார் … Read more

பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு விரைந்து முடிவு கட்டுக: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: “தமிழ்நாட்டின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு … Read more