நன்னடத்தை அடிப்படையில் 75 ஆயுள் தண்டனை கைதிகள் தமிழகம் முழுவதும் விடுதலை

தமிழகம் முழுவதும் சிறைகளில் நன்னடத்தையை கடைப்பிடித்த 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் அவர்களின் நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தகுதியானவர்கள் என்றும், பாலியல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல பெண்களை காட்டி 12 மோசடி திருமணங்கள்: வைரலாகும் விசாரணை வீடியோவில் தகவல்

பரமத்தி வேலூ: ஆறு திருமணங்கள் செய்து மணமகன்களை ஏமாற்றி 7வது திருமணத்திற்கு முயன்ற கல்யாண ராணி சந்தியா வழக்கில் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய ஐயப்பனிடம் போலீசார் நடத்திய விசாரணை வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல பெண்களை மணமகள்களாக காட்டி 10க்கும் அதிகமான திருமணங்கள் நடத்தி மோசடி செய்ததாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெங்கரை அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(35). இவருக்கும், மதுரையைச் சேர்ந்த  … Read more

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: தமிழக டிஜிபி எச்சரிக்கை

சென்னை: “மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கடந்த 22.09.2022 … Read more

திண்டிவனம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்

திண்டிவனம்:  திண்டிவனம் அடுத்த நெடி, மோழியனூரில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் சென்றது.  திண்டிவனம் அடுத்த வீடூரை சேர்ந்த அய்யனார்(35)  ஓட்டி சென்றார். மயிலம் அடுத்த கொடிமா கிராமத்தை சேர்ந்த ரவி(45) கண்டக்டராக இருந்தார். ஆலகிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், மயிலம் மற்றும் பெரியதச்சூர் போலீசார் … Read more

பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு விரைந்து முடிவு கட்டுக: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: “தமிழ்நாட்டின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு … Read more

பாடம் நடத்தாமல் மெத்தனம் அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் அடுத்த எருமாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக செந்தில்குமார் உள்ளார். இவர் பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. பள்ளிக்கு நேரடியாக சென்ற சிஇஓ முருகன் விசாரணை நடத்தி செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எருமாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கு செல்லும் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார், மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து … Read more

'வெளிநாட்டு வேலையை விட்டு அரசியலுக்கு வந்ததே நலிந்தோருக்கு உதவத்தான்' – பிடிஆர் பேச்சு

மதுரை: வெளிநாட்டு வேலையை விட்டு அரசியலுக்கு வந்தது நலிந்தோருக்கு உதவத்தான் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ”அரசியலுக்கு பலர் பல்வேறு காரணங்களுக்காக வந்திருக்கலாம். ஆனால் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் … Read more

பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் சாதிய பாகுபாடு புகார்: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

கரூர்: பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் சாதிய பாகுபாடு புகார் அளித்தது தொடர்பாக வார்டு உறுப்பினர், முன்னாள் தலைவர், செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியம் நன்னியூர் ஊராட்சி மன்றத் தலைவர் மு.சுதா (30). பட்டியலினத்தைச் சேர்ந்தவர். துணைத்தலைவர் ஆர்.ஜோதிமணி மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 10 பேர் உள்ளனர். ஊராட்சி மன்றத்தலைவர் சுதா மீது சாதிய ரீதியான பாகுபாடு … Read more

இணைப்பு சாலை இல்லாததால் 11 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் உப்பனாறு பாலப்பணி: 30 மீனவ கிராம மக்கள் அவதி

சீர்காழி : சீர்காழி அருகே 11 ஆண்டுகளுக்கு முன்புபாலம் கட்டியும், இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாததால் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் முதல் பழையார் தொடுவாய் திருமுல்லைவாசல் கீழமூவர்கரை பெருந்தோட்டம் பூம்புகார் வானகிரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு இடையே தொடர்ச்சியாக பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் மீனவர்கள் பொதுமக்கள் நீண்ட தூரம் பயணித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை இருந்து … Read more

திருப்பூர் அருகே அதிமுக பிரமுகரை கடத்த முயற்சி: சென்னை காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் அருகே பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அதிமுக பிரமுகரை கடத்த முயற்சி செய்ததாக சென்னை காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). அதிமுகவில் திருப்பூர் ஒன்றிய பாசறை செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி சங்கீதா. மாநகர் மாவட்ட இணை செயலாளர். இன்று மதியம் சந்திரசேகர் வீட்டில் இருந்தபோது, கார்த்திகேயன் என்பவர் வந்து காரில் காவல் ஆய்வாளர் காத்திருப்பதாகவும், தங்களை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து … Read more