தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 35-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ த.வேலு, சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா … Read more

ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் நம்பிக்கை: டெல்லி போடும் கணக்கு இதுதான்!

அதிமுக உட்கட்சி மோதல் தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. ஜூலை 11 பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஓ.பன்னிர் செல்வம் தரப்புக்கு சாதகமாக இருந்தது. இதனால் தரப்பு மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இதனால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிக்கல் இல்லை என்ற நிலை உருவானது. நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்த நிலையில் … Read more

காற்று மாசு: டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம்!

சஸ்டைனபிள் மொபிலிட்டி நெட்வொர்க் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட சி.எம்.எஸ்.ஆர் எனும் ஆலோசனைக் குழு அண்மையில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இக்கணக்கெடுப்பின் முடிவானது காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் என்கின்ற கோரிக்கை சென்னை மக்களிடம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும் மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் … Read more

கம்பத்தில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் வெடிபொருள்கள் விற்பனையை கண்காணிக்க வேண்டும்-சமூகஆர்வலர்கள் கோரிக்கை

கம்பம் : கம்பத்தில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் வெடிமருந்து மற்றும் வெடிபொருட்கள் விற்பனைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால் மணல்,மண்,நீர் என அனைத்து இயற்கை வளங்களும் அள்ள அள்ள குறையாமல் மாவட்டத்தில் கொட்டிகிடக்கிறது. மேலும் தேனி மாவட்டத்தில் மட்டும் 150 குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கேரள பதிவெண் கொண்ட லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. கேரளாவில் கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை … Read more

சீர்காழி: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்திவைத்த கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை, துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது. இந்நிலையில், சிதிலமடைந்த இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால் கோயிலை புனரமைத்து துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று … Read more

புதுமைப்பெண் திட்டம் நாட்டிற்கு முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது: அரவிந்த் கேஜ்ரிவால்

சென்னை: ” ‘புதுமைப்பெண் திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது” என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் சென்னையில் நடந்த விழாவில், 26 தகைசால் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்: “தமிழகத்தில் இன்று கல்வித்துறையில் பல முன்னணி நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. 26 தகைசால் … Read more

அண்ணாமலை பதவிக்கு ஆபத்து – பாஜகவுக்கு புது நெருக்கடி!

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவராக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே, திமுகவையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இவருக்கு, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நாசர், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தின் ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்திகளில், பாஜக வருவதையும் பார்க்க முடிகிறது. மேலும், … Read more

இருமடங்காக உயர்ந்த தக்காளி விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை கோயம்பேடு சந்தைய பொறுத்தவரை தக்காளி விலை இன்று 1 கிலோ 45 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சமீப காலமாக, அரிசி சமையல் எண்ணெய் போன்றவைகள் அனைத்தும் விலை உயர்ந்த நிலையில், இன்று தக்காளி விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் மக்கள் அதிப்படியான காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். அதேபோல் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெடிற்கு கர்நாடகா, ஆந்திரா, பகுதியில் இருந்து தக்காளி வரத்து உள்ளது. … Read more

கனமழையால் பல இடங்களில் மண் சரிவு; மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்பட 19 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கல்லார்-ஹில்குரோவ் … Read more

அரசு விரைவுப் பேருந்தில் பயணிகளுக்கு 10% ஆஃபர் – முழு விபரம் இதோ

இணையம் மூலம் இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வோருக்கு, திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுவதாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் அதிநவீன மிதவைப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்ந்து, மொத்தம் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் … Read more