20 நாளில் 2,085 வழக்குகளை முடித்து உயர் நீதிமன்ற கிளை சாதனை: மத்திய அரசு ட்விட்டரில் பதிவிட்டு பெருமிதம்

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளை முதல் அமர்வு 20 வேலை நாட்களில் 2,085 வழக்குகளை விசாரித்து முடித்து சாதனை புரிந்திருக்கும் தகவலை மத்திய அரசு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் 15 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு செப்.5 முதல் பொதுநல வழக்குகள், ரிட் வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களை விசாரித்து வருகிறது. இந்த முதல் அமர்வு செப்.5 … Read more

CBI: திமுகவின் ஏ ராஜாவுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான  ராஜா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழையும், பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் பெய்துவருகிறது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் … Read more

ஜாமீனில் வெளிவந்த இளைஞர் வெட்டிக் கொலை – பழிக்குப் பழி நடந்த கொலையில் 8பேர் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜாமீனில் வெளி வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அந்திவாடியைச் சேர்ந்த முரளி என்பவர் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் நேற்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே உதயகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முரளி கைதாகி ஜாமீனில் வெளிவந்து இருப்பது தெரிய வந்தது.மேலும் உதயகுமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன் … Read more

தனுஷ்கோடி | 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம்: கடலில் காற்றாலை அமைக்க இடம் தேர்வு

ராமேசுவரம்: தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளதால், நாட்டில் முதல் முறையாக கடலில் காற்றாலை அமைக்க தனுஷ்கோடி கடற்பகுதியை மத்திய எரிசக்தித்துறை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கடந்த 09.09.2015 அன்று வெளியிட்டது. இதன்படி மத்திய எரிசக்தி துறையின் சார்பில் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் நோக்கத்தில், நாட்டில் உள்ள 7600 கி.மீ. நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. … Read more

கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க கோரிய மனு! தமிழக அரசுக்கு உத்தரவு!

கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது எனவும், முறையான கணக்கெடுப்பு நடத்தாமல், நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்டோர் … Read more

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று மனித சங்கிலி: அமைதியாக நடத்த தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை: சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி நடைபெறுகிறது. 500 இடங்களில் மனிதசங்கிலி நடைபெறுவதாக திருக்கழுக்குன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, … Read more