எடப்பாடி பழனிசாமிக்கு என்ன ஆச்சு? துரைமுருகன் எழுப்பும் கேள்வி!

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கைக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலறிக்கை கொடுத்துள்ளார். துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவர் … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் – வழக்கு தொடர்ந்தார் திருமாவளவன்

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் இரண்டாம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் தங்களது ஆட்சேபனையை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் … Read more

குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா நட்சத்திரங்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்: கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் நடைபெறும் ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சினிமா மற்றும் டிவி நடிகர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ஸ்ரீ அம்பிகை தசரா குழு சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, … Read more

ராணிப்பேட்டை: பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ராணிப்பேட்டை பேக்கரியில் சாண்ட்விச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். ராணிப்பேட்டை பஜார் வீதி அருகே உள்ள பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட சைமன் (10), ரூபன் (7), ஜான்சன் (9) ஆகிய மூவருக்கும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அப்போது … Read more

விளையாட்டாக தூக்கு மாட்டிய தம்பி.. வேடிக்கை பார்த்த அண்ணன்.. துடிதுடித்து கண்முன்னே முடிந்த கதை.!

சென்னை புழல் பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கு மாட்டிக் கொள்வதைப் போல விளையாடிய போது உயிரிழந்துள்ளான்.  சென்னை புழல் அருகே அமுதா என்ற பெண்மணி தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் மூத்த மகனுக்கு 14 வயதும், இளைய மகனுக்கு 13 வயதும் நடந்துள்ளது. நேற்று தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். இளைய மகனான கார்த்திக் வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூக்கில் தொங்குவதைப் போல நடித்துள்ளார். இதை … Read more

விஷமானது விரும்பி சாப்பிட்ட சாண்ட்விஜ்.. 3 சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

ராணிப்பேட்டையில், பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட மூன்று சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். இவர், தனது குடும்பத்தினருடன் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது பஜார் வீதியில் உள்ள ஒரு பேக்கரியில் தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலமனும் அவருடைய மனைவி ரூபியும் தேநீர் அருந்தியுள்ளனர். சிறுவர்களான சைமன் (10), ரூபன்(7), ஜான்சன்(9) ஆகிய மூவரும் சாண்ட்விஜ் ஆர்டர் செய்து … Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு ஸ்டாலின் அரசு அளித்த வாக்குறுதி என்ன ஆனது? – அன்புமணி

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி அறிவுறுத்தவும் வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தாலும், அது இன்னும் செயல்பாட்டுக்கு … Read more

ஆ.ராசா விவகாரம்: ஸ்டாலின் பம்முகிறாரா? பதுங்குகிறாரா?

“மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது.” இது தந்தை பெரியார் சொன்னது. “அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால் வேகமாகச் சுழற்றுகிறார்கள். நாம் கையில் ஆட்சி – மக்கள் நலன் எனும் அரிசியும் பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பு என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.” இது பேரறிஞர் அண்ணா சொன்னது. இந்த இரண்டு கூற்றுகளையும் உள்ளடக்கி முதல்வரும், தலைவருமான அறிக்கை … Read more

Rajiv Gandhi assassination case : நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் மீது மத்திய, மாநில பதிலளிக்க உத்தரவு

Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஏழு பேரையும் விடுதலை செய்தவற்கான தீர்மானம் 2014ஆம் ஆண்டு, பிப்.19ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேறியது.  இந்த தீர்மானம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசு தரப்பில் இழுபறி நீடித்துவந்தது. தொடர்ந்து, எழுவர் விடுதலை குறித்து எடப்பாடி பழனிசாமி … Read more

அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதன் விவரங்களை தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.