`ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுக’ – திருமாவளவன் மனுதாக்கல்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற … Read more

சாண்ட்விச் ஆபத்து? ராணிப்பேட்டையில் 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

சாண்ட்விச் ஆபத்து? ராணிப்பேட்டையில் 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி Source link

அனிருத்தின் தாத்தா காலமானார்!!

தமிழ் சினிமாவின் பழபெரும் இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார். பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மகன்களில் ஒருவரான எஸ்.வி.ரமணன் சுதந்திரத்திற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த இவர், அவ்வப்போது பின்னணி குரல் கொடுத்தும் வந்தார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இவரது பேரன். அதே போல் இவரது மற்றொரு பேரன் ரிஷிகேஷ் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ … Read more

‘செம்மைப்படுத்தப்பட்ட’ ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல் 

சென்னை: ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி … Read more

பணக்கார சாமிதான்… அதுக்காக இவ்வளவா? மலைக்க வைக்கும் திருப்பதி கோயில் சொத்து மதிப்பு!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக திகழும் திருப்பதியில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வருகைதரும் ஏழுமலையான் பக்தர்களால் ஆண்டுதோறும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதன் பயனாக, ஏழுமலையான் கோயில் உண்டியலும் நாள்தோறும் நிரம்பி வழிந்த வண்ணமே உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகளின் மதிப்பை கணக்கிட்டால் மட்டும் தேவஸ்தானத்துக்கு நாள்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்து வருகிறது. உலகிலேயே பெரிய … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : ஓகே செய்த அமைச்சரவை… ஒப்புதல் அளிப்பாரா ஆளுநர்?

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனையடுத்து, ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், … Read more

வத்தலக்குண்டு அருகே கோயிலில் விரைந்து கோபுரம் கட்ட வலியுறுத்தல்

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கோபுரம் அமைக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கியது. அந்தப் பணி தற்போது பாதியில் நிற்கிறது. எனவே கோயிலில் விரைந்து கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் … Read more

`பாஜகவின் மிரட்டலினால் தமிழக காவல்துறை இப்படி செய்கிறது'- எஸ்.டி.பி.ஐ நெல்லை முபாரக்

“பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஆதாரமில்லாமல் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவில்லை என்றால் வரலாற்று பிழையாக மாறும்” என அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எஸ்.டி. பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சில தினங்களுக்கு முன்னாள் NIA நடத்திய சோதனையில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சார்ந்த ராமநாதபுரம் மாவட்ட … Read more

மெரினாவுக்கு போனால் இலவச வைஃபை: சென்னை மாநகராட்சி அசத்தல்..!

சென்னை மெரினா கடற்கரையில், பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச இணைய சேவை (வைஃபை) வழங்கப்படுகிறது. 15-வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி … Read more

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப் பதிவு: பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப் பதிவு விபரங்களை தாக்கல் செய்ய பதிவுத் துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வீரபாண்டி பேரூராட்சியில் அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகள் பத்திரப் பதிவு செய்யப்படுகிறது. இந்த முறைகேடான பத்திரப் பதிவுகளை ரத்து செய்து, அங்கீகாரம் பெறாத மனைகளை பத்திரப் பதிவு செய்யும் பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் … Read more