அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை ரயிலில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1.3 கிலோ தங்க நகை, ரூ.37 லட்சம் பறிமுதல்: நகைக்கடை ஊழியரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை நடத்திய சோதனையில், ஆலப்புழா எக்ஸ்பிரசில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.357 கிலோ தங்க நகைகள், ரூ.37.43 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் ரயில் நிலையம் வந்த பல்வேறு ரயில்களில் ரயில்வே போலீசார் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் அதிகாலை 3.30 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில்  இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு செல்லும் தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை … Read more

கல்பாக்கம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது புதுச்சேரி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்ற ஒரு கண்டெய்னர் லாரி, காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் … Read more

இந்த இலையை அரைத்து பாலில் 15 நாள்… ஆண்மை பெருக மருத்துவர் பரிந்துரை

தொட்டடால்  சுருங்கி தோல் வியாதிகள், குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கும் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது. உடல் குளிர்ச்சி அடையும். வயிற்றுப்புண் ஆறும் மூலம் நோய் நீங்கும். கல் அடைப்பு தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை பஞ்சு போல தட்டி, ஒரு மண் குடுவையில் போட்டு கால்படி தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சவும். சுண்ட காய்ச்சிய பின்னர் வடிகட்டி ஒரு வேலைக்கு கால் அவுன்ஸ் வீதம் … Read more

அரசுப் பணிகளுக்கு தமிழ் தகுதித் தேர்வு: டிஆர்பி அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் அரசுப் பணித் தேர்வுகளுக்கு, தமிழ் தகுதித் தேர்வு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தமிழ் மொழி தகுதித் தேர்வை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சிக் குழுமத்தில் (எஸ்சிஇஆர்டி) உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில், இந்த புதியநடைமுறை அமல் படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘எஸ்சிஇஆர்டி-ல் 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், … Read more

அதிமுகவில் அதிரடி மாற்றம்: நிலைப்பாட்டை மாற்றும் ஆர்.பி.உதயகுமார்?

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எந்த பக்கம் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இன்று அது தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரியளவில் ஆதரவு … Read more

இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் தஞ்சமடைந்தனர். ஏற்கனவே இலங்கையில் இருந்து வந்த 142 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தனர்.

`மெட்ராஸூக்கே அட்ரஸூ நாங்கதான்’- சென்னை மாநகரின் முக்கிய இடங்கள் தொகுப்பு! #ChennaiDay383

மூன்று நூற்றாண்டு கால வரலாறு கொண்ட சென்னை மாநகர், போற்றத்தக்க பழமைகளையும், புத்துணர்ச்சி மிக்க புதுமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 383ஆவது சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் நகரின் முக்கிய அடையாளங்களை பார்க்கலாம். 1856ஆம் ஆண்டு முதல் தொடர் வண்டி நிலையம் ராயபுரத்தில் அமைக்கப்பட்டாலும், சென்னையின் அடையாளமாக திகழும், சென்ட்ரல் ரயில் நிலையம் 1873ஆம் ஆண்டு ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைத்து கட்டப்பட்டது. `புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று தற்போது அழைக்கப்படும் இது, தென்னக … Read more

முன்விரோதத்தால் கொலைசெய்யப்பட்ட கொத்தனார், காவல்துறையினர் விசாரணை..!

முன்விரோதத்தால் கொத்தனார் வெட்டி கொலை பற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் பனியகுறிச்சி பகுதியில் சேர்ந்தார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் சுந்தர் என்பவருக்கு மடியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு இருந்து வந்துள்ளது.  இதனால் ஜெயபாலின் காலில் சுந்தர் அறிவாளர் வெட்டி உள்ளார் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஜெயபாலுக்கும் சுந்தருக்கும் இடையே … Read more