நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சார்பில் ‘வந்தே பாரதம்’ என்ற ஒலி, ஒளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை திருவல்லிகேணி என்.கே.டி. கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது: தேச விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களை நினைவுகூர்ந்து, மரியாதை செலுத்த … Read more

தீண்டாமைக் கொடுமைக்கு பெயர் போன உத்தரப்பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடும் அண்ணாமலை

சென்னை: சமூக நீதியில் தமிழகத்தை விட உத்தரபிரதேசம் சிறப்பாக உள்ளதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சிப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ். இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 13) மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள தீண்டாமை குறித்து தெரியப்படுத்தியவுடன், அதற்கான சிறப்பு அரசாணையை தமிழக … Read more

மாநகர பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும் – போக்குவரத்துக் கழகம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளை குறித்த நேரத்தில் முழுமையாக இயக்க வேண்டும். சாதாரண கட்டண பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தினமும் 3,233 பேருந்துகளை அட்டவணையிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் … Read more

'பாஜகவில் இருந்து விலகுகிறேன்' மதுரை மாவட்ட தலைவர் அறிவிப்பு

நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்பு கோரிய நிர்வாகி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது திமுக – பாஜக இடையே நடைபெற்ற மோதலை அடுத்து மதுரை விமான நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினார்கள், இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நடந்த … Read more

Tamil News Highlights: பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாநகர் பாஜக தலைவர் சரவணன் பேட்டி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates ரூ.100 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட, 9 கிலோ 590 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த சந்தை … Read more

#BREAKING : தமிழக முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் ஆக.16ஆம் தேதி டெல்லி செல்கிறார்.?

#BREAKING : தமிழக முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் ஆக.16ஆம் தேதி டெல்லி செல்கிறார்.? தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றித் தெரிவிக்கும் … Read more

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அரங்கேறவுள்ள வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலுமான இசையார்ந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது. இதனை கலை பண்பாட்டுத்துறை மூலம் ஓவிஎம் தியேட்டர்ஸ் நிறுவனம் அரங்கேற்றுகிறது. இதில் 62 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான … Read more

பாஜகவின் மத, வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை.. மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் விலகல்.!

பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் பூத உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மதுரை மாநகர் … Read more

மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் விழா – அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்

மாமல்லபுரம்: தமிழகத்தில் முதன்முறையாக, மாமல்லபுரத்தில் சுற்றுலாத் துறைமற்றும் க்ளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச பட்டம் விடும் விழாவை, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன்ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதால் மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலாத்துறை மற்றும் க்ளோபல் மீடியா பாக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து கடற்கரையையொட்டி 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் பட்டம் விடும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more