ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நிதி – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.!

மத்திய அரசு வழிகாட்டுதல் படி, ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’’ திட்டமானது மத்திய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் பிப்ரவரி 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூபாய் … Read more

தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்யும் திட்டம் இல்லை-டாஸ்மாக் நிறுவனம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என  டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக பிரதாப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் அது மனித உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்றும் இது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் … Read more

மின் திருத்த மசோதாவால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாக வாய்ப்பு: வேல்முருகன்

சென்னை: மக்களவையில் கொண்டுவரப்பட்டுள்ள மின்சார திருத்த மசோதாவினால் தமிழகத்தின் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாக வாய்ப்புள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிள்ளதாவது: ”ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு, மின்சார சட்டம் 2003இல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்ட திருத்த வரைவை வெளியிட்டது. அப்போதே, பல தரப்பு மக்களும், எதிர்க்கட்சிகளும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இச்சூழலில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் … Read more

திருவள்ளுரில் 14ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் அருகே சிட்லப்பாக்கம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக நிலம் தோண்டும் பணிகள் நடைபெற்றன. அப்போது இரண்டரை அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் புத்தர் சிலையை கைப்பற்றி தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார். இந்தச் சிலையை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் … Read more

ஆளுநர் – ரஜினிகாந்த் சந்திப்பு | கம்யூனிஸ்டுகள் விமர்சனத்துக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை: “ஆளுநர் அன்றாடம் பலரை சந்திக்கிறார் அப்படித்தான், நடிகர் ரஜினிகாந்தும் ஆளுநரை சந்தித்துள்ளார். ரஜினிகாந்த், ஆளுரிடம் அரசியல் பேசியதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையை அடுத்த நீலாங்கரையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி, கடலில் தேசியக் கொடிப் பேரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” ஒரு ஆளுநர் அவர் பதவி வகித்துவரும் … Read more

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பு காரசார வாதம்; அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தள்ளிவைப்பு

Chennai High Court postponed ADMK general council meeting case: அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணனும், … Read more

#திருநெல்வேலி || வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்த சிவன் என்பவரின் மகன் இசக்கிமுத்து(28). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இசக்கிமுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த உறவினர்கள் இது குறித்து, சீவலப்பேரி காவல் நிலையத்திற்கு … Read more

பள்ளியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் ; ‘பபுள் கம்’-ஐ துப்பும் போது கால் இடறி விழுந்ததாகத் தகவல்

காரைக்குடியில் தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவன் தவறி விழுந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Leaders Group of School என்ற CBSC பள்ளியில் படித்து வந்த சிறுவன் இரண்டாவது மாடியில் இருந்து பபுள் கம்-ஐ துப்ப முயன்றபோது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.   … Read more

மத்திய அரசு ஒப்புதல் இல்லை; ஆளுநர் உரையுடன் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

புதுச்சேரி: முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததால் ஆளுநர் உரையுடன் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஒத்திவைக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக முழு பட்ஜெட் மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்படுவதில்லை. பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள என்ஆர் காங்கிரஸும் இம்முறை மார்ச்சில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தது. முழு பட்ஜெட்டை இம்மாதம் தாக்கல் செய்ய திட்டமிட்டது. துணைநிலை ஆளுநர் தமிழசை தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழு கூட்டத்தில் இவ்வாண்டு பட்ஜெட், மத்திய அரசின் நிதியுதவி, மாநில … Read more

இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, … Read more