‘மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. இந்நிலையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தர்களை நீக்கும் முடிவினை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் இரண்டு மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், … Read more

சசிகலா தலைமையில் பொதுக்குழு; அதிமுகவில் அணி மாறும் தலைகள்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. முதல்வர் ஆவதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த மெரினா கடற்கரையில், தர்மயுத்தம் தொடங்கினார். அதே சமயம் சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதன் பிறகு சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேர்ந்தது. சசிகலா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம், ஓ.பன்னீர்செல்வம் மறுபுறம் என இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு நின்றதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாஜக தலையிட்டு, ஓபிஎஸ் மற்றும் … Read more

லஞ்சம் வாங்கினால் காவலர்கள் பணியிடை நீக்கம்; சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களை சந்தித்தார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பேட்டி கொடுத்த அவர், பதிவு எண் பலகை இல்லாமல் அதிகமாக வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு தணிக்கை சென்னை போக்குவரத்து காவல்துறையால் கடந்த 3-4 நாட்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். சிறப்பு தணிக்கையில் முறையான பதிவு எண் பலகைகள் இல்லாத வாகனங்களை  ஓட்டியது தொடர்பாக 800-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு … Read more

தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: ஏரி, குளங்களில் காவிரி உபரிநீரை நிரப்ப கோரிக்கை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி உபரிநீர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்பக்கோரி ஒகேனக்கல்லில் நேற்று அவர் நடைப்பயணத்தை தொடங்கினார். 2வது நாளாக குறும்பட்டி டீக்கடை என்ற இடத்தில் இருந்து நடைபயண பரப்புரையை தொடங்கினார். சோலைக்கொட்டாய், நடுபட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர், சில்லாரஹள்ளி, நத்தமேடு பேருந்து நிறுத்தம், ஜாலியூர் வரை … Read more

கோவை: முக பிளீச்சிங் செய்தபோது சிறுவனின் முகம் சிதைந்த விவகாரம்: 2 வடமாநில இளைஞர்கள் கைது

கோவையில் முக பிளீச்சிங் செய்ய சலூன் சென்ற பள்ளிச் சிறுவனின் முகம் நீராவி பட்டு சிதைந்த விவகாரம் தொடர்பாக சலூன் கடை நடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பீகார் மாநிலம் மாத்வானியை சேர்ந்தவர் 22 வயதான வித்யானந்தன். இவரும் இவரது உறவினரான 32 வயதான சஞ்சய் தாஸ், பால் கம்பெனி பகுதியில் ‘ராக் மென்ஸ்பியூட்டி சலூன்” என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த சலூனுக்கு … Read more

சென்னையில் 10,664 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டிருந்த 10,664 கழிவுநீர் இணைப்புகளை மாநகராட்சி துண்டித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகாலில், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க, மாநகராட்சி வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டு … Read more

பாராளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி?.. விபி துரைசாமி பரபரப்பு பேட்டி!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில துணை தலைவர் விபி.துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: “பாகுபாடு இல்லாமல் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பாஜக அஞ்சலி செலுத்தி வருகிறது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனுக்கு இன்று தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் சொத்து வரி, … Read more

"மு.க ஸ்டாலின் வைத்த செக்" பதறியடித்து கடிதம் எழுதிய ஆளுநர் ஆர்.என் ரவி!

தமிழகம் முழுவதும் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் இன்றுவரை ஆளுநர் வசம் இருந்து வருகிறது. அதேபோல், மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும்போது, அம்மாநில அரசிடம் கலந்தாலோசிக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள  ஆர்.என் ரவி தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் தற்போது வரை 3 துணைவேந்தர்களை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில் இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசப்பட்ட நிலையில், மாநில … Read more

சிவகங்கை அருகே விபத்தில் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை அகற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டு

சிவகங்கை: சிவகங்கை விபத்தில் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை அகற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து  வருகின்றனர். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அண்மையில் அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், கண்ணாடித் துண்டுகள் உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தன. அப்போது அப்பகுதியில் ஊசி, பாசி விற்றுக் கொண்டிருந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் அருகேயுள்ள கடையில் இருந்த துடப்பத்தை எடுத்து வந்து கண்ணாடி துண்டுகளை கூட்டி சாலையோரம் … Read more

மெடிக்கலில் போதை ஊசி விற்ற விவகாரம்: முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மருத்துவத்துறையில் அரிதாக பயன்படுத்தக்கூடிய மருந்துகளை போதைக்காக உபயோகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது; இதை தீவிர குற்றமாக நீதிமன்றம் கருதுகிறது எனவும், இதுபோன்ற வழக்கில் காவல்துறை விசாரணை தேவைப்படுவதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டையில் நகர் பகுதியில் சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றேன். என் மீது போதை ஊசி விற்றதாக வழக்குப்பதிவு … Read more