எடப்பாடி பழனிசாமியை முற்றுகையிட்ட பெண்கள் – காரணம் என்ன?

குமாரபாளையத்தில் காவிரியாற்று வெள்ளப்பெருக்கால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்க வந்த, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முற்றுகையிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து பெண்கள் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காவிரி கரையோரம் வசிக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த கலைமகள் வீதி, மணிமேகலை வீதி, இந்திரா நகர் மற்றும் குறுங்காடு கலைவாணி நகர் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் … Read more

மெரினாவில் பிளாஸ்டிக் தடை; ஒரே வாரத்தில் ரூ.9 லட்சம் அபராதம்!

Chennai Tamil News: சென்னையின் முக்கியமான அடையாளமாக திகழ்வது மெரினா கடற்கரை. சென்னை மக்கள், தமிழகத்தின் இதர பகுதி மக்கள் மட்டும் இங்கு வருவதில்லை. வெளிமாநிலங்கள், வெளிநாட்டு பயணிகளும் கூட இங்கு ஆர்வமாக வந்து போகிறார்கள். இப்படி முக்கியத்துவம் பெற்ற மெரினா கடற்கரையில் குப்பைகள் பெருகி காட்சி தருவது வேதனை. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் நிரம்பி கிடப்பது பெரும் அபாயம். பொதுஇடங்களை மற்றும் சுற்றுலாத் தளங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்களால் … Read more

சென்னையில் பிங்க் பேருந்துகள் அறிமுகம்: முழுமையாக வண்ணம் தீட்டாததால் நெட்டிசன்கள் விமர்சனம்

சென்னை: பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய சென்னையில் பிங்க் பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் விரைவில் பிங்க் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தமிழகத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம். இதன்படி மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகளை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். மகளிர் இலவசமாக … Read more

போலி ஆவணங்கள் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னையை குப்பைத்தொட்டி இல்லாத நகரமாக மாற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்புடன் பல தரப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. குப்பைகளை வகைப்படுத்தி பிரித்து குப்பைத்தொட்டிகளில் போடுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் பல விசயங்களில் கவணம் செலுத்தி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் கொளத்தூர் தொகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. அப்போது அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று வெற்றி என்பவரும் உடன் … Read more

தமிழகத்தில் கனமழையால் 41 வீடுகள் சேதம், முகாம்களில் 6,109 பேர் தங்கவைப்பு: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கனமழை – வெள்ளப்பெருக்கு காரணமாக 12 மாவட்டங்களில் 41 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 நிவாரண முகாம்களில் 6,109 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்ட தகவல்: “தென் மேற்கு பருவமழைக் காலத்தில் 1-6-2022 முதல் 5-8-2022 முடிய 266.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 104 விழுக்காடு கூடுதல் … Read more

போலி வழக்கு தொடரப்பட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரும்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஆகிய கிராமங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளுதவதாகவும் அதனை தடுத்து நிறுத்த கோரியும் பெரும்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி. முத்துக்குமார் வழக்கில் குறிப்பிடப்பட்ட அந்த பகுதிகளில் … Read more

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி … Read more

தகைசால் தமிழர் விருதிற்கு ஆர்.நல்லகண்ணு தேர்வு

தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.  … Read more

ராகுலின் ஹிட்லர் ஒப்பீடு; அவர் ஜெர்மன் தலைவராக உருவானது எப்படி?

Rahul’s Hitler comparison: So how did the German leader come to be what he became?: விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஜி.எஸ்.டி வரி உயர்வு மற்றும் ஜனநாயகத்தின் மரணம் குறித்து அரசாங்கத்தை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வெற்றிக்காக மட்டும் பா.ஜ.க சட்டப்பூர்வ உரிமை கோர முடியாது என்றார். மேலும், “ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெறுவது வழக்கம். மேலும் … Read more

“வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏற்றச் சொல்வதில் கார்ப்பரேட் அனுசரணை” – திருமாவளவன்

அரியலூர்: தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவது தொடர்வதால், அரசு கண்காணிப்புக் குழுவை அமைத்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சனாதன சக்திகளும், கார்ப்பரேட்களும் இணைந்து நடத்துகிற அரசாக பாஜக அரசு உள்ளது. இதைக் கண்காணித்து வரும் நாட்டு மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். 75-வது சுதந்திர … Read more