பா.ஜ.க. தலைவரை புலம்ப வைத்த மம்தா.. அப்படி என்னதான் ஆச்சு?

மேற்கு வங்க பாரதிய ஜனதா மாநிலத் தலைவராக இருந்தவர் திலீப் கோஷ். அதிரடி பேச்சுகளுக்கு சொந்க்காரர். தற்போது இவர்தான் மாநிலத்தின் ஹாட் டாக். அப்படி என்னதான் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செய்தனர் என்பதை பார்ப்போம். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக திலிப் கோஷ் நியமிக்கப்பட்ட பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக பெரும் வெற்றிகளை குவித்தது. 2019 மக்களவை தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜி கட்சிக்கு பெரும் சவாலாக விளங்கியது.தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் பாரதிய … Read more

7 வயது சிறுவன் உடல் ஆற்றில் கண்டெடுப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

7 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து செல்வதாக     அங்குள்ளவர்கள்  காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதனை அடுத்து,  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாய்காலில் தண்ணீரில் இறங்கி 45 மதிக்க தக்க ஆண் உடலை தேடி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 7 வயது சிறுவனின்  உடல் கண்டெடுக்கப்பட்டது. … Read more

“3 முறை நேதாஜியை நேரில் சந்தித்துள்ளேன்” – தருமபுரி சிவகாமியம்மாள் அனுபவப் பகிர்வு

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது நேதாஜி படைப்பிரிவின் கீழ் கலை வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய 90 வயது மூதாட்டி நேதாஜி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினார். தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள் (90). ஏழை நெசவாளர்களான மாரிமுத்து-சின்னத்தாய் தம்பதியரின் மகள் சிவகாமியம்மாள் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோதே 1934-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பினாங்குக்கு ரப்பர் தோட்ட பணிக்கு சென்றுள்ளனர். பின்னர் கோலாலம்பூரில் இருந்தபோது காடுகளை அழித்து சாலை அமைக்கும் பணிக்காக இரவில் பிரிட்டிஷ் ராணுவம் … Read more

கேரளாவில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தை தமிழகத்தை சேர்ந்த சுங்க அதிகாரி கைது: நகைகள், ரூ.4.5 லட்சம் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கக் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த சுங்க இலாகா கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார். கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானத்தில் 2 பயணிகள் தங்கம் கடத்துவதாக மலப்புரம் மாவட்ட எஸ்பி.க்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதில், காசர்கோட்டை சேர்ந்த அப்துல் நசீர் (46), ஜம்ஷீர் (20) சிக்கினர். அவர்களிடம் இருந்து 360 கிராம் தங்கத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது, அவர்களின் செல்போனில் தொடர்ந்து … Read more

என் பொண்ணு சிவனேன்னுதாண்டா இருக்கா அவள போயி..! காங்கிரஸில் திரிசா.. தினுசா பரவிய தகவல்..!

நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பொய்யானது என்று திரிஷாவின் தாய் விளக்கம் அளித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக இருந்த திரிஷா, நடிகர்களுக்கு இணையாக ரசிகர் மன்றம் வைத்து திரையரங்குகளில் பரபரப்பை ஏற்படுத்தினார். பொன்னியன் செல்வன் படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள திரிஷா காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதிக்க போகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது இதையடுத்து திரிஷாவின் தாய் … Read more

அரிய புற்றுநோய் அறுவை சிகிச்சை: இளம் பெண்ணுக்கு புதிய வாழ்வு அளித்த ராயப்பேட்டை அரசு மருத்துவர்கள்

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம், ஒரு இளம்பெண்ணுக்கு சிக்கலான மற்றும் அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து புது வாழ்வு அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கணைய புற்றுநோயால் கண்டறியப்பட்ட 21 வயது பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத கட்டி கண்டறியபட்டது. பல வகையான கீமோதெரபி அளிக்கப்பட்ட பின்பும் கட்டி குறையவில்லை. பின்னர் கதிர்வீச்சு சிகிச்சைக்கு அப்பெண் உட்படுத்தப்பட்டார், என்றாலும் அதுவும் பலனளிக்கவில்லை. இறுதியாக மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு … Read more

தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம்: நடை பயணம் கிளம்பிய அன்புமணி

தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்காக காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த சுமார் 800 கோடி ரூபாய் மட்டும் தான் தேவைப்படும். திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தலைவர் 3 நாட்களுக்கு பிரச்சார எழுச்சி நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் பிரச்சார எழுச்சி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான இன்று ஒகேனக்கல்லில் உள்ள … Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகள் அருகில் இயங்கும் மதுக்கடைகள் அகற்றம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் பள்ளிகள் அருகில் இயங்கும் மதுக்கடைகள் அகற்றப்படும். சென்னையில் இந்த பணி தொடங்கி உள்ளதாக அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி கூறினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே அமைந்துள்ள மதுக்கடைகள் அகற்றும் பணி துறை ரீதியாக தொடங்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக, சென்னையில் மதுக்கடை அகற்றும் பணி நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் கொடுப்பதாக கூறியிருந்த  நிலையில், மாணவர்கள் கவனக்குறைவாக … Read more

டைரி எழுதவில்லை என மாணவனை தலையில் அடித்த ஆசிரியர் – சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்த மாணவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட வீர கோயிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேணுகோபாலபுரம் பகுதியைச் … Read more

தர்மபுரி || இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்துள்ளார். தர்மபுரி மாவட்டம் நல்லூர் காடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி ராணி (60). இவர் நேற்று மகன் செந்தில்குமாருடன் இருசக்கர வாகனத்தில் மிளகு நாற்று வாங்குவதற்காக பொன்னகரத்திற்கு சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து மூங்கில்மடுகு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ராணி இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராணியை மீட்டு சிகிச்சைக்காக பொன்னகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more