அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதாவின் பெயர் மறைக்கப்பட்டதா? – ஓபிஎஸ்

சென்னை: “தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக எங்கெல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர்கள் மறைக்கப்பட்டதோ, அவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், கட்டணமில்லா கல்வி வழங்கும் திட்டம், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பைகள், காலணிகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், … Read more

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 1) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை … Read more

ஆன்லைன் சூதாட்டம் : தமிழக அரசு தடுமாறுகிறது! பாமக தலைவர் அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு! 

ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு ஆகிவிட்டது. தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன்  ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் … Read more

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு

சென்னை: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதி அறிவித்தார். இதன்படி, * கரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு அந்த குழந்தை 18 வயது … Read more

டெல்லி செல்லும் மம்தா ? காங்கிரஸ் -திரிணாமுல் சிக்கலை தீர்பாரா ?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த வாரம் டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே நல்லுறவு ஏற்பட இந்த சந்திப்பு வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் … Read more

#BREAKING : பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு.. தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  மேலும், அந்த  மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோயால் பலர் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர். அவ்வாறு கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நலன் கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட தொகையை,  … Read more

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு

சென்னை: பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, குடியரசுத்தலைவர் கொடியை முதல்வர் ஸ்டாலின் வாயிலாக காவல் துறைக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: நாட்டின் சிறந்த காவல் துறைகளில் தமிழக காவல் துறையும் ஒன்று. இந்திய ராணுவம் அல்லதுமாநில காவல் துறைக்கு … Read more

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இதற்கெல்லாம் இனி நடத்த நிரந்தர தடை!

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு, போட்டோ சூட் நடத்த நிரந்தர தடை விதித்து, தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. கி.பி.1636 ஆம் ஆண்டு திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் மதுரையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்த மகாலை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை எடுக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருப்பினும் எந்த வித அனுமதியின்றி … Read more

பராமரிப்புப் பணி.. சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்வெட்டு

தாம்பரத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாம்பரம்: சிட்லபாக்கம் சிட்லபாக்கம் 1வது பிரதான சாலை, சுப்பிரமணியன் தெரு, ராமச்சந்திரா சாலை, பத்மநாபன் தெரு, ஐயா சாமி தெரு, ஜோதி … Read more

மாணவர், ஆசிரியர்கள் வருகைப்பதிவை இன்று முதல் செயலியில் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு

சென்னை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை இன்று முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 37,554 அரசுப் பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏறத்தாழ 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர் வருகைப்பதிவைக் கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை பள்ளிக்கல்வித் துறை 2019-ம் ஆண்டில் கல்வித் துறை அறிமுகம் செய்தது. இதன் வழியாக ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஆசிரியர் பணிப் பதிவேடு, வருகைப்பதிவு, … Read more