ஹெல்த் மிக்ஸ், கோல்ட் காபி, பிஸ்கட் உள்பட 10 வகை பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை

ஹெல்த் மிக்ஸ், கோல்ட் காபி, பால் பிஸ்கட் உள்பட 10 வகையான பொருட்கள் ஆவின் மூலம் வரும் 20ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். அதன்படி, பாசந்தி, வெண்ணெய் கட்டி, பாலாடைக்கட்டி, வெண்ணெய் முறுக்கு, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம் போன்றவை விற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

வேளாண்மைப் பல்கலை. விடுதியில் மாணவர் தற்கொலை: சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றம்

கோவை: கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கு, சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் பிரசோத்குமார் (18). இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயோ டெக் பட்டப்படிப்பு படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பிரசோத்குமார் வகுப்புக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி மாணவர் பிரசோத்குமார் வகுப்புக்குச் செல்லாமல் விடுதியில் உள்ள தனது … Read more

ஜாதி – மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உத்தரவு!

ஜாதி – மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்த மனோஜ், தனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளதால், ஜாதி – மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் வட்டாச்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் சான்றிதழ் வழங்கப்படாததால், மகனுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி சென்னை … Read more

அந்த மனசுதான் கடவுள்! பிச்சை எடுத்த 50 லட்சத்தை அரசுக்கு வழங்கிய நபர்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தாலுகா ஆழங்கிணறைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு திருமணமாகி 2 மகள், 1 மகன் உள்ளனர். பம்பாயில் தேய்ப்புக்கடை நடத்தி அங்குள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் 15 வருடம் பணி செய்து குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.  அதன்பின் 2010ம் ஆண்டில் தமிழ்நாடு வந்த இவரை குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்து உள்ளனர்.   இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிச்சை எடுத்து முதலமைச்சரின் … Read more

'கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை உரிமையாக கோர முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

வனப்பாதுகாவலராக இருந்த தந்தை, பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால் கருணை அடிப்படையிலான பணியை வழங்கக்கோரி, மகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. தேனியை சேர்ந்த பேபி ஷாலினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது தந்தை பாண்டி, ஆண்டிபட்டி சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். 1999ஆம் ஆண்டு பணியில் இருந்த போது உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி 2006ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். ஆனால் … Read more

TNEA 2022 Rank List: கடந்த ஆண்டை விட கூடுதல் மதிப்பெண்கள்; டாப் கல்லூரிகளுக்கு தேவையான கட் ஆஃப் எவ்வளவு?

Tamilnadu Engineering counselling rank list analysis: பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும்? டாப் கல்லூரிகளுக்கு தேவையான கட் ஆஃப் எவ்வளவு? போன்ற விவரங்களை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி டாப் கல்லூரிகளுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்றும், ஆவரேஜ் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கடந்த ஆண்டை விட சிறந்த கல்லூரிகள் கிடைக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக … Read more

மது அருந்த பணமில்லை, ஏடிம் இயந்திரத்தை உடைக்க முயன்ற குடிமகன் கைது..!

மது அருந்த பணம் இல்லாததால் ஏடிம் இயந்திரத்தை உடைத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள ஏடிம் மையத்தில் 15ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் உடைக்க முயன்றார். உடைக்க முடியாததால் அவர் திரும்ப சென்றுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டது நாகேந்திரன் என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மன்னார்குடியை சேர்ந்தவர் எனவும்  அவரிடம் இருந்த பணத்தை … Read more

“கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை” – சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை குறிப்பிட்ட மா.சுப்பிரமணியன்

சென்னை: “கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை” போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொது தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்று உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் … Read more

சசிகலாவுடன் ஏன் ரகசிய டீலிங் செய்கிறார் ஓபிஎஸ்? எடப்பாடி புதுத்திட்டம்!

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக , வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், மூன்று தரப்பினரும் வைத்த பரபரப்பான வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நிலையில், தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இதுவரை எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருந்த நிலையில், இப்போது ஓபிஎஸ் கை கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கி வருகிறது. … Read more

தமிழர் அல்லாதோர் மாவட்ட ஆட்சியர்களாக இருக்கிறார்கள் – வேல்முருகன் காட்டம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த  மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான  வேல்முருகன் கலந்துகொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு … Read more