44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: சென்னை வந்தார் பிரதமர் மோடி

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு … Read more

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மனைவி.. மன உளைச்சலில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!

மன உளைச்சலில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான மூர்த்தி (வயது 55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி (வயது 50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி மிகவும் சிரமப்பட்டுள்ளார்.  இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மூர்த்தி … Read more

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ரஜினி, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழா தொடர்பான ஏற்பாடுகளை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் தமிழக … Read more

“நேற்று முதல்வரின் நடத்தை…” – திமுக – பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலையின் பதில்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தை, பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை நேரு விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த அவர், ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுத்துவருகிறார். முன்னதாக செஸ் போட்டி தொடக்க விழா … Read more

‘தப்பா புரிஞ்சுகிட்டீங்க… அந்த நிர்வாணக் காட்சி இப்படித்தான் எடுத்தாங்க!’ ரகசியத்தை உடைத்த ‘இரவின் நிழல்’ நடிகை

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர் என்று பெயரெடுத்தவர் பார்த்திபன். நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட பார்த்திபன், ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு இயக்கியுள்ள படம் இரவின் நிழல். 2 வரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்த படம் உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று கூறி பிரமோட் செய்யப்பட்டது. இது தொடர்பாக சில சர்ச்சையான கருத்துக்கள் வந்தாலும் இரவின் நிழல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டுள்ளார். நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடக்க விழா மேடை மின்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் மின்னும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மேடை அமைக்கப்பட்டுளளது. இந்த மேடையில் ஒலிம்பியாட் … Read more

சென்னை செஸ் ஒலிம்பியாட் விழா: சதுரங்க கரை வேட்டியில் பிரதமர் மோடி, பாஜகவினர்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்துள்ள பிரதமர் சதுரங்க கரை வேட்டி அணிந்து வந்தார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்கவிழா நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக … Read more

செஸ்போர்டு கரைவேட்டி, துண்டு அணிந்து சென்னை வந்தார் பிரதமர் மோடி

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதமர் மோடி. செஸ் கரைவேட்டி, துண்டு அணிந்து பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ள இந்தப் போட்டியில், 187 நாடுகளில் இருந்து 2,100 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து … Read more

கர்ப்பிணியை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து வந்த திருப்பூர் மலை கிராமத்தினர்: சாலை வசதிக்கு கோரிக்கை

திருப்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையிலும் அவசர மருத்துவத் தேவைக்கு கூட நோயாளிகளை தொட்டில் கட்டி அழைத்து வரும் அவலத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என குழிப்பட்டி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில், குழிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து … Read more

ஒரு குடும்பமாக நாம் எல்லாரும் இங்கு ஒருங்கிணைந்துள்ளோம் – அமைச்சர் மெய்யநாதன்

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கிற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது, ’’மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரால் வழிநடத்தப்படுகிற மத்திய அரசின் தொடர் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் கிடைத்திராவிட்டால் இந்த செஸ் ஒலிம்பியாட் இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற … Read more