கூட்டுறவு இளங்கோவனுக்கு செம செக்: எடப்பாடிக்கு புதிய சிக்கல்!

முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் தான். முக்கியமான பணிகளை அவர்கள் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி செய்வார். அவர்களைவிடவும் பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர் கூட்டுறவு இளங்கோவன். பழனிசாமியின் ஒவ்வொரு நிலையிலும் அவரோடு உடன் பயணிப்பவர். அவருக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர் என்கிறார்கள் சேலம் மாவட்ட அதிமுக வட்டாரத்தினர். அதனாலே நீண்டகாலமாக தன் வசம் வைத்திருந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு இளங்கோவனிடம் கொடுத்தார். … Read more

யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? குழப்பத்தில் தமிழக – கேரளா வனத்துறையினர்!

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது. 70% வனப்பகுதி கொண்ட ஆனைகட்டியில் ஏராளமான யானைகள் உள்ளது. யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது.  நேற்று மாலை முதல் இந்த … Read more

டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்கிறாரா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். இருவரும் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி செல்லும் முதலமைச்சர், மரியாதை நிமித்தமாக அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிலுவையில் உள்ள தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் மனு அளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க … Read more

குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளம்: நில ஆர்ஜித பணிகள் நிறைவு?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரபட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, குலசேகர பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான அமரா புரம், கூடல் நகர், அழகப்புரம், மாதவன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, நில அளவீடு செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது வேலிகள் அமைக்கும் பணி … Read more

எங்களிடம் தான் சுதந்திரத்தை தந்தார்கள், ஆனால் அவர்கள் கொடியை ஏற்றுகிறார்கள்-கே.எஸ்.அழகிரி.!

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: டெல்லி செங்கோட்டையில் யார் தேசியக் கொடி ஏற்றினாலும் தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சி தான். ஏனென்றால் தேசியக் கொடியேற்றும் உரிமையை நாம் தான் பெற்றுக் கொடுத்துள்ளோம். சுதந்திரத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்று புலம்பக் கூடாது. ஏனென்றால், நம்மிடம் தான் மக்கள் சுதந்திரத்தை தந்தார்கள். இன்று அவர்கள்தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்றால் நாம் தான் … Read more

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

பெரம்பலூர் மாவட்டத்தில் தனது கிராமத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மலேசியாவில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவர் 13 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளார். அரசுக்கு உதவியாக அள்ளிக்கொடுத்த நல்ல உள்ளம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட, பூலாம்பாடி, கடம்பூர், புதூர், அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகிய பகுதிகள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் பின் தங்கிய பகுதிகளாக காட்சி அளிக்கின்றது. பூலாம்பாடி பேரூராட்சியில் உள்ள 5 கிராமங்களை உள்ளடக்கிய, 15 … Read more

முதல்வர் இன்றிரவு டெல்லி பயணம் – குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கி, ஆக.9 வரை நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தொடங்கிவைத்தார். இறுதியாக ஆக.9 ல் நடைபெற்ற நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். இந்நிலையில், போட்டியை சிறப்பாக … Read more

சுதந்திர தினத்தில் முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றது எப்படி?

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி தான் எழுதிய தன்வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெறுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்துள்ளார். 1974 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்கள் பெறுவதற்கு மாநில சுயாட்சியை தீவிரமாக ஆதரித்த கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், மறைந்த தனது தந்தையும், … Read more

நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் – உடல்நிலையைப் பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக விஜயகாந்த், நேற்று கட்சி அலுவலகம் வந்தார். அங்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா உதவியுடன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். … Read more