மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் “தமிழகத்தைச் … Read more

'என்னிடம் தவறாக நடந்துகொண்டார்’.. மாணவியின் புகாரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் மீதான விசாரணையில், பதிவாளர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்ததாகக்கூறி அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் இதுவரை என்னென்ன நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பான சில முக்கிய விவரங்கள், இங்கே. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக கோபி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழக முழுநேர பொறுப்பு பதிவாளராக கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். … Read more

ஓபிஎஸ் களமான தேனியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: பிரமாண்ட கூட்டத்தை திரட்டி ‘கெத்து’ காட்ட இபிஎஸ் திட்டம்

மதுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் முதல் முறையாக ஓபிஎஸ் இல்லாத அதிமுக ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது. மின்கட்டண உயர்வுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் ஓபிஎஸ்-ஐ மீறி பெரும் கூட்டத்தை திரட்டி தனது செல்வாக்கை நிரூபிக்கவும், சொந்த மாவட்டத்திலே அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதை காட்டவும் இபிஎஸ் தரப்பினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழனிசாமி அணி அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை கண்டித்து இன்று (திங்கள்கிழமை) … Read more

`ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே..’ என்றுரைத்த பாரதியார் ஊரில், மற்றுமொரு ஆணவப்படுகொலை?

தூத்துக்குடியில் எட்டையாபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (வயது 20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (வயது 26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, கடும் … Read more

2024 மக்களவை தேர்தல்: தென் மாநிலங்களில் கவனம் செலுத்தும் பாஜக!

தென் இந்தியாவில் வலுவாக கால்பதிக்க 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னரே பாஜக திட்டமிட்டது. தற்போது இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது.ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கண்காணிப்பின் கீழ் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகா என திட்டம் விரிகிறது. இந்தத் திட்டத்தின்படி பிராந்திர தலைவர்களை வளைப்பது, ஒத்துவராத கட்சிகளை பிரிப்பது, புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள், மாவட்ட அளவிலான தலைவர்களை கட்சிக்கு கொண்டுவருவது என திட்டம் இன்றளவும் தொடர்கிறது.அண்மைக் காலமாக பாஜக இந்தத் திட்டத்தில் … Read more

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாரக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன்(37). இவருடைய மனைவி ஜோதி. மார்கண்டன் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊரில் கோவில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் மார்கண்டன் ஊருக்கு வந்துள்ளார்.  இதையடுத்து திருவிழாவை முடித்துவிட்டு இன்று காலை 7 மணியளவில் மார்கண்டன், ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில், மனைவி ஜோதி(35) மற்றும் உறவினரின் மகள் … Read more

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உட்பட 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், கட்சியின் விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ராஜேந்திரேன் உள்பட 15 பேரை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் ஒழுக்கமுறை குலையும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், 1. கு.ப.கிருஷ்ணன் 2. சி.ராஜேந்திரன் 3. கே.எஸ்.சீனிவாசன் 4. ஆர்.ராஜலட்சுமி 5. … Read more

`நான் பெரிய ரவுடி தெரியும்ல?’- நிலத்தகராறில் பெண்ணை மிரட்டிய ரவுடிக்கு காவல்துறை வலைவீச்சு

சென்னையில் தொலைபேசி வழியாக ஒரு குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரி ராம்நகரை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 62). இவர் சேலத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடம் மலேசியாவை சேர்ந்த செல்லப்பா என்பவருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது. இரு தரப்பும் அவரவர் தங்களது இடம் என கூறிக் கொள்ளும் நிலையில், … Read more

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா? விமர்சித்த பெண்ணுக்கு செம டோஸ் விட்ட குஷ்பூ

உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை குஷ்பூ, விதவிதமான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். குஷ்பூவை ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா எனறு விமசித்ததற்கு குஷ்பூ செம டோஸ் விட்டு விளாசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ, தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். பாஜகவில் இணைந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நடிகை குஷ்பூ என்றாலே அவருடைய பூசிய பப்ளியான் தோற்றம்தான் ரசிகர்களுக்கு … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை.. சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது..!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டார். கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராக பதவி வகித்து வரும் கோபி, ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு நெறியாளராக இருந்துள்ளார். இந்நிலையில், ஆராய்ச்சி பாடம் தொடர்பான விளக்கம் அளிப்பதாக கூறி அம்மாணவியை தனது விடுதி அறைக்கு வரவழைத்த கோபி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தனது உறவினர்களிடம் இது தொடர்பாக மாணவி தெரிவித்த நிலையில், அவர்கள் கோபியை தாக்கியதாக … Read more