கொசஸ்தலை ஆற்றில் இரு அணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிடுக: ஆந்திர முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொசஸ்தலை ஆற்றில் இரு அணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசினை … Read more

தனியார் பேருந்துகளில் நியாயமான கட்டணம்: திமுக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் தனியார் பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை வசூலிக்க தகுந்த நடவடிக்கையை திமுக அரசு எடுத்திட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகள் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமையை ஒட்டி வந்தால், குடும்பத்தினருடனும், கிராம மக்களுடனும் … Read more

“பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் குறித்து…” – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: ‘பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை’ என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 6 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். இததனிடையே, மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது … Read more

பட்டப்பகலில் வங்கியில் கோடிக்கணக்கில் கொள்ளை – சென்னையில் பயங்கரம்

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் ஃபெடரல் வங்கியின் தங்க நகை கடன் பிரிவு கிளை செயல்பட்டுவருகிறது. இங்கு பலரும் தங்களது நகைகளை அடமானம் வைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இன்று துப்பாக்கி முனையில் அங்கு கொள்ளை நடந்துள்ளது. ஃபெடரல் வங்கிக்கு இன்று பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்திருக்கின்றனர். வந்தவர்கள், அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர். இதனையடுத்து அவர்கள் வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் … Read more

திமுக VS பாஜக – ட்விட்டரில் ட்ரெண்டான 'செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல'

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 22) என்ற ராணுவ வீரர் காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று மதுரை கொண்டு வரப்பட்டது. லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் திடீரென காலணிகளை வீசி பாரத் மாதா கி ஜே என … Read more

மாநில அரசு எதற்கு இருக்கிறது?… ப.சிதம்பரம் கேள்வி

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம். இது ஒரு நாடுதான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு நாட்டிற்குள் பல மாநிலங்கள் இருகின்றன, பல மொழிகள் இருக்கின்றன, பல கலாச்சாரம் இருக்கிறது, பல வரலாறுகள் இருக்கின்றன, பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. நீட் தேர்வை எதிர்ப்பதற்கு … Read more

தூண்டில் போட்ட ஓ.பன்னீர்செல்வம் – வசமாக சிக்கிய எடப்பாடி அன்கோ!

போட்ட தூண்டிலில் அதிருப்தியாளர்கள் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம், கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். இதை அடுத்து, கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். … Read more

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: சேலம் சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பு

சேலம்: சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் தொடர்பான புகாரில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த சுதா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனர். ஈரோட்டில் கருமுட்டை விற்பனை செய்தது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி சுகாதாரத் துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர்.இதன் தொடர்நடவடிக்கையாக, சேலம் புதிய … Read more

சென்னையில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல்..!- எந்த இடத்தில் அதிக கூட்டம் தெரியுமா..?

சென்னையில் ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரம் முதல் தாம்பரம் வரை 5கீ.மீ. தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மாலை சுமார் 6 மணியிலிருந்து நீண்ட நெடிய தூரம் வரை கடும் வாகன நெரிசலுடன் சாலை காணப்படுகிறது. இது வழக்கத்தை விட அதிக வாகன நெரிசலாகும். இந்த வாகன நெரிசல் இன்று சனிக்கிழமை என்பதாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அதனைத்தொடர்ந்து சுதந்திர தினம் என்பதாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் இந்த வாகன நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. … Read more

சென்னை வங்கியில் நகைக்கொள்ளை நடந்தது எப்படி? காவலாளி கொடுத்த பகீர் தகவல்

ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் பிரிவில் கொள்ளை நடந்தது குறித்து காவலாளி ஒருவர் தகவல் அளித்துள்ளார். “மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்து கொள்ளையில் ஈடுபட்டனர்” என்று அங்கு பணிபுரியும் காவலாளி சரவணன் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில், ‘’என்னிடம் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வரச் சொன்னார். நான் வாங்கி வந்து கொடுத்தபோது, ’வெயிட்பண்ணு, வெயிட் பண்ணு’ என்று கூறினார். மறுபடியும் என்னை கூல்ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொண்டு வரச்சொன்னார். வந்ததும் அதை என்னையே சாப்பிடச் சொன்னார். ’எனக்கு ஒரு … Read more