திருவள்ளூர்: பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.!!

திருத்தணி அருகே தக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசனம். இவரது ஒரே மகள் சரளா (வயது 17). இவர் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை மாணவி சரளா வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து, விடுதியில் இருந்த சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  பின்னர் சக மாணவிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது … Read more

கருணை பயணம் விடுதியில் 50 பேருக்கு மொட்டை கடத்திச் சென்றது ஏன்?

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கருணை பயணம் விடுதியில் 50க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கருணை பயணம் கிருஸ்தவ விடுதி உள்ளது. இங்கு கடந்த 2 தினங்களாக அடையாளம் தெரியாதவர்களை வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்ததாக கூறப்படுகிறது. காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டு இரவு முழுவதும் … Read more

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு இபிஎஸ் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக, இன்று பதவியேற்றுள்ள, முதல் பழங்குடியின பெண்மணி, மேதகு திருமதி.திரவுபதி முர்மு அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும்,தமிழக மக்களின் சார்பிலும்,எனது மனமார்ந்த … Read more

விழுப்புரம்: மின்கசிவால் தீப்பற்றி எரிந்த பஞ்சு குடோன்

விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே கலியமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான இந்தியன் பெட்மார்ட் என்ற கடை இயங்கி வருகிறது. மேலும் அதே பகுதியில் கடைக்கு தேவையான மெத்தை, தலையணை, ஷோபா உள்ளிட்டவை தயாரிக்கப்படும் குடோன் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை உயரழுத்த மின்சாரம் காணமாக மின்கசிவு ஏற்பட்டு பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பஞ்சு … Read more

பிசிஓடி மற்றும் டயாபட்டீஸ்: யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS), பெண்களிடையே இருக்கும் ஒரு ஹார்மோன் கோளாறு, இது வெளிப்புற விளிம்புகளில் சிறிய நீர்க்கட்டிகளுடன், விரிந்த கருப்பைகளை ஏற்படுத்துகிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் பல சந்தர்ப்பங்களில், கருவுறாமையுடன் தொடர்புடையது. ஆனால், PCOS உள்ள பெண்களும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) படி, ” PCOS கொண்ட பெண்கள், பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்; அவர்களின் உடல்கள் … Read more

#Breaking || திருவள்ளூர் திருஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தற்கொலை – சாலை மறியல், போராட்டம்.!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் நிலைய எல்லைக்கட்பட்ட கீழச்சேரி பகுதியில் அரசு உதவி பெறும் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் தெக்களூர் பகுதியை சேர்ந்த சரளா என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவி, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை செய்து கொண்டதை சக மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் அளித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் சார்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, மப்பேடு காவல் … Read more

குரூப்-4 தேர்வை 18.5 லட்சம் பேர் எழுதினர்: பல்வேறு மையங்களில் தாமதமாக வந்த தேர்வர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் தவிப்பு

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நேற்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மொத்தம் 22 லட்சத்து 2,942 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 18 லட்சத்து 50,471(84%) பேர் மட்டுமே தேர்வில்கலந்துகொண்டனர். … Read more

நுகர்வு குறைவு; தேக்கம் அதிகம் – நாமக்கல்லில் மீண்டும் குறைந்த முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் முட்டை விலை சரிந்தது. ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 … Read more

மம்தா அரசின் மூத்த அமைச்சர் கைதுக்கு எதிராக போராட்டம் இல்லை; அடக்கி வாசிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

Atri Mitra  No protests for Partha: Minister in ED net but Mamata & TMC play waiting game: “நீங்கள் அவர்களை கைது செய்திருந்தால் என்னையும் கைது செய்ய வேண்டும்.” மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) கடந்த ஆண்டு மேற்கு வங்க அரசின் இரண்டு அமைச்சர்கள், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய ஒரு தலைவர் ஆகியோரை கைது செய்தபோது, ​​முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு … Read more

போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் வேண்டாம்: தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.20 லட்சம் பேர்பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம்ஏற்படுத்தப்பட வேண்டும். 13-வது ஊதிய ஒப்பந்தம், ஓராண்டு தாமதமாக 2017-ல் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 14-வது ஊதிய ஒப்பந்தம் தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 19-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். … Read more