ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 10வது முறையாக ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை பொய்யாழி இறந்த நிலையில், தாயார் ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் … Read more

மதுரை விமான நிலைய சம்பவம்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது போலீஸில் பாஜக புகார்

மதுரை: மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பாஜக சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன். காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (ஆக.13) கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் லெட்சுமணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் … Read more

நானா சேர மாட்டேன்… பாஜக தான் என்னை சேர்த்துக்க வேண்டும் – எஸ்வி சேகர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அற்புத ஶ்ரீ ராகவேந்திர சுவாமக ஆலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரனின் 351 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்வி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராகவேந்திரனின் தேர்த்திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் ராகவேந்திரா குறித்த புத்தகத்தை வெளியிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்” வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு 400 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும், அதே நேரத்தில் தமிழகத்தில் … Read more

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு – 5 பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பாக அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்தவேண்டும் எனக் கூறியதால் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை விமான … Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்.!

சென்னையை அடுத்து நீலாங்கரைக்கு அருகில் உள்ள க கானத்தூர் பழைய கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிபகுதியை சேர்ந்தவr பரத்துடு. வயது 52. இவர் தனது குடும்பத்தோடு பண்ணை வீட்டில் தங்கி பராமரித்து வந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த இவர் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பரத்துடு, தனது மனைவி சுஜாதாவின் கழுத்தை புடவையால் … Read more

ஒரே நாடு ஒரு தேர்வு: JEE, NEET, CUET நுழைவுத் தேர்வுகளை இணைக்க UGC திட்டம்

One Nation One Entrance: JEE (Main), NEET to be merged with CUET for students’ benefit, says UGC Chief: அடுத்த கல்வியாண்டில் இருந்து பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத்தேர்வுகளை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுடன் (CUET-UG) இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகளை ஆராய நிபுணர்கள் குழுவை, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்க உள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜே.இ.இ (மெயின்) மற்றும் நீட் தேர்வுகளை … Read more

சுதந்திர தின விழா கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 5,000 காவலர்கள்

சென்னை: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றுகிறார். இதனை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு … Read more

ஆரோவில் அறக்கட்டளை பிறப்பித்த உத்தரவு ரத்து – ஐகோர்ட் அதிரடி!

ஆரோவில் நகர் மேம்பாட்டு கவுன்சிலை மாற்றி அமைத்து ஆரோவில் அறக்கட்டளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தி அரவிந்தர் மற்றும் அன்னையால் ஆரம்பிக்கப்பட்டது ஆரோவில் அறக்கட்டளை. அதன் நிர்வாகத்தை கவனிக்க நிர்வாகக் குழு, குடியிருப்புவாசிகள் சபை, குடியிருப்புவாசிகள் சபையின் செயற்குழு, சர்வதேச ஆலோசனைக் கவுன்சில் ஆகிய நான்கு அமைப்புகள் உள்ளன. இதில் ஆரோவில் நகர் மேம்பாட்டு கவுன்சில், குடியிருப்புவாசிகள் சபை ஆகியவற்றின் உறுப்பினர்களை நீக்கி … Read more

சட்டவிரோதமாக சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்: சேலம் மருத்துவமனைக்கு சீல்

சட்டவிரோதமாக சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் இயங்கி வரும் சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கரு முட்டைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே இயங்கி வந்த சுதா மருத்துவமனைக்கும் சேலம் மாவட்ட மருத்துவ … Read more

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம்

மதுரை: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ முகாமில் வியாழக்கிழமை காலை தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியபோது, இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும், தீவிரவாதிகள் 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்திய வீரர்கள் 3 பேரில் ஒருவர் தமிழகத்தைச் … Read more