பரிசல் ஓட்டி பள்ளிக்கூடத்துக்கு போகும் பிஞ்சுகள்- கிருஷ்ணகிரியில் ஓர் தண்ணீர் தீவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஊராட்சிக்குட்பட்ட போகிபுரம் கிராமம். விதைத்ததை நல்ல விளைச்சலோடு கொடுக்கும் இந்த ஊர்மண், செழிப்புக்கு பேர் போனது. ஆனால் செல்வத்திற்கு இல்லை. காரணம் ஊருக்கு நடுவே இருக்கும் சூளகிரி – சின்னாறு அணைக்கட்டு. இவ்வூர் மக்களின் செழிப்புக்கும், சோகத்துக்கு இதே அணைக்கட்டுதான் காரணம்.  சூளகிரி சின்னாற்றின் குறுக்கே எம்பள்ளி அருகே இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது. 1986ஆம் ஆண்டு 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைக்கட்டின் கொள்ளளவு சுமார் … Read more

மேட்டூர் அணையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக இருந்து வருவதால் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மேட்டூர் அணையில் மேல் காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்ற்னர். 16 கண் மதகு மற்றும் மேட்டூர் அணை பகுதி முழுவதும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

சதுரகிரி கோவிலுக்கு செல்கிறீர்களா? இதை கொஞ்சம் கவனியுங்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு மலையேறிச் செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 24 முதல் வரும் 27 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து … Read more

இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது.. விருதுநகர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பெண்ணை கடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் உள்ளிட்ட ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், கரிசல்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வம். இவர் தனது காரில் விருதுநகர் சென்று விட்டு வீட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது  அந்த வழியே சென்ற பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து அழைத்து வந்துள்ளார்.அந்த பெண்ணை முத்துசெல்வன் ஒரு இடத்தில இறக்கி விட்டுள்ளார். அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று முத்துசெல்வத்தை தாக்கி விட்டு பெண்ணை கடத்தி … Read more

விஜயகாந்த் கஷ்டப்படுத்தப்படுகிறாரா? – பிரேமலதா புதிய விளக்கம்

சென்னை: “தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். அவரை கஷ்டப்படுத்துவதாக யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்” என்று அக்கட்சியின் பொருளாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசியது: “விஜயகாந்த் நலமுடன் உள்ளார். நீங்கள் அனைவரும் ஆக.15-ம் தேதியன்று கொடியேற்றும்போது பார்த்தீர்கள். 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும், அதற்காக நான் … Read more

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (24.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், … Read more

’அடக்குமுறையை மீறி வளர்ந்தவன்’ கோவை அரசு விழாவில் முதலமைச்சர் கர்ஜணை

கோவை ஈச்சனாரி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பல்வேறு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் – புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தபிறகு கோவைக்கு 5வது முறையாக வந்திருப்பதாக தெரிவித்தார். இந்த மாவட்டம் மற்றும் மாவட்ட மக்கள் மீது வைத்திருக்கும் அன்பின் … Read more

கோவையில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.588 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இன்று நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.272 கோடியில் 229 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து ரூ.663 கோடியில் 748 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இன்று நடந்த அரசு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் … Read more

எதிரணி வீரர் தாக்கியதில் கிக் பாக்ஸிங் வீரர் உயிரிழப்பு – சென்னையில் நடந்த 'ஷாக்' சம்பவம்

சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் விளையாட்டு போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் மஹாராஷ்டிரா மாநில அணியைச் சேர்ந்த கேசவ் முடேல் என்பவர் தாக்கியதில் அருணாச்சல பிரதேச வீரர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த … Read more

கணியாமூர் மாணவி மரண வழக்கில் பள்ளித் தாளாளர், ஆசிரியர்கள் எதற்காகக் கைது? – நீதிபதி வினா

கணியாமூர் மாணவி மரண வழக்கில் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காகக் கைது செய்யப்பட்டனர் என்பதற்குக் காரணம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜாரக உத்தரவிட நேரிடும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்த சின்னசேலம் காவல்துறையினர் பள்ளித் தாளாளர், செயலர், முதல்வர், ஆசிரியர்கள் என 5 பேரைக் கைது செய்து  சிறையில் அடைத்தனர். 5 பேரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி … Read more