'தண்டோரா' பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: ‘தண்டோரா’ பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. “தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.” என தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியாளர்களை கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தார். இந்த தடைக்கு வரவேற்புகள் கிடைத்தன. … Read more

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மெரினாவில் யானை சிலைகள் அமைப்பு

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் யானைகள் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் பெரிதும் பொதுமக்களையும் சிறுவர்களையும் கவர்ந்துள்ளது. உண்ணிச் செடிகள் என்ற அந்நிய களைத் தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட யானை சிலைகள் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே வைக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை செயலாளர் சுப்ரியா ஸாஹு உள்ளிட்டோர் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தனர். இந்த யானை சிலைகள் மலைவாழ் பழங்குடி … Read more

ஊராட்சிகளில் மக்கள் பிரநிதிகள் சாதியப் பாகுபாடின்றி தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்க: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: கிராம ஊராட்சிகளில் மக்கள் பிரநிதிகள் சாதியப் பாகுபாடின்றி தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் … Read more

’சிலை சொல்லும் கதை’ – மூங்கில் வனத்தில் யானைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

41 தமிழ் செவ்விலக்கியங்களில் இருந்து யானைகள் குறித்த 763 சான்றுகளை ஆவணப்படுத்தியுள்ள தென்னன் மெய்மன், இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மூங்கில் வனம் என அழைக்கப்படும் நெல்லையப்பர் கோவிலில் ‘சிலை சொல்லும் கதை’ என்ற பெயரில் யானைச் சிற்பங்கள் பின்னணி குறித்தும், அதன் வாழ்க்கைமுறை குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நேரடி பாடமும் ஓவிய பயிற்சியும் வழங்கினார். உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மூங்கில் வனம் என்று அழைக்கப்பட்ட திருநெல்வேலியில் வேணுவன நாதர் என்ற வரலாற்று … Read more

சாந்தி தியேட்டர் சொத்துகள் விற்பனை? சிவாஜி மகள்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவாஜி மகள்கள் சாந்தி திரையரங்கு சொத்துகளை விற்பனை செய்ய தடை கோரி தாக்கல் செய்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் மகள்கள், சாந்தி, ராஜ்வி ஆகியோா் தங்கள் தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனா். இந்த வழக்கில், எங்கள் தந்தை நடிகர் சிவாஜி கணேசன் சுயமாக சம்பாதித்த ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளை எங்கள் சகோதரா்கள் ராம்குமாா், பிரபு ஆகியோா் … Read more

சட்டவிரோத கல் குவாரிகள் வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் சிக்கி பலியாகினர். இதனால் மாவட்டத்தில் குவாரிகள், கிரசர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது ‌  இந்த நிலையில், நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பில், முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரால் விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்து டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க … Read more

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசியக் கொடி பேரணி: உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: குமரி மாவட்டத்தில் களியாக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசியக் கொடியுடன் வாகன பேரணி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் பகுதியைச் சேர்ந்த விஷூ, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ஆகஸ்ட் 15-ம் தேதி மதியம் 2 மணிக்கு களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வரை இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் கல்லூரி மாணவர்கள் நூறு பேர் பங்கேற்கின்றனர். இந்த பேரணிக்கு … Read more

செங்கல்பட்டு அருகே வழிப்பறி – தடுத்த காவலருக்கு அரிவாள் வெட்டு.!

செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த காவலரை அரிவாளால் திருடர்கள் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் அருள் என்பவர் சாதாரண உடையில் பணியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சுங்கச்சாவடி அருகே வந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பெற முயன்றுள்ளனர். அப்போது அதைக்கண்ட காவலர் அருள் அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது திருட்டில் ஈடுபட்ட இருவர்களில் … Read more

‘ஜெய்பீம்’ குளஞ்சியப்பன் லுங்கியுடன் புகார் அளிக்க வந்ததால் சென்னை காவல் ஆணையரகத்தில் அனுமதி மறுப்பு

சென்னை: புகார் அளிக்க லுங்கி கட்டிக் கொண்டு சென்னை காவல் ஆணையரகம் வந்த ‘ஜெய்பீம்’ குளஞ்சியப்பனை காவல் துறையினர் உள்ளே அனுமதி மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினசரி பொதுமக்கள் பலர் புகார் அளிக்க வருவது வழக்கம். இன்று ‘ஜெய்பீம்’ கதையின் நிஜ ராஜாகண்ணுவின் உறவினர் குளஞ்சியப்பன் புகார் அளிக்க காவல் ஆணையரகம் வந்தார். அப்போது அவர் லுங்கி கட்டியிருந்த காரணத்தால், அவரை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனைத் … Read more

பழமொழி கூறிய தமிழிசை..!- ஏன் இந்த பழமொழி..?

புதுச்சேரியை பொறுத்தவரையில் ஆளுநரின் அதிகாரம் சற்று அதிகமாகவே இருக்கும். சில நேரங்களில் இது முதலவருக்கும் ஆளுநருக்கும் அதிகார போட்டியாகவும் இது மாறியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை திடீரென ஒரு பழமொழியை கூறியது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அரசியலில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆளுநரை நோக்கியே அம்புகள் வீசப்படுகிறது, அதிகம் பழுத்த மரம் தான் கல்லடி படும் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்தை … Read more