டீ மேட் பால் விலை லிட்டருக்கு ரூ 60; விஞ்ஞான ரீதியாக விலை உயர்த்தும் ஆவின்: முகவர்கள் சங்கம் கண்டனம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விஞ்ஞான ரீதியாக பால் விற்பனை விலையை உயர்த்தும் ஆவினின் முடிவு கண்டிக்கத்தக்க செயல் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின்  நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் ஆவின் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (ஆரஞ்சு கலர் பாக்கெட்) விநியோகத்தை குறைத்து “மேலிடத்து உத்தரவு” என்கிற பெயரில் சென்னையில் … Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆக.27-ல் பள்ளிகள் செயல்படும்: அரசு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை (ஆக.27) பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 28-ம் தேதி, … Read more

ஒண்டிவீரனை சுமக்கும் பாஜக; பதிலடிக்கு தயாரான சமூகம்!

இந்தியா 75வது சுதந்திர தினத்தை அமுதப் பெருவிழாவாக கொண்டாடி மகிழும் இந்த நேரத்தில் தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட ஒண்டிவீரன் என்கிற அருந்ததியர் சமுதாய போராளியின் வீரமரணத்தின் 250வது ஆண்டை நினைவு தினத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. ஒண்டிவீரனை பாஜக திடீரென தூக்கி பிடித்திருப்பதன் காரணம் அருந்ததியர்கள் மீது இருக்கும் பாசமா? என்றால் அது தான் இல்லை என்று அரசியல் நோக்கர்கள் தெளிவாக கூறுகின்றனர். கடந்த தேர்தலுக்கு முன்பு … Read more

பணம் இருந்தால்தான் பாஜகவில் பதவி – முன்னாள் மாநில நிர்வாகி பரபரப்பு பேட்டி

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மைதிலி வினோ இவர் பாஜகவில் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்து வந்தார். இன்று அக்கட்சியின் கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கட்சி அடிப்படை பொறுப்பில் இருந்து மைதிலி வினோவை நீக்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து மைதிலி வினோ செய்தியாளர்களிடம் பேசுகையில், 1999ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து இக்கட்சியில் மகளிர் அணி இல்லாத காலக்கட்டத்திலிருந்து நான் வந்திருக்கிறேன்.தாமரை சின்னம் என்னவென்றே  தெரியாதபோது மக்களிடம் கொண்டு சென்றவள் நான். தற்போதைய  … Read more

புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சி

சேலம்: சேலம் மாவட்டம் வாழைப்பாடி அருகே புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடன் நல விடுதியில் தங்கியிருந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சித்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையைல் கடந்த 4 நாட்களாக விடுமுறை தினத்தையொட்டி அவர்கள் ஊருக்குச் செல்வதாக விடுதியில் தெரிவித்து விட்டு அவர்கள் நண்பர்கள் வீட்டிற்கு சென்று அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு மாணவிகளை காணவில்லை என தகவல் … Read more

புதுக்கோட்டை: பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள்,பொதுமக்களை சுற்றுச்சுற்றி கடித்த கதண்டு!

புதுக்கோட்டை மாவட்டம் மாந்தாங்குடியில் கதண்டு கடித்து இரண்டு குழந்தைகள், 4 மாணவ மாணவிகள் உள்ளிட்ட 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் உள்ள மாந்தான்குடியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்திலிருந்து வந்த கதண்டுகள் இரண்டு குழந்தைகள் நான்கு மாணவ மாணவிகள் உள்ளிட்ட 13 பேரை கடித்துள்ளது. இதில், காயமடைந்த 13 பேரும் உடனடியாக 108 … Read more

நகைகளை விட உங்கள் புன்னகை மிளிர்கிறது : சித்தி 2 நாயகியின் வைரல் போட்டோஸ்

சன்டியின் சித்தி 2 சீரியல் மூலம் பிரபலமான நடிகை ப்ரீத்தி சர்மா தற்போது வெளியிட்டுள்ள மாடலிங் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது வட இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி சர்மா. கடந்த 2018-ம் ஆண்டு கலர்ஸ் தமிழின் ஒரு கதை பாடட்டுமா சார் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், தொடர்ந்து திருமணம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சன்டிவியின் சித்தி 2 சீரியலில் லீடு ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த … Read more

பாலியல் புகாருக்கு உள்ளன அரசு கல்லூரி பேராசியருக்கு மீண்டும் பணி – போர்க்கொடி தூக்கிய சக பேராசிரியர்கள்.!

திருச்சியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஒருவர் முதுகலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தமிழக முதலமைச்சர் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.  இதனையடுத்து, கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரனை கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை உயர்கல்வித்துறை இயக்குனருக்கு … Read more

கோவளம் எம்3 திட்ட மழைநீர் வடிகால் பணிகள்: ஆக.25-ல் கருத்து கேட்புக் கூட்டம்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் எம்3 திட்ட மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி இடையே, 270 கோடி ரூபாய் மதிப்பில், கோவளம் பேசின் திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கு, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கிறது. பேசின் திட்டம், எம்1, எம்2, எம்3 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்: கலெக்டருக்கு 10 நாள்கள் டைம்!

மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்கவும், பள்ளியை திறக்கவும் அனுமதிக்கோரி அளிக்கப்பட்ட மனு மீது பத்து நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு எவரும் நுழைய கூடாது என மாவட்டம் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. … Read more