பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவு

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த மனுவில், அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், … Read more

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் எதிரொலி: தோவாளையில் பூக்கள் ஆர்டர் குவிகிறது

ஆரல்வாய்மொழி: கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு பெற்றதாகும். கேரளாவை ஒட்டிய குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலங்கள் என்று ஓணம் பண்டிகை களைகட்டும். இந்தாண்டு ஓணம் பண்டிகையானது வரும் 31ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓணத்தில் மிகவும் சிறப்பு பெற்றது அத்தப்பூ கோலம். இதற்கு பூக்கள் தான் பிரதானம். இதற்கான மலர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து தான் கேரளாவுக்கு முழுவதுமாக … Read more

அதிமுக தலைமையகத்தில் கலவரம் செய்தது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

அதிமுக தலைமை அலுவலக கலவரச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல அ.தி.மு.க-வினர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு … Read more

களத்தில் எதிரிகள்… வெளியில் நண்பர்கள்… வைரலாகும் கோலி – பாபர் அசாம் வீடியோ!

 Virat Kohli – Babar Azam Tamil News: ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. இதற்கான இந்திய அணி தூபாயில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தியா அணி முதல் போட்டியில் … Read more

ஏமாற்றமே மிச்சம் : பாதுகாக்கத் தவறிவிட்ட ஒப்பந்தம் –  அதிர்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட பாதுகாக்கத் தவறிவிட்ட இந்த ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுகள் … Read more

மதுரை | முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் தாமதமாவதாக அதிமுக குற்றச்சாட்டு – மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

மதுரை: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் தாமதமாகி வருவதாக அதிமுக குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் விரைந்து சென்று பார்வையிட்டார். மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி 14 லட்சத்து 68 ஆயிரத்து 989 மக்கள் வசித்தனர். தற்போது மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெளியூர்களில் இருந்து தினமும் மதுரைக்கு வந்து செல்லும் பயணிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 20 லட்சத்தை தாண்டிவிடும். தற்போது மாநகராட்சியின் குடிநீர் … Read more

அது கலைஞர் பாணி… இது என் பாணி… ஸ்டாலின் பஞ்ச்!

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை: ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் மூன்றாவது சிலையை நான் இப்போது திறந்து வைத்துள்ளேன். இதே ஈரோட்டில் மூன்று அல்ல, 300 சிலைகளைக் கூட வைக்கலாம். அந்த அளவுக்கு கருணாநிதியின் ஊனோடும், உயிரோடும் ஈரோடு கலந்து இருக்கிறது. பெரியார் பிறந்த இடம் மட்டுமல்லாது, கருணாநிதி சமூகபோராளியாக உருவான இடம் ஈரோடு. … Read more

வீடு தேடி பெண்களுக்கு வேலை வாய்ப்பு… முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பு

‘மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை’ என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, பெண்கள் தங்களின் சொந்த உழைப்பால் முன்னேறுவதே அவர்களின் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், சேலத்தில் அமைந்துள்ள சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பெண்கள் தங்களை பொருளாதாரத்தில் முன்னேற்றிக்கொள்ள சுயதிறன் வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர்.  சேலத்தை சேர்ந்த தொழிலதிபர், அரசியவாதி ஆர். பார்த்தசாரதி என்பவர் நடத்திவரும் சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், பெண்களுக்கான பொருளாதார சுயமேம்பாடு வேலைத்திட்டத்தை நடத்தி … Read more

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக சார்பில் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்தார். கலைஞரின் வெண்கல சிலை அருகே திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி  வைத்தார். கலைஞரின் சிலையை திறந்து வாய்த்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; தந்தை சிலையை திறந்து வைக்கும் மகனாக இல்லாமல், தலைவர் சிலையை திறந்து வைக்கும் தொண்டனாக வந்துளேன். ஈரோட்டுக்கும், கலைஞருக்கும் ஏராளமான தொடர்புகள் … Read more

வித்தியாசமான திரவப் பொருளால் புதுப்பெண் எரித்துக் கொலை?..திருமணமான 4 மாதங்களில் அதிர்ச்சி!

சீர்காழி அருகே வரசட்சணைக் கொடுமையால் திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கரைமேடு கிராமத்தில் வசிக்கும் மோகனசுந்தரம் – உஷாராணி ஆகியோரின் மூத்த மகள் தர்ஷிகா( 26). இவரை சீர்காழி வட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாயகிருஷ்ணன் – ஜெகதாம்பாள் தம்பதியினர் மகன் கார்த்தி என்கிற பாலமுருகனுக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் சீர்காழியில் உள்ள திருமண … Read more