திராவிடம் பற்றிய ஆளுனர் பேச்சில் பீதி வெளிப்படுகிறது: டி.ஆர் பாலு கண்டனம்

தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ஆளுநரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன. தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் … Read more

13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி – பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில்  பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப் படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்காலிக ஆசிரியர்களாக இப்போது நியமிக்கப்படுபவர்கள், எதிர்காலத்தில் பணி நிலைப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், அப்போதும் இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படும் என்பதால் இது போக்க முடியாத சமூக அநீதியாக அமைந்து விடக்கூடும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை     இதுகுறித்து இன்று … Read more

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்கும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!

தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் எனக் கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் … Read more

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு; 145 தடை உத்தரவு அமல்

சென்னை: சென்னை – ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்குச் செல்லாமல் தலைமைக் கழகத்திற்குப் சென்றார். ஓபிஎஸ் வாகனம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வந்தபோது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை முன்னேறவிடாமல் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் … Read more

ஓபிஎஸ் தர்ணாவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து தாக்குதலும் பதற்றமும் நீடித்து வந்ததை தொடர்ந்து, அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று சீல் வைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்க, விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக அலுவலகத்தில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அங்கு விசாரணை நடத்தற்காக கூறி கிண்டி கோட்டாட்சியர் சாய்வர்தினி நேரில் சில மணி நேரங்களுக்கு முன் ஆய்வு செய்தார். அவருடன் வருவாய் கோட்டாட்சியர் ஜெகஜீவன்ராமும் ஆய்வு செய்தார். இவர்கள் ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓபிஎஸ் … Read more

இந்த படத்துல மறைந்திருக்கும் பெங்குயின் பறவை; 20 நொடிகளில் கண்டுபித்தால் நீங்க ‘கிரேட்’தான்!

Optical illusion game: “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்,நீ காணும் தோற்றம், உண்மை இல்லாததுஅறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற எம்.ஜி.ஆருக்காக கவிஞர் மருதகாசி எழுதிய தத்துவப் பாடல் எந்த அளவுக்கு வாழ்க்கைக்கு பொருந்துமோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி … Read more

#Breaking : ஓ பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை தட்டிச் சென்ற முக்கிய புள்ளி.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. அதில், நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது … Read more

விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட திட்டங்கள்: அனுராக் தாக்கூர் அறிமுகம்

புதுடெல்லி: இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், தேசிய நலன்கள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிமுகப்படுத்தினார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம், விளையாட்டுத் துறையின் திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றை இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அனுராக் … Read more

“நான் இபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்குகிறேன்”- ஒபிஎஸ் தடாலடி!

அதிமுகவில் மாறி மாறி நீக்கும் படலம் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ்-ஐ நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை தான் நீக்குவதாக அறிவித்து ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகத்தில் வைத்து பேட்டியளித்துள்ளார். முன்னதாக ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் எடுத்த அதிமுக பொதுக்குழுவில், ஈபிஎஸ் உரையாற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், “நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறினார். இந்நிலையில் பொதுக்குழுவில் பங்கு கொள்ளாத ஓபிஎஸ், அதிமுக தலைமை கழகத்துக்கு சென்றிருந்தார். அங்கு … Read more

அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கம்: பொதுக் குழுவில் சிறப்பு தீர்மானம்

அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து, ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி, சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் தொடங்கியது. இதில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RFID தொழில்நுட்பத்துடன் அதிநவீன அடையாள அட்டை வழங்கப்பட்டது. முன்னதாக, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறும் … Read more