காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய காதலன் கைது – உடந்தையாக இருந்த நண்பருக்கும் சிறை

ஓமலூர் அருகே காதலித்த பெண்ணை சாதிப் பெயரை சொல்லி திட்டியதுடன் தாக்குதல் நடத்திய காதலனை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரும் கைதாகியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையில் மானத்தாள் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவரது 26 வயது மகள் பூங்கொடி, தொளசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 … Read more

ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் ஷாக்

தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன்கால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரணை நடத்தியதில் இந்த தகவல் புரளி என்று தெரியவந்துள்ளது. சமீப காலமாக பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன்கால் வருவதும், இந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என்று தெரியவந்ததும் போன் … Read more

இருசக்கர வாகனம் மோதி 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வண்ணான். இவருடைய மகள் நிகிதா (12). இவர் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிகிதா பள்ளி முடிந்து வீட்டிற்கு வருவதற்காக சோமராசம்பேட்டை பேருந்து நிலைய பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத … Read more

“வரம் தரும் சாமி… தடுக்கும் பூசாரி…” – நிதி விவகாரத்தில் புதுச்சேரி பேரவையில் ஆளும் என்ஆர் காங். எம்எல்ஏ புலம்பல்

புதுச்சேரி: “சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத நிலைதான் புதுச்சேரியில் இருக்கிறது” என்று ஆளும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசினர். இதில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கேஎஸ்பி ரமேஷ் பேசுகையில், “விளையாட்டுக்கு தனி துறை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய விளைாயாட்டுகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கிராமப்பகுதிகளில் மட்டுமல்லாது நகரப்பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் … Read more

பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கு: 2 பெண்களுக்கு ஜாமீன்

ஜம்மு காஷ்மீரில் கடந்த 11ஆம் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரையில் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, தமிழக நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை விமான நிலையம் நோக்கி வந்தபோது காரை இடை … Read more

குடிநீருக்காக ஏங்கும் பிதிரெட்டி கிராம பழங்குடி மக்கள் – தாகத்தைத் தணிக்குமா தமிழ்நாடு அரசு ?

4ஜியின் வேகம் பத்தவில்லை என்று 5ஜி தொழில்நுட்பத்துக்கு தாவும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் கடைக்கோடி கிராமங்களில் குடிநீருக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்னும் உண்மையை உரைக்கச் சொல்லியிருக்கிறது பிதிரெட்டி பழங்குடி கிராமம்! கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பிதிரெட்டி அருகே ஆள் அவரமற்று அமைதியாக கிடக்கிறது இருளப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் 20 பழங்குடி சமூக குடும்பlதினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கு வசித்து … Read more

குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியம் அந்தரந்த விலக்கில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில்  ஒன்றியத்திற்குட்பட்ட அரசகுளம், வேளாங்குளம், அணியவயல், அந்தரந்தல்,  சிவந்தரேந்தல், வழியாக சிலுக்கபட்டி செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான  நிலையில் உள்ளது. மேலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத  அளவிற்கு சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் இப்பகுதியில் இயக்கப்படும் தனியார் மினி பேருந்து அடிக்கடி … Read more

மதிமுகவினர் தொடுத்த வழக்கு… சீமான் விடுதலை

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கிலிருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் ஒரே நேரத்தில் வந்தபோது அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் வந்திருந்தனர். அப்போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க வை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை … Read more

புதிய விமானநிலையம் வருவதை வரவேற்கிறோம்! அதே நேரத்தில்…..! என்ன சொல்ல வருகிறார் அன்புமணி!

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைகிறது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விமான நிலையம் அமைவதால் பாதிக்கப்படும் பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களை சந்தித்து கருத்து கேட்பு கூட்டத்தினை நடத்தினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.   பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ‘சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்துர் மற்றும் அதன் சுற்றியுள்ள … Read more

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா: இன்று முதல் செப்.11 வரை 750 சிறப்பு பேருந்துகள்

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (ஆக.25) முதல் செப்.11-ம் தேதி வரை 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் ஆக.25-ம் தேதி முதல் செப்.11-ம் தேதி … Read more