கனல் கண்ணன் கைது ஆவாரா? முன்ஜாமின் மனு தள்ளுபடி

Kanal Kannan anticipatory bail plea dismissed in Periyar statue case: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்துக்கள் கூறிய கனல் கண்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கனல் கண்ணன் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதையும் படியுங்கள்: லாரிகள் … Read more

பெற்றோர் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி லட்சுமணன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விமல்(18) பொன்னேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விமல், படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விமல் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி … Read more

போதைப் பொருள் தடுப்பில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பதில் கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். போதைப் பொருள் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தின் தொடக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் … Read more

அதிமுகவில் அடுத்த குறி இவர்தான்… காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்க!

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 2011, 2016 ஆகிய இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

எந்த கொம்பனாக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்: ஸ்ரீமதி தாயாரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

மாணவி ஸ்ரீமதியின் தாயாரை அவரது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சந்தித்து ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து  மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மாணவி ஸ்ரீமதியின் தாயாரை அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் … Read more

அண்ணாசாலை, பெரம்பூர், தாம்பரம்.. சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையின் அண்ணாசாலை, பெரம்பூர், தாம்பரம், ஐடி காரிடார், தரமணி, போரூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாசாலை: ஃப்ளவர் பஜார் ராட்டன் பஜார், என்எஸ்சி போஸ் … Read more

கோவையில் பரபரப்பு.. போஸ்டர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க – திமுகவினரிடையே தள்ளுமுள்ளு.!

கோவை – அவிநாசி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தூண்களில் அனைத்து கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில் பொது இடங்கள் மற்றும் தூண்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.  இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட … Read more

பெரியபாளையம் கோயில் | காணிக்கையாக வந்த 91 கிலோ தங்க கட்டிகள் வங்கியில் முதலீடு – பத்திரத்தை நிர்வாகிகளிடம் வழங்கினார் முதல்வர்

சென்னை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட 91 கிலோ தங்கத்தை உருக்கி, தங்கக் கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. இதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வந்த பலமாற்று தங்க நகைகள் உள்ளிட்டவற்றில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் … Read more

கரூரில் கழிவுநீரில் கலவையை கொட்டி கால்வாய் அமைக்கப்பட்டதா? -அதிகாரிகளின் விளக்கம் இதுதான்!

கரூரில் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு வீதியில் கால்வாய் நீரிலேயே கலவையை கொட்டி தளம் அமைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நடந்தது என்ன என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணியின் போது கழிவுநீர் கால்வாயிலேயே கலவையை கொட்டி சாக்கடை தளம் அமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து அதிர்ச்சி … Read more