தமிழக அரசு வழியில் சென்னை மாநகராட்சி: பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஒப்புதல் – சிபிஎம் எதிர்ப்பு

சென்னை: தமிழக அரசு போலவே சென்னை மாநகராட்சியும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னைப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் கணினி உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், பாதுகாவலர்கள், ஆயாக்களை நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இது … Read more

தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு.. ஆம்பூர் பொறியியல் மாணவரிடம் 9 மணி நேரம் விசாரணை!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களுக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு அளித்து வந்ததாக கல்லூரி மாணவர் கைதுசெய்யப்பட்டு, அவரிடம் 9 மணி நேரத்திற்கு மேலாக மத்திய உளவுத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருப் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அனாஸ் அலி. இவர், இன்று அதிகாலை மத்திய உளவு துறை மற்றும் சிறப்பு புலனாய்வு துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் … Read more

“அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் பங்கேற்பார்” – ஓபிஎஸ் கடிதம்

சென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. … Read more

’கீழே போட்டாலே சுக்கு நூறாக உடைகிறது’.. தரமற்ற செங்கலால் அரசுப்பள்ளி கட்டப்படுவதாக புகார்

களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தரம் இல்லாத செங்கல் கொண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.  நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 லட்ச ரூபாய் செலவில் புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை பொதுப்பணித்துறையினர் தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்து அந்த ஒப்பந்தம் மூலமாக பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது கீழ்த்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. இந்த … Read more

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கு போட்டு தற்கொலை.!

கோவை மாவட்டத்தில் தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் காந்திமாநகரை சேர்ந்தவர் அர்ஜுன்(28). இவர் கீரநத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பால் உயிரிழந்து உள்ளார்.  இதனால் அர்ஜுன் மனவேதனையில் இருந்து வந்த நிலையில், வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், பீளமேடு … Read more

அயனாவரம் சம்பவம் | விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மரணம்: கொலை வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தும்படி சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் துறையில் “காவல் துறையின் நண்பனாக” அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய நித்தியராஜை கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி ஐ.சி.எஃப். காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமலிங்கம் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார். இதன்பின்னர் அவர் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்பு … Read more

சிவகங்கை: மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

மானாமதுரை அருகே மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சூழி ஒன்றியத்துக்கு உட்பட்ட முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் என்ற அயங்காளை (52). இவர், தனது மகன்களான அஜித் (25), சுகந்திர பாண்டி (23) ஆகியோருடன் சிவகங்கை மாவட்ட எல்லை மாரனாடு கிராமம் அருகே முத்துகுமார் என்பவரின் வயல்வெளி பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பன்றிக்கு வைத்த மின் கம்பியை மிதித்ததில் மூவரும் சம்பவ … Read more

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளைய தினம் ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழையும், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் … Read more

புதுச்சேரி தியாகச்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகையை அகற்ற கோரி போராட்டம்: 60 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைக்கப்பட்டு வரும் தியாகச்சுவரில் இருந்து சாவர்க்கர் பெயர் பலகையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக அமைப்புகளைச் சேர்ந்த 60 பேரை போலீஸார் கைது செய்தனர். நாட்டின் 75-வது சுதந்திர தின பெருவிழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் சக்ரா விஷன் இந்தியா அமைப்பு சார்பில் தியாகச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தியாகச்சுவரில் கடந்த 27-ம் தேதி சாவர்க்கர் பெயர் பலகையை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதித்தார். “சாவர்க்கர் சுதந்திரப் … Read more

நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்திய தலைவர்களின் படத்தை தனது ரத்தத்தால் வரைந்த பெண்

சுதந்திரப் போராட்ட தலைவர்களை நினைவுகூறும் விதமாக தன்னுடைய ரத்தத்தால் அவர்களுடைய உருவபடங்களை வரைந்து பெண் மரியாதை செலுத்தினார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாச்சல புதூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுசீலா. கணவனை இழந்து தனது மகனுடன் வசித்து வரும் இவர், தாரமங்கலம் பகுதியில் வளையல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தேசத் தலைவர்களை போற்றும் விதமாக காந்தி, நேதாஜி, பாரதிதாசன், வ.உ.சிதம்பரம், அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் படங்களை, தன்னுடைய ரத்தத்தினால் வரைந்துள்ளார். இதற்காக முறையாக காவல்துறையில் … Read more