சீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவது பேரவசியமாகிறது: சீமான்

சென்னை: “யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்கிறேன். சீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்ற தமிழக அரசு விரைவாக செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. “தமிழக வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்றக்கோரி தொடரப்பட்டப் பொது வழக்கொன்றில், விரைவாக அவற்றிற்கென செயல்திட்டத்தை வகுக்க வலியுறுத்தியும், யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் … Read more

’அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர்’.. பாஸ்போர்ட் மோசடி வழக்கில் நீதிபதி பாராட்டு மழை!

பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுரேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “2013-ம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். … Read more

களத்தில் உயிரைவிட்ட விமல்ராஜ்! 3 லட்சம் கொடுத்து, உருகவைத்த மானடிக்குப்பம் மக்கள்! 

மானடிக்குப்பத்தில் நடந்த மாநில அளவிலான கபாடி போட்டியில் பெரிய புறங்கனி கிராமத்தை சேர்ந்த கபாடி வீரன் விமல் ராஜ் ஆடுகளத்திலேயே உயிரிழந்தார்.  களத்தில் உயிரைவிட்ட மாவீரன் விமல் ராஜ் குடும்பத்தினருக்கு போட்டி நடத்திய ஊரான மானடிக்குப்பம் ஊர் பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடி ரூபாய் 3,00,000 நிதி திரட்டி பண உதவியாக வழங்கி உள்ளனர்.  இந்த மிகப்பெரிய உதவியினை செய்த அக்கிராம நல்உள்ளங்களுக்கு அனைவரும் நன்றி கூறி வருகிறார்கள். தமிழக அரசு தரப்பில் ரூபாய் மூன்று … Read more

பிரதமர் மோடியின் இரண்டு நாள் சென்னை பயண விவரம்

சென்னை: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பயணத்திட்டம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாளை (ஜூலை 28) பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு … Read more

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மண்ணில் புதைப்பு – பெற்ற தாயே செய்த கொடூரச்செயல்

வலங்கைமான் அருகே பிறந்து இரண்டே நாட்களான பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, வேடம்பூர் தோப்புத் தெரு பகுதியில் மாரியப்பன்- ரேவதி தம்பதியருக்கு ரேணுகா (வயது 33), ரேகா (வயது30), மணிகண்டன் (வயது20), சினேகா (வயது18) உள்ளிட்ட மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த பெண்ணான ரேணுகாவிற்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு … Read more

முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட் வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு காவல் துறையில் 2006 – 2022 காலகட்டத்தில், முன்னாள் டிஜிபியும் தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் ஜாஃபர் சேட். பெசண்ட் நகர் கோட்டம் திருவான்மியூர் புறநகர் பகுதியில், இவரது மகள் மற்றும் மனைவி பெயரில், நிலம் ஒதுக்கீடு … Read more

மாமல்லபுரத்தில் செஸ் விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செஸ் விளையாடினார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தப் பணிகள் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மாலை மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள … Read more

ஏலச்சீட்டு நடத்தியவர் எடுத்த விபரீத முடிவு.. பணத்தை பறிகொடுத்து தவிக்கும் 600 பேர்

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதால் 800 பேர் ஏமாந்து போயுள்ளனர்.  திருச்சி பாலக்கரை எடத்தெருவில் பொன்மகள் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கண்ணன் என்பவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்டோர் அவரிடம் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சீட்டுக்கான தொகை செலுத்தியுள்ளனர். 700 பேர் 500 ரூபாய் சீட்டு கட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அன்று ஒரு கோடி ரூபாய் சீட்டு … Read more

வெல்லமண்டி நடராஜன் மீது சி.பி.சி.ஐ.டி விசாரணையா? மாநகராட்சி கூட்டத்தில் ஒலித்த குரல்

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் கடந்த 26-ம் தேதி மாநகராட்சி காமராஜர் மன்றத்தில் உள்ள லூர்துசாமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள பல்வேறு குறைகள் குறித்தும் அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர். திமுக மேயர் அங்கமாக இருக்கும் திருச்சி மாநகராட்சியில் திமுக வார்டு உறுப்பினர்களே மாநகராட்சிக்கு எதிரான … Read more

நள்ளிரவில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி.. அலாரம் ஒலித்ததும் தப்பியோடிய கொள்ளையர்கள்.!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, நள்ளிரவில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்று, எச்சரிக்கை அலாரம் ஒலித்ததும் தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கச்சிராயன்பட்டி கிராமத்தில் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள இந்த வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.  நள்ளிரவில் வங்கிக்கு வந்த கொள்ளையர்கள், முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அச்சமயம் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையடிப்பதைக் கைவிட்டு கொள்ளையர்கள் தப்பிய நிலையில், வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பியது.     … Read more