ஆதார் அப்டேட்… ஆளில்லையே… போஸ்ட் ஆபிஸ் பரிதாபங்கள்!

அடிப்படை ஆவணம்: இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் அடிப்படை ஆதாரமாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. பொதுமக்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமில்லாமல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகள் நிதியுதவியை பெறுவதற்கும், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் பயனாளிகள் தங்களது வங்கி சேமிப்பு கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டியது அவசியமாகிறது. இதேபோன்று வருமான வரி கணக்கு தாக்கலுக்கும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. மேலும் ரேஷனில் பொருட்களை பெறுவதில் தொடங்கி … Read more

’உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓபிஎஸ்’ ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை பல்லவன் இல்லம் அருகே மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது, வீரர்களுடன் கால்பந்தாடி மகிழ்ந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமியின் அதரவாளரான இவர், ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். ஜெயக்குமார் பேசும்போது, ” பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை. … Read more

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை … Read more

'ஒரு முறைக்கு மேல் கிடையாது' – மறுத்த பாலியல் தொழிலாளியிடம் அடம் பிடித்த உதவி பேராசிரியர்!

ஒரு முறைக்கு மேல் உறவு கிடையாது ஸ்டிரிக்ட்டா சொல்லிய பாலியல் தொழிலாளியிடம் அடம் பிடித்த உதவி பேராசிரியரை போலீசில் சிக்க வைத்த பெண். சென்னை வேளச்சேரி தரமணி 100அடி சாலை, சீத்தாபதி நகர் விரிவில் இயங்கி வரும் சாய் ரமேஷ் கெஸ்ட் ஹவுஸில் இருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் போலீசில் ஆபத்தில் சிக்கியிருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதும், வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த நபரையும், இரண்டு … Read more

திமுக தலைவராக 5ஆவது ஆண்டு தொடக்கம்: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 5ஆவது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவராக அவர் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 5ஆவது ஆண்டு தொடங்குகிறது. முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்ற … Read more

சோளிங்கரில் 142 மி.மீ அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழை: வேலூரில் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் அதிகபட்ச அளவாக சோளிங்கரில் 142 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வேலூரில் சம்பத்நகர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிபட்டனர். தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தொடங்கி நள்ளிரவு வரை இடியுடன் கூடிய பரவலான கனமழை பெய்து வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் … Read more

'டாஸ்மாக் மூடும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடணும்' – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

“டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பை விநாயகர் சதுர்த்தி அன்று முதலமைச்சர் வெளியிட வேண்டும்,” என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார். ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: இரண்டு ஆண்டு கொரோனா காலத்திற்கு பின் தமிழகம் முழுவதும் இந்தாண்டு ஒரு … Read more

ஓபிஎஸ்ஸின் சித்துவிளையாட்டில் ஜெயலலிதாவே தப்பவில்லை – ஆர்.பி. உதயகுமார்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அதிமுகவை 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார். அதன் பின்பு 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா வந்து முதலமைச்சரானார். 2001ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது, தென் தமிழ்நாட்டில் இருந்து ஒரு சுயநலத்தின் அடையாளமாக அத்தனை சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வம் வந்த பிறகு ஜெயலலிதாவுக்கே ஆபத்து வந்தது, சுயநலத்தின் மறு உருவமாக இருக்கிற பன்னீர்செல்வம் அன்றைக்கு மீண்டும் முதலமைச்சராக வருகிறார் … Read more

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வைகை அணையில் இருந்து 2,000 கன அடி நீர் திறப்பு

மதுரை; தேனி வைகை அணையில் இருந்து நீர்திறந்து விடப்பட்டதால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பணிக்கு அணையில் இருந்து நீர்திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைகை அணையில் இருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை அளிக்கப்பட்டது.

கோவையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்கள், மேம்பாலங்களின் கீழ் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ய தொடங்கியது. விடிய, விடிய பெய்த மழை நேற்று காலை ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு கன மழை மீண்டும் கொட்டித்தீர்த்தது. இதனால், அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், கிகானிக் பாலம் உள்ளிட்ட பாலங்களின் கீழ் பகுதிகளில் … Read more